Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமிர்தலிங்கத்தை ஜே.ஆர் நீக்கியது போன்ற நிலை விக்னேஸ்வரனுக்கு வரக்கூடாது! – இராதாகிருஷ்ணன் எம்.பி கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தை ஜே.ஆர் நீக்கியது போன்ற நிலை விக்னேஸ்வரனுக்கு வரக்கூடாது! – இராதாகிருஷ்ணன் எம்.பி கோரிக்கை. 

[Friday, 2014-03-14 10:11:34]
radakrishnan-140314-150.jpg

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அமிர்தலிங்கத்தை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியதைப் போல் இந்த அரசாங்கம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வீட்டிற்கு அனுப்பி விடாமல் அவருடைய பிரச்சினைகளை நுணுக்கமாக கையாண்டு ஜனநாயக ரீதியில் அவருக்கு தனது கடமைகளை முன்னெடுக்க கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹேவாஎட்ட தோட்ட பகுதிகளுக்கு கூடாரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

  

அமிர்தலிங்கத்தை அன்று எதிர்க்கட்சி பதவியில் இருந்து அகற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி வாக்கெடுப்பு நடத்திய போது மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அதற்கு சார்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் அவர் அன்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு அமைச்சராக இருந்து கொண்டே இந்த முடிவை ஜனநாயக ரீதியில் மேற்கொண்டிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் ஜனநாயக முறைப்படி எவர் ஒருவர் ஒரு பதவிக்கு தெரிவு செய்யப்படுகின்றாரோ அவரை இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தி வெளியேற்றுவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு செயலாகும் அதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

அது போலவே இன்று வடக்கு முதலமைச்சரும் ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை வெளியேற்றுவதோ அல்லது அதற்கு சமமான செயல்களில் ஈடுபடுவதோ அல்லது அவருடைய செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதோ ஜனநாயக விரோத செயலாகவே கருத வேண்டியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் பல முறை கூறியும் இன்னும் சிவில் நிர்வாக உத்தியோகஸ்தர் ஒருவர் அங்கு நியமிக்கப்படவில்லை.

எனவே இவ்வாறான விடயங்களில் முரண்டு பிடிப்பது இரு சாராருக்கும் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். எனவே சுமுகமான ஒரு உறவை ஏற்படுத்தி அங்கு நிர்வாகத்தை முன்னெடுக்க அனைத்து விதமான வசதிகளையும் அரசாங்கம் செய்ய முன்வர வேண்டும். அதேவேளை முதலமைச்சரும் சுமுகமாக தமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க முன் வர வேண்டும் என்றார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105622&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.