Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுக்குடியிருப்பில் இரு சகோதரர்கள் பொலிசாரால் கைது! – புகைப்படத்தைக் காட்டி பிடித்துச் சென்றனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புதுக்குடியிருப்பில் இரு சகோதரர்கள் பொலிசாரால் கைது! – புகைப்படத்தைக் காட்டி பிடித்துச் சென்றனர். 
[Monday, 2014-03-17 08:08:46]
News Service
புதுக்குடியிருப்புப் பகுதியில் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். டிரக்டர் சாரதியான ஜோசப் கலாதரன் (வயது - 35), அவரது தம்பியான ஜோசப் சுதாகரன் (வயது - 31) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மதிய உணவுக்காக இவர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது அங்கு திடீரென்று வந்த பொலிஸார் புகைப்படம் ஒன்றை கலாதரனுக்குக் காண்பித்து அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த நிலையில் தனது சகோதரனை பொலிஸார் விசாரணைக்கென அழைத்துச் சென்றபோது அவரது தம்பி அதனை புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் அவரும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொடர்கின்றது வன்னி வேட்டை!

வடபுலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் மற்றும் அடாவடிகளினால் அதிர்ந்தவண்ணமுள்ளது. கிளிநொச்சியில் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் கைதுசெய்யப்பட முன்னர் மார்ச் 12 ஆம் திகதி திருமலை பாலையூற்றைச் சேர்ந்த பாலகுருபரன் தர்மிலா என்கின்ற கர்ப்பிணித் தாய் அவரது நான்கு வயது மகனுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவரது கணவரும் யாழ்ப்பாணம் ஏழாலைப்பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதேநாள் விசுவமடுவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இருபிள்ளைகள் கைதாகியுள்ளனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிள்ளைகளுள் ஒருவரான் நிதர்சனா வயது 27 பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இரு இளைஞர்கள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதல்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை அப்பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்ட யோ. கலாதரன் (வயது 34) என்பவரின் சாயலை ஒத்த புகைப்படத்தை அங்குள்ள கடைகளிலும் வீதியில் சென்றவர்களிடமும் காட்டி விசாரித்துள்ளனர். அதன் பிரகாரம் ஆனந்தபுரம் வீதியிலுள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவருக்கு கைவிலங்கைப் போட்டுக் கைது செய்து செய்தனர். இச்சம்பவத்தை தொலைபேசியில் வீடியோப் பதிவு செய்ய முயற்சி செய்த குறித்த இளைஞனின் தம்பியான யோ.சுதாகரன் (வயது 31) என்பவரையும் தமது பணிக்கு இடையூறு விளைவித்தார் எனக் கூறி அவரையும் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தனர்.எனினும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பளையில் நேற்றும் இளைஞரொருவர் கைதாகியுள்ளார். இதையடுத்து கைதானவர்களது எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியினில் மற்றுமொரு இளைஞன் நேற்று கைதான போதும் அவர் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ளான்.

இன்று காலை வரையாக வன்னியினில் எண்மர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/62776.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ககடந்தவாரத்திலிருந்து யாழ் குடாநாட்டில் இளைஞர்கள் கடத்தப்படுவது, ஜெனிவாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் பின்விளைவுகளே என அறியமுடிகின்றது.

 

அதாவது, ஜெனிவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்சிகள்பற்றிய செய்திகளை புலத்திலிருக்கும் தங்கள் உறவுகளுக்குத் தெரிவித்து அங்கு வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களைப் பிரதியெடுத்து, புலத்தில் பொதுமக்கள்மத்தியில் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க சம்பந்தப்பட்டவர் அதாவது ஏழாலையைச் சேர்ந்த ஒரு முக்சக்கர வாகன ஓட்டுனர் ஒருவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவ்வேளையில் பளைப்பகுதியில் குறிப்பிட்ட துண்டுப்பிரசுரம் வினியோகிக்கும்போது கைதுசெய்யப்பட்ட இருவரது தகவலுக்கு அமைய ஏழாலையில் முச்சக்கரவண்டிச் சாரதி கைதுசெய்யப்பட்டு அவரது கைத்தொலைபேசியியுடன் தொடர்பிலிருந்த அனைவரும் அதாவது ஏழாலைப் பகுதியில் அனேகமாக எல்லா இளைஞர்களும் புலனாய்வாளர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அனைவரது கைத்தொலைபேசியிலும் தொடர்பிலிருந்த அனைவரும் கைதுசெய்யப்படும் அபாயமும் இருக்கின்றது. ஆகவே புலம்பெயர் தேசத்தவர்கள் அனைவரும் ஒரு விடையத்தில்ல் கவனமாக இருக்கவும். தேசம்நோக்கிய போராட்டம் முனைப்புறப் பார்த்துக்கொள்ளுதல் உங்களது கடமையாக இருப்பினும், புலத்து உறவுகள் பேய்களுக்கு நடுவில் வாழ்கின்றனர் ஆகவே அவர்களை இக்கட்டான பிரச்சனைகளுக்குள் மாட்டிவிடாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.