Jump to content

ஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இணைய காமிரா !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி.

மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் பயிற்சி இல்லாத சாமான்யர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் , அனுபவம் மிக்க புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது. புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை அல்லவாஅதற்கு பயிற்சியும் அனுபவமும் தேவை தானே!.

பெரும்பாலும் டிஜிட்டல் காமிராக்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவறுக்கான ஒளி அளவு போன்ற விஷயங்களுக்கான தேர்வுகள் இல்லாமல் தானியங்கி அமைப்பில் எடுக்கப்படுபவை.அதாவது சுற்றுப்புறம் மற்றும் ஒளி அமைப்பிற்கு ஏற்ப காமிராவே எல்லாவற்றையும் அமைத்து கொள்கிறது. எனினும் இந்த ஆட்டோபோக்கஸ் வசதியை தாண்டி சூழ்நிலைக்கேற்ப அழகான புகைப்படங்களை எடுக்க விரும்பினால் , புகைப்பட கலையின் அடிப்படையை கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதிலும் நவீன் டி.எஸ்.எல்.ஆர் காமிராக்களில் உள்ள வசதி மற்றும் லென்சுகளின் துல்லியத்தை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு அருமையான புகைப்படங்களை எடுக்க இவை மிகவும் அவசியம்.

ஆம்புகைப்படக்கலையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் நன்றாக தான் இருக்கும் என்று நினைத்தால் அதற்காக நீங்கள் எங்கேயும் கூட செல்ல வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே இணையத்திலேயே புகைப்படக்கலையின் அடிப்படையை கற்றுக்கொள்ளலாம்.

இணையத்தில் கற்கலாம்

இணையத்தில் புகைப்படம் எடுக்க கற்கலாம் என்றவுடன் இணையதளம் மூலமான வகுப்புக்களையோ அல்லது யூடியூப் மூலமான வீடியோ பாடங்களையோ நினைத்துக்கொள்ள வேண்டாம். இது இணைய காமிரா மூலமே புகைப்பட எடுக்க கற்றுக்கொள்ளும் புதுமையான வழி ! ஆனால்,காமிரா இல்லாமல் புகைப்படக்கலையை கற்பது எப்படிஅதனால் தான்  வர்ச்சுவல் காமிரா என்று சொல்லப்படும் இணைய காமிரா உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த இணைய காமிரா மூலமாகவே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ளலாம். புகழ்பெற்ற காமிரா தயாரிப்பு நிறுவனமான கேனான் இந்த இணைய காமிராவை உருவாக்கியுள்ளது. கேனான் நிறுவனத்தின் கண்டா நாட்டு பிரிவு சார்பாக இந்த இணைய காமிராவுக்கான இணையதளமும் ,அதன் மூலமான புகைப்பட அடிப்படை பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகவரி;http://canonoutsideofauto.ca/

இணைய காமிரா

ஆட்டோ மோடில் அழகான புகைப்படங்களை எடுக்கலாம் என்றாலும் , உண்மையான படைப்பாற்றல் இந்த ஆட்டோ மோடில் இருந்து வெளியேறும் போது தான் சாத்தியம் என்பதை உணர்த்தும் இந்த இணையதளத்தில் அதற்கான அடிப்படை பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு அருமையான புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் சரியான ஒளி அளவு இருக்க வேண்டும். புகைப்பட கலை மொழியில் இதை எக்ஸ்போஷர் என்கின்றனர். அதாவது புகைப்படம் எடுக்கும் போது காமிராவின் சென்சார் உள்வாங்கி கொள்ளும் வெளிச்சத்டின் அளவு. அதிக வெளிச்சம் புகைப்படத்தை வெளிரிப்போக செய்யும். குறைவான வெளிச்சம் மணிரத்னம் திரைப்படம் போல இருளாக தோன்றச்செய்து விடும். ஆனால் சரியான் அளவு வெளிச்சத்தை அனுமதித்தால் புகைப்படம் அட்டகாசமாக இருக்கும். இது காமிரா கலையின் முதல் விதி.

அடுத்ததாக வருவது அப்பர்ச்சர் ( aperture  ) . லென்ஸ் வாயிலின் கதவை ஒளியின் தேவைக்கேற்ப பெரிதாக்கவோ சிறியதாக்கவோ இந்த வசதி பயன்படுகிறது. இதை சரி செய்வதன் மூலம் புகைப்படத்தின் பின்னணி தோற்றத்தை மாற்றி அமைக்கலாம். காமிரவை நோக்கி வரும் வெளிச்சம் சென்சாரில் பதிவாவதற்கு முன்னர் அது ஷட்டர் வேகத்திற்கு உட்பட்டாக வேண்டும். ஒளி உள்ளே வர எவ்வளவு நேரம்( நொடியிலும் குறைவு ) அனுமதிகப்படுகிறது என்பதை ஷட்டரின் வேகமே தீர்மானிக்கிறது. அதன் பிறகு சென்சார் உள்வாங்கி கொள்ளும் ஒளியின் அளவை ஐ.எஸ்.ஓ செட்டிங் மூலம் தீர்மானிக்கலாம். ஒரு நல்ல புகைப்படம் எடுக்க இவை தான் பால பாடங்கள்.

ஆன்லைனில் பயிற்சி

இந்த பாலபாடங்களை தெரிந்து கொண்டவுடன்அவற்றை அப்படியே பயிற்சி செய்தும் பார்க்கலாம். இதற்காக தான் அழகான இணைய காமிரா இருக்கிறது. புகைப்பட பாடங்களுக்கு அடுத்த கட்டமாக இந்த காமிரா மூலம் இணையத்திலேயே புகைப்படம் எடுத்து பயிற்சி செய்யலாம். பிலே பகுதியை கிளிக் செய்தால் இந்த இணைய காமிரா தோன்றுகிறது. முகப்பு பக்கத்தில் டிஜிட்டல் காமிரா நம் முன் இருப்பது போல தோன்றும் இணைய காமிராவில் வெளிச்சத்துக்கான அளவை தேர்வு செய்யும் வசதிஅப்பர்ச்சரை சரி செய்யும் வாய்ப்பு மற்றும் ஷட்டர் வேகத்தை அமைக்கும் வசதிகள் இருக்கின்றன. காமிராவை கையால் இயக்குவது போல இந்த இணைய காமிராவில் மவுஸ் மூலம் இந்த மாற்றங்களை செய்யலாம். காமிரா திரையில் ஒரு மாதிரி புகைப்படம் தோன்றும். எல்லாம் சரியாக அமைத்த பின் கிளிக் செய்தால் நாம் எடுத்த புகைப்படம் கீழே உள்ள பகுதியில் தோன்றும். அந்த புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டுள்ளது , அதில் எவை சரியாக இல்லை போன்ற குறிப்புகளும் இடம் பெறுகிறது. புகைப்படத்தின் துல்லியத்தை வைத்தே நாம் என்ன தவறு செய்தோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எத்தனை முறை வேண்டுமானால் அளவுகளை மாற்றி புகைப்படம் எடுத்து பார்க்கலாம். மாதிரி படம் மாறாதே தவிர நாம் எடுக்கும் விதத்திற்கு ஏற்ப அவற்றின் துல்லியத்தில் மாற்றங்களை காணலாம்.

புகைப்பட சவால்

புகைப்பட அடிப்படையை படிப்பதுடன் அவற்றை உடனுக்குடன் காமிரா மூலமே சோதித்து பார்க்க முடிவது தான் இந்த இணைய காமிராவின் சிறப்பமசம். ஆன்லைனிலேயே படம் எடுத்து பார்க்க முடிவது கூடுதல் சுவாரஸ்யத்துடன் புகைப்படக்கலை அடிப்படைகளை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்த புகைப்பட பயிற்சிக்கு பிறகு மேலும் அடிப்படை தகவல்கள் மற்றும் புகைப்பட குறிப்புகளை அறிய விரும்பினால் அதற்கான பகுதிகளும் இருக்கின்றன. அடிப்படைகள் அத்துபடியானால் இந்த தளம் மூலமே உங்களை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளலாம். இதற்காக புகைப்பட சவால் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. கேனான் காமிராக்களுக்கான விளம்பர நோக்கிலான தளம் என்றாலும் விளம்பர நெடி இல்லாமல் புகைப்படக்கலையின் அடிப்படையை சுவாரஸ்யமாக விளக்கும் வகையில் இந்த தளம் இருக்கிறது.

மேலும் சில தளங்கள்

புகைப்பட பிரியர்களுக்கு ஆர்வம் அளிக்க கூடிய மேலும் சில இணையதளங்களும் இருக்கின்றன. போன்ஹெட் (http://www.photonhead.com/simcam/)  இணையதளம் புகைப்படக்கலையின் அடிப்படையை தனித்தனி தலைப்புகளாக விளக்குகிறது. புகைப்படங்களுடன் இந்த விளக்கங்கள் அமைந்துள்ளன. இதிலும் புகைப்படங்களை எடுத்துப்பார்க்கலாம். இணைய காமிராவின் தோற்றம் இல்லாவிட்டாலும் எல்லா வகையான அளவுகளையும் தேர்வு செய்து புகைப்படத்தின் தன்மையை பார்க்கலாம். புகைப்படக்கலை தொடர்பான விரிவான குறிப்புகளும் இருக்கின்றன.

புகைப்படங்களின் முதல் எதிரியான காமிரா அசைவதை எப்படி தவிர்ப்பது உள்ளிட்ட பயனுள்ள குறிப்புகளை கற்றுக்கொள்ளலாம். காமிரா வாங்குவதற்கான கையேடு பகுதியும் இருக்கிறது. இதே போல கேமிராசிம் (http://camerasim.com/) தளமும் இணைய காமிரா வசதியுடன் புகைப்பட பயிற்சி அளிக்கிறது. நிக்கானின் லென்ஸ் (http://imaging.nikon.com/lineup/lens/simulator/ )  சிமுலேட்டரையும் முயன்று பார்க்கலாம்.

 

ஆக நீங்கள் ஏற்கனவே நல்ல டிஜிட்ட்ல காமிரா வாங்கி வைத்திருந்தாலும் சரிஅல்லது புதிய காமிரா வாங்கும் எண்ணம் இருந்தாலும் சரி இந்த இணைய காமிரா பயிற்சிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கற்றுக்கொண்டு கிளிக் செய்து பாருங்கள்.

 

http://cybersimman.wordpress.com/2014/03/04/camera-4/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
    • ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க  தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து  தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக  இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட  ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.   வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351   ##################  ##################    ###################     மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!   இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 #################  ##################    ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.