Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கே புலிகளையும் தெற்கே jvp முறியடித்தோம் ரணில்

Featured Replies

தெற்கை பிரிக்க ஜே.வி.பி.யும் வடக்கை பிரிப்பதற்குபுலிகளும் செய்த முயற்சியை நாம் முறியடித்தோம் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க

விரைவில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்வதன்மூலம் சிறந்த நல்லாட்சியை உருவாக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இன மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒரு காலத்தில் நாட்டின் தெற்குப்பகுதியை ஜே.வி.பி.யினரும் வடகிழக்குப்பகுதியை விடுதலைப்புலிகளும் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி உயிர்தியாகங்களை செய்து அந்த முயற்சியை முறியடித்தது. ஐக்கிய தேசிய கட்சியைப்போன்று தியாகங்களை செய்த கட்சி ஆசியாவிலேயே இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சிக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றது. கட்சிக்காக உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் ஒரு காலத்தில் தெற்கை மக்கள் விடுதலை முன்னணி கைப்பற்ற முயற்சித்தது. அத்துடன் புலிகள் வடகிழக்கை கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி அந்த முயற்சிகளை முறியடித்தது. பயங்கரவாதிகள் வாக்குகளால் அல்ல துப்பாக்கிக்குண்டுகளால் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொள்வதே பழக்கமாகக்கொண்டுள்ளனர்.

ஜே.வி.பி .யினதும் புலிகளினதும் பயங்கரவாதத்தால் எமது கட்சியின் 6000 த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உயிர் நீத்துள்ளனர். ஐக்கிய தேசி கட்சியின் நாட்டை நிருவகித்த தலைவர்கள், கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் , பாராளுமன்ற ,மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் என கட்சியை சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயகத்திற்காக போராடியதனால் கொல்லப்பட்டனர். ஆனால் நாங்கள் தளரவில்லை. 1983 ஆம் ஆண்டிலிருந்து ஈழத்துக்காக போராடிவரும் புலிகள் ஐக்கிய தேசிய கட்சியின் வடகிழக்கு மாகாண அமைப்பாளர்களையும் ஆதரவாளர்களையும் உறுப்பினர்களையும் படுகொலைசெய்தனர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடபட்டபோதும் எமது கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணியினால் கொல்லப்பட்டனர். மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டதும் எமது கட்சியின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். மாகாணசபைத் தேர்தலில் வாக்குப்போட்டவர்களையும் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் படுகொலைசெய்தனர். கட்சியைசேர்ந்த ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஆகியோரும் கொல்லப்பட்டனர் . 1993 ஆம் ஆண்டுப்பகுதிகளில் இரண்டரை வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைப்பதவியே இல்லாமல் இருந்தது. அதன்பின்னர் நான் தலைமைப்பதவியைப் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்திவருகின்றேன்.

எமது கட்சிக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டு வடகிழக்கு மக்களுக்கு வாக்களிக்கும் உரி மை வழங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் வடகிழக்கு மக்களை மறந்துவிடவில்லை. அவர்களுக்காக குரல்கொடுத்து வருகின்றோம். தென்மாகாண சபை உறுப்பினர்இங்கு ஐ.தே.க.வின் தென்மாகாண சபை உறுப்பினர் பண்டித் மொரகே உரையாற்றுகையில் கூறியதாவது: 1989 ஆம் ஆண்டுகளில் நான் தென் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று வீடு செல்லும் வழியில் எனது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று எனது மூன்று பிள்ளைகளுக்கும் தாயொருவர் இல்லை. இதற்கான பொறுப்பை ஜே.வி.பி.யே ஏற்கவேண்டும். பிரபாகரன் இன்னுமொரு இனத்துடன் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றார். ஆனால் ஜே.வி.பி.யினர் தமது சொந்த இனத்தையே அழித்து ஆட்சியை க்கைப்பற்ற முயற்சித்தனர்.

எப்போதாவது ஒரு நாள் மக்கள் விடுதலை முன்னணி இந்நாட்டின் ஆட்சியைக்கைப்பற்றினால் முழு நாடும் முழு இனமும் அழிக்கப்பட்டுவிடும். அவர்கள் மீண்டும் ஆயுதங்களை கையில் எடுத்துவிடுவர்.

இந்நிகழ்வில் கட்சிக்காக உயிர் நீத்தவர்களுக்காக நினைவு தூபி ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் நிகழ்வில் கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய, பிரதிப்பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க மற்றும் பாராளுமன்ற ஊறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ,வஜிர அபேவர்த்தன ,காமினி ஜயவிக்ரம பெரெரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.