Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: காணாமல் போனோரும் இன்னமும் தம் அன்புக்குரிய குழந்தைகளை தேடும் பெற்றோரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

she%20holds%20up%20a%20photo%20of%20her%

சிறிலங்காவின் முன்னாள் போர் வலயமான வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தில் தனது கண்முன்னாலேயே கடத்தப்பட்ட தனது மகனை இவரின் தாயாரான 46 வயதான பேரின்பராணி திருநாவுக்கரசு கடந்த ஆறு ஆண்டுகளாகத் தேடிவருகிறார். சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் காணாமற்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவுகளில் திருநாவுக்கரசுவும் ஒருவராவார். 

"2008ல் இராணுவச் சீருடை தரித்தவாறு உந்துருளிகளில் வந்த எட்டுப் போல் எனது மகன் கடத்தப்பட்டான்" என திருநாவுக்கரசு, அல்ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்தார். "எனது மகன் நாட்டின் தென்பகுதியிலுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாக என்னிடம் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். நான் இந்தத் தடுப்பு முகாமுக்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் பயணம் செய்த போதிலும் எனது மகனை அங்கு காணமுடியவில்லை" என தனது இரு கண்களிலும் கண்ணீருடன் திருநாவுக்கரசு தெரிவித்தார். 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் 26 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரானது பாரிய இராணுவ நடவடிக்கை மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. வடக்கிலும் வடகிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் தாம் தொடர்ந்தும் பல பத்தாண்டுகளாக சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால் பாரபட்சப்படுத்தப்படுவதாக முறைப்பாடு செய்தனர். 

1972-2009 வரை சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தில் 100,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தில் போரில் பங்குகொண்ட இரு தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்களால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா உறுதிப்படுத்தியது. 

இவ்வாறான மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி தற்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் இதனால் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கடந்த பெப்ரவரியில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. இதனை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்றன வலியுறுத்தியுள்ளன. 

"சிறிலங்காவில் மனித உரிமைச் சூழல் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், இதனைச் சீர்செய்வதற்காக இலங்கையர்களுக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதற்காக நாங்கள் தற்போது மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தை முன்வைத்துள்ளோம்" என கடந்த வெள்ளியன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

"பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் வாக்களிப்பது தொடர்பில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. நாங்கள் எமது நாட்டில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். போர் முடிவடைந்ததிலிருந்து இங்கு எவ்வாறான அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன என்பதை உலக நாடுகள் நன்கறிந்துள்ளன" என சிறிலங்கா மனித உரிமைகள் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். 

போரின் இறுதியில் சிறிலங்காத் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இந்நாட்டுப் படைகள் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக கடந்த வாரம் தென்னாபிரிக்க மனித உரிமைகள் சட்டவாளரும் ஐ.நாவுக்கான ஆலோசகருமான ஜஸ்மின் சூக்காவால் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சூக்காவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ள பல்வேறு மீறல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளது. சிறிலங்காப் படைகள் பொதுமக்களைப் படுகொலை செய்ததை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

போரில் தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பு போர் வலயத்தில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தின. இவ்வாறான மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கமறுத்துள்ள போதிலும், போரின் போது காணாமற் போனவர்களின் குடும்பத்தவர்கள் சிறிலங்கா அரசாங்கம் தமது உறவுகள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோரிவருகின்றன. 

போரின் இறுதிநாளான மே 18,2009 அன்று தனது மருமகன் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் ஆனால் இவர்களின் தொடர்பு இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னம்மா கந்தசாமி கூறுகிறார். 

"எனது மருமகன் புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தார். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடனும் இன்னும் சில மூத்த புலி உறுப்பினர்களுடனும் இராணுவத்திடம் சரணடைந்தார். ஆனால் நான் பல தடுப்பு முகாங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்குப் பலதடவைகள் சென்றபோதும் இவர்களை எங்கும் காணமுடியவில்லை" என பொன்னம்மா கந்தசாமி கூறுகிறார். 

போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரிலிருந்து மீண்டெழுந்தவர்களிடம் விசாரணை செய்வதற்காக போர் முடிவடைந்த ஓராண்டின் பின்னர் அதிபர் மகிந்த ராஜபக்சவால் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 2013 ஆகஸ்ட்டில் அதாவது நவி பிள்ளை சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வதற்கு சில நாட்களின் முன்னர் வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல் முறைப்பாடுகளைப் பதிவு யெ;து விசாரணை செய்வதற்காக சிறிலங்க அதிபர் ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். ஆனால் இந்த ஆணைக்குழுவானது 1990 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களை மட்டுமே விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டது. 

"ஜனவரி 2010ல் கடத்தப்பட்ட எனது கணவர் தொடர்பாக இந்த ஆணைக்குழுவில் என்னால் முறையிட முடியவில்லை" என அரசியல் சார் கேலிச்சித்திர வடிவமைப்பாளரான பிரஜீத் எக்னலிகொடவின் மனைவி சந்யா பிரியாங்கனி எக்னலிகொட தெரிவித்தார். 

சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அனைத்துலக நியமங்களுக்கு உட்படவில்லை எனவும் மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐ.நா பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவைச் சேர்ந்த றற்னர் 'அல்ஜசீரா' ஊடகத்திடம் சுட்டிக்காட்டியிருந்தார். 

ஈராக்கிற்கு அடுத்ததாக காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள சிறிலங்காவில் காணாமற் போனவர்கள் தொடர்பில் 16,000 வரையான விண்ணப்பங்களை சிறிலங்கா ஆணைக்குழு பெற்றுள்ளது. சிறிலங்காவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர். இவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் காணாமற் போனவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தடுக்கப்பட்டுள்ள அதேவேளையில் கொழும்பில் அரசாங்க ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்காக குரல் கொடுக்கும் ஜெயக்குமாரி பாலேந்திரன் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டு தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 50 வயதான பாலேந்திரன் 2009ல் சரணடைந்த காணாமற் போன தனது மகன் தொடர்பாகத் தகவல் வழங்குமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். "தற்போது நடைபெற்றுவரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திருமதி பாலேந்திரன் கைதுசெய்யப்பட்டார்" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்திருந்தார். 

இதேபோன்று காணாமற் போன குடும்பங்களுக்காகக் குரல் கொடுத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான றுக்கி பெர்னாண்டோ மற்றும் கத்தோலிக்க மதகுருவான பிரவீன் மகேசன் அடிகளார் பயங்கரவாதக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறிக் கைதுசெய்யப்பட்டு, பின்னர் அனைத்துலக தலையீட்டினைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். 

இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் சிறிலங்காவில் தற்போது அதிகரித்துள்ள நிலையில், தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். தனது மகனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பொருத்தமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசு. ஆனால் போர் முடிவடைந்து நீண்ட காலங்கள் ஆகின்ற நிலையில், காணாமற் போனவர்கள் தொடர்பில் மழுப்பாலாகப் பதிலளிக்கப்படலாம். 

வழிமூலம் : Al Jazeera - by Dushiyanthini Kanagasabapathipillai 
மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20140328110221

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.