Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாசனம்

Featured Replies

சாசனம்

sasanam45.jpg

சாசனம் நரை தட்டிய பருவம் தொட்டபோதிலும் மகேந்திரனின் சிந்தனையில் குறை தட்டவில்லை. கண்ணாடி தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீராய் இயக்குனரின் ஆக்கத்தில் தெளிவு புலப்படுகிறது.

பாத்திர படைப்பு, கதைச் சொல்லும் விதம் ஆகியவற்றில் 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்களின்' சுவையில் கொஞ்சமும் மாற்றமில்லை மகேந்திரனிடம்.

பிள்ளை இல்லாதவர்களுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகனை சுவீகாரம் செய்து கொடுப்பது செட்டிநாட்டு மக்களிடம் இருந்த இருக்கும் ஒரு பழக்கம். அப்படித்தான் இந்த கதையின் நாயகன் அரவிந்த்சாமியும் சுவீகாரம் செய்து கொடுக்கப்பட்டவர்.

சுவீகாரம் செய்து கொடுத்துவிட்டால் பிறந்த வீட்டையும் பெற்றவர்களையும் பார்க்கக்கூடாது என்பது எழுதாத சாசனம். அந்த சாசனத்தில் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறார் அரவிந்த்சாமி. இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து பஞ்சம் பிழைக்க காரைக்குடிக்கு இடம்பெயரும் ரஞ்சிதாவுக்கும் அவரது தாயுக்கும் அடைக்கலம் கொடுக்கிறார் அரவிந்த்சாமி. கணவரின் விருப்பம் எதுவோ அந்த தடத்திலிருந்து மாறாத அரவிந்த்சாமியின் மனைவி கௌதமியும் ரஞ்சிதாவுக்கும் அவரது அம்மாவுக்கும் வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து உபசரிக்கிறார்.

பிறந்த வீட்டை பிரிந்து வேதனையில் துவழும் அரவிந்த்சாமிக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகிறது அவரது தந்தையின் இறப்பு. தந்தையின் பிணத்தைக் கூட பார்க்கமுடியாத விதியை நினைத்து நொந்து கொண்டிருக்கும் அரவிந்த்சாமிக்கு ரஞ்சிதாவின் அரவணைப்பு ஆறுதல் தருகிறது. ஆரம்பத்தில் ரஞ்சிதாவின் நெஞ்சத்தில் தஞ்சமடையும் அரவிந்த்சாமிக்கு மஞ்சத்தையே தருகிறார் ரஞ்சிதா. இதுவே தொடர்கதையாக, ஊர் வாய்களுக்கெல்லாம் உலை வைக்கிறது இவர்களின் உறவு.

sasanam46.jpg

ரஞ்சிதாவுடன் கணவருக்கு இருக்கும் உறவு என்னவென்று தெரிந்தும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார் கௌதமி. ஆனால் ரஞ்சிதாவுக்கோ கௌதமிக்கு துரோகம் செய்தது போன்ற குற்றவுணர்வில் ஊரை காலிசெய்து திருவாரூருக்கு போகிறார்.

அரவிந்த்சாமியின் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி அவரை பிரிந்து வாழ ஆரம்பிக்கிறார் ரஞ்சிதா. காலம் கரைபுரண்டு ஓட ஆரம்பிக்கும் வேளையில் கௌதமி இறக்கிறார். மனைவியையும் இழந்து, ரஞ்சிதாவையும் அவரது குழந்தையையும் பிரிந்து வாழும் அரவிந்த்சாமியின் கடைசி அத்தியாயமாவது சந்தோஷம் காண்கிறதா இல்லையா என்று இறுதி காட்சிகளில் தெரிய வரும்போது கனத்த மனதுடன் தியேட்டரிலிருந்து வெளியேற வைக்கிறது இந்த சாசனம்.

சிற்பியின் உளியில் சிக்கிய பாறைகள் அழகிய சிலையாக உருவெடுப்பதில் எப்படி மாறுதல் இருக்காதோ அப்படித்தான் மகேந்திரனின் இயக்கத்தில் இதில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக வார்த்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

பிறந்த இடம், பெற்ற தந்தை, வாழ்க்கை துணைவியாக வந்த கௌதமி, பிறந்து இறக்கும் குழந்தை, தற்காலிக ஆறுதல் தந்த ரஞ்சிதா என உறவுகள் ஒவ்வொன்றாக இழந்து துடிக்கும் காட்சிகளில் அரவிந்த்சாமியின் நடிப்பில் ஜீவன் இழையோடுகிறது.

'எங்க ஆளுங்க எல்லாம் காலுல இதுமாதிரி கொலுசு போட மாட்டாங்க' என ரஞ்சிதாவின் காலிலிருந்து கொலுசை கழற்ற வைக்கும் கௌதமி, தன் கணவரின் மனைவியாக ரஞ்சிதாவை ஏற்றுக்கொள்வதை மறைமுகமாக சொல்லும்போது கௌதமியின் முகபாவனைகள், இளம் நடிகைகள் குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டிய பாடம்.

அரவிந்த்சாமி மீதான நேயம் ஒருபக்கம், கௌதமிக்கு துரோகம் செய்த குற்ற உணர்வு மறுபக்கம் என இருவித உணர்வில் சிக்குண்டு தவிக்கும்போது ரஞ்சிதாவின் நடிப்பில் ஆஹா... அற்புதமான உணர்ச்சி குவியல்கள்.

பாலபாரதியின் பின்னணி இசை, கதையின் சூழலுடன் பயணப்பட்டு நெஞ்சுக்கூட்டுக்குள் சோகத்தை அள்ளி நிரப்புகிறது.

ஆவண படம் என்றாலே ஆமை வேகம்தான் என்ற விதிக்கு முதல் பாதி படம் விதிவிலக்காக அமைந்திருந்தால், குத்தாட்ட ரசிகனையும் கடைசி வரை இருக்கையில் அமர வைத்திருக்கும் படமாக இருந்திருக்கும். என்ன செய்வது இது NFDC படமாச்சே?

செட்டிநாட்டவர்களின் வாழ்க்கை மரபுகளை உயிரோட்டமாக நிறைந்து வைத்திருக்கும் இந்த சாசனம் காரைக்குடிக்காரர்களின் பொக்கிஷம்.

- வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.