Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்­க­ளு­டைய ஜெனிவா பயணம் வெற்­றி­ய­ளித்­தி­ருக்­கின்­றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மான தீர்­மானம் ஒன்­றினை நாங்­களும் சில புலம்­பெயர் அமைப்­புக்­களும்கொண்­டு­வ­ரு­தற்கு எடுத்த முயற்­சியை முறி­ய­டித்த கூட்­ட­மைப்பினர் மறு­பு­றத்தில் தமிழ் மக்­க­ளுடன் சம்­பந்­தப்­ப­டாத பிற சக்­தி­களின் நலன்­களை பேணிக்கொள்­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்தை கண்­மூ­டித்­த­ன­மாக ஆத­ரித்­தி­ருந்­தார்கள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

கேள்வி:-உங்­க­ளு­டைய ஜெனிவா பயணம் வெற்­றி­ய­ளித்­தி­ருக்­கின்­றதா?

பதில்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணியின் தலைவர் என்ற வகையில் நானும் செய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன், தேசிய அமைப்­பாளர் விஸ்­வ­லிங்கம் மணி­வண்ணன் ஆகிய மூவரும் முக்­கி­ய­மாக இரண்டு கார­ணங்­க­ளுக்­காக ஜெனி­வா­விற்குச் சென்­றி­ருந்தோம். முத­லா­வ­தாக மேற்­கு­லக நாடு­களின் துணை­யுடன் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­படும் பிரே­ர­ணையை முற்­று­மு­ழு­தாக தமிழ் மக்­க­ளுக்கு நன்மை வழங்கக் கூடிய வகையில் அதா­வது இங்கு நடந்த, நடந்து கொண்­டி­ருக்­கின்ற இனப்­ப­டு­கொலை மற்றும் அநீ­தி­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­றலை ஏற்­ப­டுத்தி நிரந்­தரத் தீர்வை எட்­டு­வ­தற்­காக வேண்டி பிரே­ர­ணையைப் பலப்­பத்­து­வ­தற்­காக உறுப்பு நாடு­களைச் சந்­தித்து எம் இனத்தின் நிலைப்­பாட்­டிற்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நிகழ்ச்சி நிர­லொன்று எம்­மிடம் இருந்­தது.

இரண்­டா­வ­தாக 47நாடு­களும் பங்­கேற்­றி­ருக்கும் மனித உரி­மைகள் உயர் சபையில் எமது மக்­களின் நிலைப்­பா­டுகள், அபி­லா­ஷைகள், உண்­மை­யி­லேயே தேவைப்­படும் விட­யங்கள் என்ன? மற்றும் அவர்­களின் மன உட்­கி­டப்­புக்­களை நாம் மூவரும் உத்­தி­யோக பூர்­வ­மா­கவும் பகி­ரங்­க­மா­கவும் திட்­ட­மிட்டுச் சென்­ற­படி பதிவு செய்­வது என்பவையே அந்த நோக்கங்களாகும். இங்கு எமது நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் முத­லா­வது விட­ய­மான உறுப்பு நாடு­களை சந்­தித்து கலந்­து­ரை­யாடி எமது நிலைப்­பா­டு­களை அவர்­க­ளுக்கு தெளிவாக்­கு­வதில் நாம் வெற்­றி­யடைய முடி­ய­வில்லை என்­பது தற்­போது நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் காணப்­படும் குறைப்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

நாம் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டாத தரப்­பி­ன­ராக இருந்­ததன் கார­ணத்­தா­லேயே எமது விருப்­பத்­திற்கு ஏற்ற வகையில் அப்­பி­ரே­ர­ணையில் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்தமுடி­யாது அதே­நேரம் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட தரப்­பினர் தற்­போது நிறை­வேற்­றப்­பட்ட அமெ­ரிக்க தீர்­மா­னத்தை தாங்கள் முற்­று­மு­ழு­தாக ஏற்­றுக்­கொண்­ட­தா­கவும், மக்கள் அதனை விரும்­பு­கின்­றார்கள் என்ற கருத்தை முன்­வைத்­தி­ருந்த நிலையில் நாம் அதனை தாண்டி செயற்­ப­டு­வ­தென்­பது மிகக் கடி­ன­மா­க­வி­ருந்­தது. இருப்­பினும் நாம் மனித உரி­மைகள் உயர் சபையில் எமது கரு­துக்­களை பதிவு செய்­துள்ளோம்.

கேள்வி:- தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கும் பிரே­ர­ணையில் குறை­பா­டுகள் இருப்­ப­தாக அழுத்­த­மாக பிரஸ்­தா­பிப்­ப­தற்­கான காரணம் என்ன?

பதில்:- தற்­போது அமெ­ரிக்கா இலங்கை தொடர்­பி­லான ஏதோ­வொரு பிரே­ர­ணை­யொன்றை நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது. இதனை விம­ர்சிப்­பதைத் தவிர்க்­க­வேண்டும். பிரே­ரணை தொடர்பில் விமர்­சிப்­பதால், மாற்­றுக்­க­ருத்­துக்­களை முன்­வைப்­பதால் அவை அனைத்தும் அர­சாங்­கத்­திற்கு சார்­பாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் குறிப்­பிட்ட சிலர் தொடர்ச்­சி­யாக தமது கருத்­துக்­களை முன்­வைப்­ப­தோடு எம்­மையும் குற்­ற­வா­ளி­க­ளாக கூறி வரு­கின்­றனர். கூட்­ட­மைப்­பி­னரைப் பொறுத்­த­வ­ரையில் தாம் மக்­களால் தெரிவுசெய்­யப்­பட்ட அமைப்­பினர்.

மக்கள் ஏற்­றுக்­கொண்­டதும் தாம் நூற்­றுக்கு நூறு­வீதம் விரும்பும் தீர்­மா­ன­மொன்று தான் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது என ஒரு­பக்கம் கூறு­கின்­றார்கள். மறு­பக்­கத்தில் அதில் இருக்கும் தவ­று­களை சுட்­டிக்­காட்ட முனையும் தரப்­பி­னரை அர­சாங்கத் தரப்­பினர் எனவும் கூறு­கின்­றார்கள். இவ்­வாறு இரண்டு கருத்­துக்­களை ஒரே நேரத்தில் கூற­மு­டி­யாது. எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்கத் தீர்­மா­ன­மா­னது தமிழ் மக்கள் மீது இன்­று­வ­ரையில் தொடரும் இன­வ­ழிப்பு உட்­பட அநீ­தி­க­ளுக்கு தீர்வைப்பெற்­றுத்­த­ரக்­கூ­டிய வகை­யிலோ அல்­லது ஆக்­க­பூர்­வ­மான பொறுப்­புக்­கூறும் வகை­யிலோ அமை­ய­வில்லை. அந்தக் குறை­பா­டு­க­ளைத்தான் நாம் எமது மக்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டு­கின்றோம்.

எமது மக்கள் பாரிய இன்­னல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து அழி­வு­களுக்குள் சிக்­குண்­டி­ருக்கும் நிலையில் ஏதோ­வொரு நன்­மையைத் தேடிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஜெனிவா அரங்கு எமக்கு விமோ­ச­னத்தைப் பெற்­றுத்­தரும் என்­பதன் அடிப்­ப­டையில் பாரி­ய­ளவில் அக்கறை காட்­டப்­பட்­டுள்­ளது. மக்­களின் மனங்கள் ஜெனிவா எமக்கு எதை­யா­வது பெற்­றுத்­த­ரப்­போ­கின்­றது என நம்­பு­கின்­றன. ஆனால் ஜெனிவா அரங்கு எமக்கு பெரி­ய­ளவில் எத­னையும் பெற்­றுத்­த­ரப்­போ­வ­தில்லை என்­பதே உண்­மை­யா­க­வி­ருக்­கின்ற நிலையில் மக்கள் அதீத நம்­பிக்­கை­யுடன் இருப்­பது மிக­மிக ஆபத்­தான விய­ட­மாகும்.

காரணம் இவ்­வாறு குறை­பா­டு­க­ளுடன் இருக்கும் பிரே­ர­ணை­களை தொடர்ச்­சி­யாக நம்­பிக்­கொண்­டி­ருப்­பதால் எமக்கு தேவை­யா­ன­வற்றை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அடுத்த கட்­டத்­திற்கு செல்­ல­மு­டி­யா­த­வொரு தடையை தற்­போ­துள்ள நிலை ஏற்­ப­டுத்­தி­விடும். ஆகவே இந்த மாயைக்குள் சிக்­கி­யி­ருக்கும் மக்­களை மீட்­டெ­டுப்­பதன் ஊடா­கவே நாம் ஆக்­க­பூர்­வ­மான அடுத்த கட்­டத்­திற்குச் செல்­ல­மு­டியும். அவ்­வா­றா­ன­தொரு கோணத்­தி­லேயே நாம் இப்­பி­ரே­ர­ணையில் இருக்கும் குறை­பா­டு­களை ஆணித்­த­ர­மாக முன்­வைத்­துக்­கொண்டு வரு­கின்றோம்.

தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணையில் காணப்­படும் குறை­பா­டு­களை பார்ப்­போ­மானால், பொறுப்­புக்­கூ­றலும் நல்­லி­ண க்­கமும் என்­பது தீர்­மா­னத்தின் தலைப்­பா ­க­வி­ருக்­கின்­றது. இனப்­ப­டு­கொ­லைக்­குள்­ளாக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு பொறுப்புக்கூற­ வேண்­டி­யுள்­ளது. சிங்­கள, தமிழ் தேசத்­திற்­கி­டையில் உரு­வாக்­கப்­பட வேண்­டிய விடயம் நல்­லி­ணக்­க­மாகும். இப்­பி­ரே­ரணை தமி­ழர்­களின் பெயரால் தான் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் பிரே­ர­ணையின் எந்­த­வொரு இடத்­திலும் தமிழ் என்ற ஒரு வார்த்­தைப்­பி­ர­யோ­கமே காணப்­ப­ட­வில்லை.

மாறாக மத­ரீ­தி­யி­லான சிறு­பான்­மை­யி­னரே பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் எனக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. அதன் பிர­காரம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான பரி­மாணம் மாற்­றப்­பட்டு வேறொரு தோற்­றப்­பாடு காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. பிரே­ர­ணையின் இரண்­டா­வது செயற்­பாட்டு பந்­தியில் அர­சாங்கம் சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்ட மீறல்கள் தொடர்­பா­கவும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பா­கவும் உள்­ளக விசா­ரணை நடாத்­த­வேண்டும் என கோரப்­பட்­டி­ரு­கின்­றது. அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை ஒன்றை நடத்­து­வதால் தமி­ழ­ருக்கு எவ்­வி­த­மான நியா­யங்­களும் கிடைக்­கப்­போ­வ­தில்லை.

ஆகவே சர்­வ­தேச மட்­டத்­தி­லான விசா­ர­ணை­யொன்­றையே நாம் எதிர்­பார்க்­கின்றோம். எனினும் பிரே­ர­ணையின் பத்­தா­வது செயற்­பாட்­டு ­பந்தி பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது. அதா­வது 2002–2009 மே இல் யுத்தம் முடிந்த காலம்­வரை இலங்­கையில் இரு தரப்­பி­ன­ராலும் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்­களும் அது­சம்­பந்­தப்­பட்ட குற்­றங்­க­ளையும் விசா­ரித்து அறிக்­கை­யி­டு­மாறு மட்­டுமே ஐ.நா . மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. உள்­ளக விசா­ரணை பற்றி கூறப்­பட்­டுள்ள இடத்தில் சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்ட மீறல்கள், மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் ஆகிய இரண்டும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

ஆனால் சர்­வ­தேச விசா­ரணை என்று கூறப்­படும் 10ஆவது பந்­தியில் வெறு­மனே சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்ட மீறல்கள் பற்றி மட்­டுமே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீறல் தொடர்­பான விசா­ரணை என்­பது தவிர்க்­கப்­பட்­டுள்­ளது. அதன் அர்த்தம் சர்­வ­தேச விசா­ரணை என்­பதில் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் இடம்­பெ­ற­மாட்­டாது என்­ப­தாகும். அத்­துடன் இது சட்­டக்­கல்­லூ­ரியில் முத­லா­மாண்டில் கல்­வி­ப­யிலும் மாண­வர்­களே அறிந்த விட­ய­மாகும். பத்­தா­வது பந்­தியில் சர்­வ­தேச மனி­தா­பி­மான விட­யங்கள் குறித்து மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தால் விசா­ரணை செய்­யப்­ப­டத்­தே­வை­யில்லை என்ற அடிப்­ப­டையில் தான் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

சர்வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­க­ளுக்குள் தான் யுத்­தக்­குற்­றங்கள், மனித குலத்­திற்கு, எதி­ரான மிக மோச­மான குற்­றங்கள், இனப்­ப­டு­கொலை குற்­றங்கள் அனைத்தும் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றி­ருக்­கையில் இலங்­கையில் நிகழ்ந்த அவ்­வாறான விடயங்கள் குறித்­து விசா­ரணை செய்­வ­தற்கு ஆணை­யாளர் நாய­கத்­திடம் பொறுப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­கா­லப்­ப­கு­தி­யான 2002முதல் 2009 வரை­யி­லான காலப்­ப­கு­தி­யி­லேயே ஆணை­யா­ளரும் விசா­ர­ணை­களை மேற்­கொ ள்­ள­வேண்டும் எனக் காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அவ்­வா­றாயின் 2009இற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இன்­று­வரை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் கட்­ட­மைக்­கப்­பட்ட தமி­ழி­ன­வ­ழிப்பு தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­கு­ரிய வாய்ப்பு கிடைக்­கப்­போ­வ­தில்லை. இவற்­றை­யெல்லாம் தாண்டி மனித உரி­மைகள் ஆணை­யாளர் இன்­று­வ­ரையில் நடை­பெறும் விட­யங்கள் தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­யொன்றை நடத்­து­வாரா என்­பது எமக்­கி­ருக்கும் பாரிய கேள்­வி­யாகும்.

கேள்வி:- இப்­பி­ரே­ர­ணையை நிறை­ வேற்ற வேண்டும் என தமிழர் பிர­திநிதித்­து­வங்கள், புலம்­பெயர் அமைப்­புக்கள், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் பல ஜெனி­வா­விற்கு சமு­க­ம­ளித்து உந்­துதல் அளித்­தி­ருந்­தன. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்களில் பிரே­ர­ணையின் குறை­பா­டுகள் தொடர்பில் அவர்­களின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தீர்­களா? அவர்­களின் நிலைப்­பாடு என்­ன­வா­க­வி­ருக்­கின்­றது?

பதில்:- ஆம், துர­திஷ்­ட­வ­ச­மாக ஜெனி­வா­விற்கு வரு­கை­தந்­தி­ருந்த அமைப்­புக்­களில் சில இந்தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வேண்டும் என வலி­யு­றுத்­தி­ய­தோடு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­ட­மைக்கு கண்ணை மூடிக்­கொண்டு விமர்­ச­ன­மின்றி வர­வேற்­ப­ளித்­தி­ருக்­கின்­றன. இவ்­வா­றான அமைப்­புக்­களை எடுத்­துப்­பார்த்தால் அவை அந்­தந்த நாடு­களின் செல்­லப்­பிள்­ளை­களாக இருக்­கின்­ற­னவே தவிர புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாகவோ, தாய­கத்­தி­லுள்ள மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்யக் கூடி­ய­வர்­க­ளாகவோ செயற்­ப­ட­வில்லை.

பொது­வாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எவ்­வாறு தமிழ்­மக்­க­ளு­டைய நலன்­களின் அடிப்­ப­டையில் முடி­வெ­டுக்­காது வெளித்­த­ரப்­பி­னரின் நலன்­க­ளுக்கு அமை­வாகச் செயற்­ப­டு­கின்­றார்கள் என நாம் முன்­னரே குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்தோம். அதே­போன்று தான் சர்­வ­தே­சத்­தி­லி­ருக்கும் சில அமைப்­புக்­களும் அந்­தந்த நாடு­களின் நலன்­களை பாது­காக்கும் கோணத்தில் செயற்­ப­டு­கின்றன. அதே­வேளை புலம்­பெ­யர்ந்து வாழும் மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் சில அமைப்­புக்கள் இத்­தீர்­மா­னத்­தி­லுள்ள குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்டி அதனை கடு­மை­யாக விமர்­சித்­த­தோடு ஏமாற்றம் அளித்­தி­ருப்­ப­தாக வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ரு­க்கின்­றன.

நாம் ஒரு விட­யத்தை விமார்­சிக்­கின்றோம் எனின் அதில் காணப்­படும் இரண்டு கோணங்­க­ளையும் பார்க்­க­வேண்டும் மாறாக விமர்­சிப்­ப­தையே தவ­றாகக் கரு­தக்­கூ­டாது. இலங்கை அர­சாங்­கத்தை எடுத்துக் கொண்டால் தமக்கு சிறு அழுத்­தங்­களை வழங்கும், அவ­மானத்தைக் கொடுக்கும் தீர்­மானம் எத­னையும் அவர்கள் விரும்­ப­மாட்­டார்கள். அவர்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமக்கு எதி­ராக எந்­த­வொரு தீர்­மா­னமும் வரக்­கூ­டாது என்­பதே நிலைப்­பா­டாக­வுள்­ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்­ன­ணி­யி­ன­ரா­கிய நாம் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டக் கூடா­தென கூற­வில்லை. மாறாக தமிழ் மக்­களைப் பிர­தி­ப­லிக்­கின்ற நிவா­ர­ணத்தைப் பெற்­றுத்­த­ரு­கின்ற வகையில் பலப்­ப­டுத்­தப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்க வேண்டும் என்றே கூறு­கின்றோம்.

கேள்வி:- மனித உரி­மைகள் தீர்­மா­னத்தை அர­சாங்கம் முற்­றாக நிரா­க­ரிப்­ப­தாக கூறி­யி­ருக்­கின்ற நிலையில் அடுத்து என்ன நடக்கும்?

பதில்:- ஐக்­கிய நாடுகள் சபை என்ற கட்­ட­மைப்பின் ஓர் அங்­கமே ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபை­யாகும். மனித உரிமை பேர­வையில் தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்டால் அதனை செயற்­ப­டுத்­து­வ­தற்கு குறித்த நாட்டின் ஒத்­து­ழைப்பை வேண்­டி­ நிற்­பார்கள். ஆனால் மனித உரி­மைகள் பேர­வையால் அந்­நாட்டை வற்­பு­றுத்த முடி­யாது. அத்­துடன் அந்­நாடு ஒத்­து­ழைக்­கா­த­பட்­சத்தில் அதனை தாண்டி செயற்­பட முடி­யாது. ஒரு நாட்டை வலிந்து வற்­பு­றுத்த முடி­யாது. இலங்­கையில் தற்­போது இருக்கும் மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் மட்­டு­மல்ல அடுத்து வர­வி­ருக்­கின்ற எந்­த­வொரு பேரி­ன­வாத அர­சாங்­கமும் தங்­க­ளு­டைய வீரர்­க­ளாக சித்­த­ரிக்கின்ற இராணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக விசா­ர­ணை­களை செய்­யப்­போ­வ­து­மில்லை.

அதற்கு சர்­வ­தே­சத்­திற்கும் இட­ம­ளிக்­கப்­போ­வ­து­மில்லை. ஒரு நாட்டின் எதிர்ப்­புக்­களைத் தாண்டி செயற்­ப­டு­வ­தென்றால் ஐக்­கிய நாடுகள் பாது­காப்­புச்­ச­பை­யினால் மட்மே முடியும். தமிழ் மக்­க­ளுக்கு நியா­யத்தை வழங்­க­ப்போ­கின்ற விட­யத்தை பாது­காப்­புச்­ச­பையில் இலங்­கைக்குச் சார்­பாக செயற்­படும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்க்­கா­ம­லி­ருப்­ப­தற்கு இலங்­கையில் மிக மோச­மான அநீ­திகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இலங்கை தொடர்பில் சர்­வ­தேச ரீதி­யாக எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் நியா­ய­மா­னவை என்ற பொது­வான கருத்­து­ருவாக்­கத்தை உலகின் அதி­க­ளவு நாடுகள் ஏற்­றுக்­கொள்ள வைக்க வேண்டும்.

அவ்­வாறு செய்தால் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பெரும்­பா­லான நாடு­களின் கருத்­திற்கு எதி­ராக செயற்­பட முடி­யாத நிலையை உரு­வாக்க முடியும். அவ்­வா­றான நிலையில் பாது­காப்புச்சபை ஊடாக செயற்­ப­டுத்த முடியும். அவ்­வா­றான கருத்­து­ரு­வாக்கம் ஒன்­றினை மேற்­கொள்­வ­தற்கு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யா­னது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பா­கவும் விசா­ரணை நடத்தி நடை­பெற்ற உண்­மை­களை வெளிக்கொண்­டு­வர ஆணை­யா­ள­ருக்கு அதி­காரம் அளித்­தி­ருக்­கு­மாயின் மனித உரிமை பேர­வையின் தீர்­மா­னங்­களும் நட­வ­டிக்­கைளும் நிச்­ச­ய­மாக பெரி­ய­ளவில் உத­வி­ய­ளித்­தி­ருக்கும். ஆனால் அவ்­வா­றான செயற்­பா­டொன்­றுக்கு பெரும் உந்து சக்­தி­யாக இருக்­க­வேண்­டிய தீர்­மானம் அவ்­வா­றாக அமை­ய­வில்லை என்­பது வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

கேள்வி:- தமிழ் மக்கள் நீதியைப் பெற்­றுக்­கொள்­­வ­தற்­காக எவ்­வா­றான விடங்கள் உள்­ள­டக்­கப்­பட்ட விசா­ர­ணை­யொன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்?

பதில்:- சர்வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தி­னாலோ, அன்றி ஐ.நா. சபை­யினால் நிய­மிக்­கப்­படும் தீர்ப்­பா­யத்­தினால் பக்­கச்­சார்ப்­பற்ற சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­ட­வேண்டும். அந்த விசா­ர­ணை­யா­னது மனித உரிமை மீறல்கள், இனப்­ப­டு­கொலை உள்­ளிட்ட சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டமீறல்­களை விசா­ரிப்­ப­தாக அமை­ய­வேண்டும். போருக்கு முந்­திய காலப்­ப­கு­தி­யையும், பிந்­திய காலப்­ப­கு­தி­யையும் உள்­ள­டக்­கி­ய­தாக அந்த விசா­ரணை அமைய வேண்டும். அதன் ஊடா­கவே இனப்­பி­ரச்­சி­னையின் முழு­வ­டிவம் உணர்த்தப்பட்டு உண்­மையில் இங்கு என்ன நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது என்­பது தொடர்­பான நிலைப்­பாட்­டிற்கு வர­மு­டியும்.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாத பட்­சத்தில் தற்­போ­தைய பல­வீ­ன­மான தீர்­மா­னங்கள் மேலும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடும். அதா­வது அர­சாங்கம், சர்­வ­தேசம் எம்மைக் குற்­ற­வாளிக் கூண்டில் ஏற்ற முனை­கின்­றது. அதற்கு இட­ம­ளிக்­காது நாம் உங்­க­ளுக்­காக போரா­டுகின்றோம் என பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் பிர­சா­ரத்தை செய்து தமக்­கான ஆத­ரவை தற்­போது செய்­வ­து­போன்று மேலும் அதி­க­ரிக்க முனையும். அதே­நேரம் பொறுப்புக் கூறல்­க­ளுக்­காக சேக­ரிக்­கப்­படும் சாட்­சி­யங்­க­ளுக்கு பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

ஆகவே அவ்­வா­றான பாது­காப்பு சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபையின் கண்­கா­ணிப்பின் கீழான சர்­வ­தேச இடை­நிலை அர­சாங்­க­மொன்றை உரு­வாக்க வேண்டும். அந்­நி­லை­மையின் கீழே மக்கள் அச்­ச­மின்றி சாட்­சி­ய­ம­ளிக்கும் சூழல் உரு­வாக்­கப்­படும். அவ்­வா­றான நிலை­மை­யொன்று உரு­வாக்­கப்­படும் பட்­சத்­தி­லேயே கட்­ட­மைப்புச் சார்ந்த இன­வ­ழிப்பை நிறுத்­த­மு­டியும்.

கேள்வி:- பிரே­ரணை மீதான வாக்­க­ளிப்பில் இந்­தியா பங்­கேற்­றி­ருக்­காமை தொடர்பில் எவ்­வா­றன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

பதில்:-- இந்தப் பிரே­ரணை தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நன்­மை­க­ளையும் வழங்­காத நிலையில் இந்­தியா அதற்கு வாக்­க­ளித்­தி­ருந்­தாலும், பங்­கேற்­காது விட்­டாலும் அது தமிழ்மக்­க ளின் நலன்­க­ளுடன் தொடர்­பில்­லா­த­வொரு விட­ய­மொன்­றாகும். அவ்­வா­றான பிரே­ர­ணைக்கு இந்­தியா வாக்­க­ளித்­தி­ருக்­கா­மை­யா­னது எம்மை ஏமாற்றும் விடயம் என நாம் கூற­வில்லை. ஆனால் 1980களில் தமிழ் மக்­க­ளு­டைய உரிமைப் போராட்­டத்தை தமது நலன்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திய இந்­தி­யா­விற்கு தற்­போது அமெ­ரிக்கா முன்­வைத்த பிரே­ர­ணையை தமிழ் மக்­களின் நலன்­களை உள்­ள­டக்கி தீர்­வினைப் பெறும் வகையில் பலப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டிய பாரிய பொறுப்­பி­ருந்­தது. ஆனால் அந்த விட­யத்தை இந்­திய செய்யத் தவ­றி­யி­ருந்­த­மையே எமக்கு மிகக் கடு­மை­யாக ஏமாற்­றத்­தையும், வேத­னையும் அளித்­துள்­ளது.

கேள்வி:- வடக்கு கிழக்கில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் மீளி­ணைய முற்­ப­டு­கின்­றார்கள் என அர­சாங்கம் அண்­மைய காலப்­ப­கு­தியில் தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றதே?

பதில்:- ஜெனிவா அமர்­வுகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த முக்­கி­ய­மான காலப்­ப­கு­தியில் தான் புலிகள் மீண்டும் மீளி­ணை­கின்­றார்கள் என்ற கதைகள் பரப்­பட்­டன. அர­சாங்கம் இவ்­வா­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்ற நிலையில் தான் அமெ­ரிக்கா சமர்ப்­பித்­தி­ருந்த பிரே­ர­ணையில் இரா­ணு­வக்­கு­றைப்பு போன்ற வார்த்­தைப்­பி­ர­யோ­கங்­களும் நீக்­கப்­பட்­டி­ருந்­தன. வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்ற விரும்­பாத அர­சாங்கம் தன்னைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­கா­கவே இவ்­வா­றான புனை­க­தை­களை பிர­சாரம் செய்­தது.

அர­சாங்கம் தன்­னைப்­பா­து­காத்தக்கொள்­வ­தற்­காக செய்ய நடா­கத்­திற்கு நாம் விலை­போ­காது இருப்­ப­துதான் மிக முக்­கி­ய­மாகும். ஆனால் சர்­வ­தேசம் இரா­ணு­வக்­கு­றைப்பு என்ற வார்த்தைப் பிர­யோ­கத்தை நீக்­கி­ய­தனால் யுத்த காலத்தில் காணப்­பட்ட வகை­யி­லான இரா­ணுவப் ஆக்­கி­ர­மிப்பு இன்று காணப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்­கையை இணைக்­காது விட்­ட­மை­யினால் தற்­போது அடிப்­படை உரி­மைகள் முதல் அனைத்து உரி­மை­க­ளையும் மீறும் வகையில் அதனை பிர­யோ­கிக்­கின்­றது. இன்று சர்­வ­தேச ரீதியில் ஜன­நா­யக ரீதியில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் அமைப்­புக்­க­ளையே தடை­செய்­யு­ம­ள­விற்கு நிலை­மைகள் மோச­ம­டைந்­துள்­ளது.

நடை­பெற்று முடிந்த மேல், தென்மாகாண சபைத் தேர்­தலை அர­சாங்கம் வெற்றி பெற்­றி­ருந்­தாலும் அதன் செல்­வாக்கு குறைந்­தி­ருக்­கின்­றமை அப்­பட்­ட­மாக வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே தமது ஆதிக்­கத்தை தக்­க­வைப்­ப­தற்­காக மீண்டும் புலிகள் வரு­கின்­றனர், யுத்தம் ஆரம்­ப­மா­கின்­றப்­போ­கின்­றது ஆகவே எமது அர­சாங்கம் ஆட்­சியில் இருந்தால் தான் அதனை கட்­டுப்­ப­டுத்த முடியும் யாராலும் செய்ய முடி­யா­த­வொரு விட­யத்தை நாமே செய்து முடித்தோம் எனக் கூறி யுத்­த­க­ளத்­திற்குள் மக்­களை தள்­ளி­விட்டு தன்­னு­டைய செல்­வாக்கை தக்க வைக்­க­வேண்­டிய தேவைக்­கா­கவே அவ்­வாறு செயற்­ப­டு­கின்­றது.

கேள்வி:- வட­கி­ழக்கில் மக்­களின் அடிப்­படை விட­யங்கள் இன்­று­வ­ரையில் பூர­ணத்­துவம் பெறா­தி­ருக்­கின்­ற­நிலை நீடிக்­கின்­றதே?

பதில்:- உண்­மையில் வடக்கில் பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை அரசு முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தாக கூறி­னாலும் அவை அனைத்­துமே இரா­ணு­வத்தின் நலன்கள் என்ற கோணத்தில் தான் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. பாதை­களை உரு­வாக்­கி­னார்கள், எத்­த­னையோ காணி­நி­லங்­களை அப­வி­ருத்தி என்ற போர்­வையில் அப­க­ரித்­துள்­ளார்கள். தற்­போது கடல்­தொழில் செய்­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இன்­னமும் மீள்­கு­டி­யேற்­றத்­திற்க அனு­ம­தி­ய­ளிக்­காத நிலை காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் அங்கு இரா­ணு­வத்தின் நலன்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே அனைத்து அபி­வி­ருத்தி விட­யங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

சிங்­கள பௌத்த தேசிய வாதத்தில் ஊறி­யி­ருக்கும் ஆட்சிக் கட்­ட­மைப்பில் இருந்து தமிழர் தாயகம் மீட்­டெ­டுக்­கப்­பட்­டா­லே­யொ­ழிய அதற்கு முன்­ன­தாக மக்கள் சார்ந்த அபி­வி­ருத்­தியை எதிர்­பார்க்க முடி­யாது என்­ப­தோடு மேற்­கொள்­ளவும் முடி­யாது. ஆகவே ஐக்­கிய நாடுகள் சபையின் கண்­கா­ணிப்பின் கீழ் இடை­நிலை அர­சாங்கம் அமை­யப்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. இதன் ஊடா­கவே கட்­ட­மைப்பு சார் இன­வ­ழிப்பு தடுத்து நிறுத்­தப்­பட்டு மக்கள் சார் அபி­வி­ருத்தி திட்­டங்­களும், வாழ்­வா­தார மேம்­பாட்­டி­னையும் எதிர்­பார்க்க முடியும். அத்­துடன் பொறுப்புக் கூற­லுக்­கு­ரிய சாட்­சி­யங்கள் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு எமது தாய­கங்­க­ளி­லி­ருந்து விட்டு புலம்­பெ­ய­ரா­தி­ருப்­ப­வர்கள் நேர­டி­யாக அபி­வி­ருத்­திக்குப் பங்­க­ளிக்­கவும் முடியும்.

கேள்வி:- ரோம் உடன்படிக்­கையில் கைச்­சாத்­தி­டா­ததன் கார­ணத்தால் அர­சாங்­கத்தை மின்­சா­ரக்­க­தி­ரையில் ஏற்­ற­மு­டி­யாது என உறு­தி­யாக கருத்து முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- ரோம் உடன்­ப­டிக்­கையில் இலங்கை கைச்­சாத்­தி­டாது இருந்­தாலும், ஐ.நா பாது­காப்புச் சபையில் தீர்­மானம் நிறை­வேற்­று­வதன் மூலம் இலங்­கைக்கு எதி­ராக விசா­ரணை மேற்­கொண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அடிப்படையில் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்படுகின்ற நிலையில், ஒருமித்து செயற்படுவதற்கு தடையாக இருக்கும் விடயங்கள் என்ன?

பதில்:- தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்கள் நலன்சார்ந்து செயற்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எமது கட்சிக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்னவென்றால் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாக முன்னதாகவே நாம் மக்கள் நலன் சார்ந்து என்னென் விடயங்கள் அத்தீர்மானத்தில் உள்ளடங்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தோம். எனினும் அக்காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அமெரிக்கா எத்தகைய தீர்மானத்தை கொண்டு வந்திருந்தாலும் நாம் அதனை ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

அதாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரை பொறுத்தவரை மக்களது விருப்பங்களை சர்வதேச நாடுகளுக்கு தெரிவிப்பதனை விட சர்வதேச சமூகத்தின் தீர்மானங்களை தமிழ்மக்களது தலையில் சுமத்திவிடுவதிலேயே முனைப்பாக இருந்தார்கள். உதாரணமாக ஒருசம்பவத்தை இங்கு கூறலாம். ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஒருமாதம் முன்னதாகவே ஜெனிவாவிற்குச் சென்று ஆபிரிக்க கண்ட நாடுகள் சிலவற்றை சந்தித்திருந்தேன். அந்நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கும் முடிவில் இருந்தன. ஏனெனில் அமெரிக்காவானது இத்தீர்மானத்தை தனது தேவைக்காக கொண்டுவருகின்றதே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைக்காக கொண்டுவரவில்லை என்பதாலாகும்.

அதற்கு நான் கூறினேன் நீங்கள் இத்தீர்மானத்தை எதிர்ப்பதனை விட தமிழ் மக்களின் நலன்கள் உள்ளடக்கப்படக் கூடிய வகையில் தீர்மானத்தை பலப்படுத்தி ஆதரிக்குமாறும், நீங்கள் இந்த தீர்மானத்தை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை காரணம் எப்படியேனும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினேன். அதற்கு அவர்கள் இக்கருத்தை நீங்கள் ஆபிரிக்க ஒன்றிய நாடுகளுடன் சந்தித்து தெரியப்படுத்துங்கள் என்று கூறியிருந்தனர். அதற்கிணங்க எமது கட்சியும் புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து ஐ.நாமனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆபிரிக்க ஒன்றிய நாடுகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கப்பட்டு இறுதி நிமிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அவர்களுடன் இணைந்து நெருங்கி செயற்படும், தம்மை சிங்­கள முற்­போக்கும் வாதிகள் என்ற போர்­வையை போர்த்திக்கொண்­டி­ருக்கும் சிலரும் இணைந்து குறித்த கூட்­டத்­தினை நடைபெறவிடாது தடுத்து விட்டனர். இது சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்மானம் ஒன்றினை நாங்களும் சில புலம்பெயர் அமைப்புக்களும் கொண்டுவருதற்கு எடுத்த முயற்சியை முறியடித்த கூட்டமைப்பு மறுபுறத்தில் தமிழ் மக்களுடன் சம்பந்தப்படாத பிற சக்திகளின் நலன்களை பேணிக் கொள்வதற்காக கொண்டு வரப் பட்ட தீர்மானத்தை கண்மூடித்தனமாக ஆதரித்திருந்தார்கள். இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எமது கட்சி எவ்வாறு இணைந்து செயற்பட முடியும்

நன்றி - வீர­கே­சரி

இதிலிருந்து ஒன்று மட்டும் நிச்சயம் தமிழ்மக்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் கூட்டணியின் போலித்தலைமைகள் இருக்குமட்டும்(சிங்கக்கொடி புகழ்) தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது.. வேற்றுமக்கள் இரங்கினாலும் இவர்களின் சுயனலாரசியல் எமக்கு இன்னும் அழிவைத்தான் தரப்போகிறது. புலம்பெயர் அமைப்புகள் தடைகளுக்கும் இவர்கள் தான் இலங்கைக்கு ஆலோசனை கூறியிருக்கலாம். கதிகாமரை சிங்களவருக்கு கொடுத்த குத்தணி அல்லவா. ஏன் தமிழ்மக்கள் அந்த நேரம் விழிப்படையாமல் விட்டார்கள்? இப்போது நம்பி அனுபவிக்கிறார்கள்.. காலம் இன்னும் போகவில்லை..

Edited by வழிகாட்டி

  • 2 weeks later...

ச. வி. கிருபாகரன்>  பிரான்ஸ்

 

பல ஆலோசனைகள்>    பேச்சுவார்தைகள்>    வாக்குவாதங்கள்>  நாசகாரவேலைகளுடன்>   அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப்பிரேரணைக்கு சார்பாக 23வாக்குகளும்>   எதிராக 12 வாக்குகளும்>   நடுநிலையாக 12 வாக்குகளுடன் ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் வெற்றிகரமாக நிறைவேறியாது. சார்பாக நிட்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென>   வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியி;ல் குறிப்பிட்டிருந்தேன். 

 

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே>   இப் பிரேரணை நிட்சயமாக எவ்வித ஐமிச்சமும் இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும் நினைவிருக்கலாம்.

 

இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில்>   உண்மையில் இவ் தீர்மானத்திற்கு சார்பாக 23 வாக்குகள் அல்லா>   25க்கு மேற்பட்ட நாடுகள் வாக்களித்திருக்க வேண்டும்.

 

ஆனால் கடந்த பாரளுமன்றத் தேர்தலில் மிகவும் படுதோல்வியடைந்த தமிழ் கட்சியை சார்ந்த நான்கு கோமாளிகள்>   ஜெனிவாவிற்கு வந்து செய்த கும்மாளத்தினாலும் நாசகார வேலைகளினாலும் 23க்கு மேல் எந்த நாடும் சார்பாக வாக்களிக்கவில்லை. இவ்தீர்மானத்தில் இவர்கள் நிலைப்பாடு என்பது>  சிறிலங்கா அரசிற்கு உரம் சேர்த்தது மட்டுமல்லாது>   சர்வதேச சமூதாயத்திடம் இந்த தீர்மானம் எந்த பிரயோசனமும் அற்றது எனக் கூறியதுடன்>   இவ் தீர்மானத்தை முன்னொழிந்த அமெரிக்க>  பிரித்தானியா போன்ற நாடுகளை ஏளனமும் செய்தார்கள்.

 

பிழை காண்பதே வேலை

 

இதில் வேடிக்கை என்னவெனில்>   இவர்களது மறைமுக நிலைபாட்டிற்கும்>   ஜனதிபதி ராஜாபக்சாவின் வெளிப்படையான நிலைப்பாடுகளிற்கு இடையில் எந்தவித வேறுபாடுகளையும் நாம் காண முடியாது.

 

காரணம்>   தமிழ் வாக்காளர்களில் 5000 பேர் தவிர்ந்த வேறு யாரும் தமக்கு வாக்களிக்காததினால்>  அவர்கள் தொடர்ந்து பல இன்னால்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக>  தொட்டதெற்கெல்லாம் சாட்டு போக்கு கூறுவதும்>   தமிழர் தேசிய கூட்டமைப்பில் பிழை காண்பதையே இவர்கள் தமது கடமையாக கொண்டுள்ளனர். இவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற காலம் முதல் இன்று வரை தமிழ்மக்களுக்கு எதையும் உருப்படியாக செய்தது கிடையாது.

 

ஜனதிபதி ராஜாபக்சா வெளிப்படையாக கூறுவது என்னவெனில்>   வடக்கு கிழக்கு வாழ் மக்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை>   ஆகையால் நான் ஏன் அவர்களைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்பதே.

 

யாழிலிருந்து ஜெனிவா வந்த இக் கோமளிகள்>   ஐ. நா.வில் அடித்த கும்மாளத்திற்கும் செய்த நாசகார வேலைகளுக்கு பல சாட்சிகள் உண்டு. இது பற்றி எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம்.

 

 

 

வேடிக்கைகள்

 

ஆங்கிலம் தெரிந்தவர்கள்>   சட்டம் படித்தவர்கள்>   படிப்பிப்பவர்கள் எல்லாரினாலும்>   ஐக்கிய நாடுகள் சபையினால் முன் வைக்கப்படும் பிரேரணைகளை புரிந்து கொள்ள முடிகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.

 

இவர்கள் ஜெனிவாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறை சொல்வதுடன்>    தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிவுபடுத்துவதற்கான வேலைகளையும் மேற்கொண்டார்கள்..

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ் தீர்மானத்தை ஆதரிப்பதற்காக>   இவர்கள் சில விசமத்தானமான குறைகளை கூறி தம்முடன் இத்தீர்மானத்தை எதிர்பதற்கென ஒரு குழுவை திரட்டீனார்கள்.

 

மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக முகம் காட்டும் இவர்களில் ஒருவர்>   ஐ. நா. மனித உரிமை சபையின்>   சிறுபான்மையினருக்கான உரிமை என்ற நிசழ்ச்சி நிரலுக்கு கீழ் உரையாற்றுவதற்கு தனது பெயரை பதிவு செய்து கொண்டார்.

 

இவ் நிகழ்ச்சி மனித உரிமை சபையில் காலம் கடத்தி 20ம் திகதி நடந்த காரணத்தினால்>  கோமாளிகளது பத்திரிகையாளர் மாநாடு எனப்படும் பிரச்சார கூட்டமும்>   சிறுபான்மை விடயமும் ஒரே நாளில் நடைபெற்ற காரணத்தினால்>   இவர் சபையில் உரையாற்றுவதை தவிர்ந்து கொண்டார்.

 

தற்செயலாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் இச் செயலில் ஈடுபட முன்வந்திருந்தால்>  சுயமாக சிந்திக்க முடியாத தமது சில புலம் பெயர் தேசத்து  சகாக்கள் மூலம்>   இவ் விடயத்தை காட்டு தீபோல் பரப்பி>   தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கரி பூச முனைந்திருப்பார்கள்.

 

இவர்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற் திட்டத்தில்>   சுயநிர்ணய உரிமைக்கான விடயம் இல்லையென நொண்டிச் சாட்டு கூறி கூட்டமைப்பிலிந்து விலகியவர்கள்.

 

நாம் இவ்விடயம் மூலம்>   மக்களது அரசியல் நிலைமைகளை அங்கு கூறுகிறோம் என்பதை நாம் மறைக்கவில்லை. ஆனால் நாங்கள் யாரும் சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக மக்களுக்கு ஒரு பொழுதும் நடித்தது கிடையாது.

 

சர்வதேச பௌத்த நிறுவனம்

 

ஐ. நா. மனித உரிமை சபை நடைபெற்றவேளையில்>   மார்ச் 20ம் திகதி>   ராஜபக்சா அரசிற்கு ஆதரவான>   சர்வதேச பௌத்த நிறுவனம் எனும் சிங்களவர்களினால் நடாத்தபடும் அமைப்பு>   ஓர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இவ் கூட்டம் பற்றி>   25வது கூட்ட அமர்வு ஆரம்பமாகிய மார்ச் 3ம் திகதியே பலருக்கு தெரியும். ஆனால் இக்கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே>   ஐ. நா.வின் விளம்பரம் மூலம் சகலரும் அறிவார்கள்.

 

ஆனால் இக் கோமாளிகள்>   சர்வதேச பௌத்த நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதே தினத்தில் அதே நேரத்திற்கு>   ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு எனப்படும்தமதுபிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

 

இதனால் மனித உரிமை சபையில் பங்கு கொள்ளும் ஏறக்குறைய 40 தமிழர்களில்>  நான் உட்பட மூவர் மட்டுமே>  சிங்களவர்களின் சர்வதேச பௌத்த நிறுவனத்தின் கூட்டத்திற்கு செல்ல முடிந்தது.

 

மனித உரிமை சபையில் கலந்து கொள்ளும் தமிழர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு>   எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளை சர்வதேச மேடையான ஐ.நா.வில் கூறவிடில்>   தமிழர்கள் ஜெனிவா செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 

வன்னி பாரளுமன்ற உறுப்பினர்

 

உண்மையில்>   வன்னியிலிருந்து ஜெனிவா வருகை தந்திருந்த பாரளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன்>இவ் கூட்டத்திற்கு வருவதற்கு சம்மதித்திருந்த பொழுதும்>   அவ் கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த காரணத்தினால்>   இவர் அக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டினேன்.

 

அக் கூட்டத்தில்>   வழமைபோல் தமிழர்களது சரித்திரம் திரிவு படுத்தப்பட்டு>   பொய்யான தகவல்கள் பொய்யான புள்ளி விபரங்களை கூறி>   சிறிலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கைதீவின் சரித்திரத்தையே முன்பு அறியாது அங்கு கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்கள்>  தமிழீழ விடுதலைப் புலிகளையும்>   தமிழ் மக்களையும் மிகவும் கொடியவர்களாகவே எண்ணுவார்கள்.

 

இவ்வேளையில் அங்கு சமூகமளித்திருந்த நாம் மூவரும்>   தமிழர்களது சரித்திரம் விடுதலை போரட்டத்தின் உண்மைகளை அங்கு கூறி>   நிலைமைகளை தெளிவு படுத்தியதும்>   அங்கு ஓர் பூகம்பே வெடித்துவிட்டது.

 

இவ் கூட்டத்தில் சிங்களவர்களுக்கு ஆதரவாக>   கூலிக்கு மர்படிக்கும் சுவிஸ்நாட்டில் வாழும் ஒட்டுக்குழுவை சார்ந்த ஒரு தமிழர்>   தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சா  அரசிற்காக தமிழில் வாக்காளத்து வாங்கினார். அங்கு கூடியிருந்தவர்களில் நால்வர் தவிர்ந்த வேறு யாருக்கு இவரது அரட்டையும் அலட்டலும் விளங்கவில்லை.

 

இதை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த ஓர் சிங்கள பத்திரிகையின் நிருபாருக்கும் எனக்கும்இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இவரினால் விவாதம் செய்ய முடியாத காரணத்தினால்>   இவர் மிகவும் கெட்ட வார்த்தையை அங்கு உபயோகித்தது மட்டுமல்லாது>   முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போம்நீ அங்கு வந்தால் ஒன்றில் சிறைக்கு செல்வாய் அல்லது மிகவும் மோசமான நிலையை சந்திப்பாய் என என்னை மிரட்டினார்.

 

மிகவும் வெட்கமான விடயம் என்னவெனில்>   சிறிலங்கா அரசும்>   ஜனதிபதி ராஜபக்சா அரசும் புலம் பெயர் வாழ் தமிழர்கள்>   சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென கூறி சிறிலஙகவிற்கு வருமாறு அழைக்கும்  அதேவேளை>   இந்த இனத்துவேசி>   முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போமென சவால் விடுகிறார்.

 

நாசகார வேலை

 

யாதார்தமான உண்மை என்னவெனில்>   ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் பத்திரிகை மாநாடுகள்>  பிரச்சாரக் கூட்டங்கள் என்றும் விரும்பிய வேளைகளில் நடத்த முடியும். ஆனால் ஐ. நா. மண்டபத்திற்குள் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்கள்>   மனித உரிமை சபை வேளைகளிலேயே நடத்த முடியும்.

 

அத்துடன்>   இவ்வேளைகளிலேயே>   சர்வதேச மேடைகள் அற்ற தமிழர்களாகிய நாம்>  சிங்களவர்களினால் நடாத்தபடும் சர்வதேச பௌத்த நிறுவனம் போன்ற அமைப்புக்களின் சிறிலங்கா அரச பிரச்சாரங்களை முறிஅடிக்க முடியும்.

 

இவ் நான்கு கோமாளிகள் முற்கூட்டி திட்டமிட்டபடி>   எந்த தமிழர்களும்>   சிங்களவர்கள் நடத்திய இக் கூட்டத்திற்கு செல்ல முடியாது போயிருந்தால்>   சிங்களவர்கள் பெரும் வெற்றி கொண்டாடியிருப்பார்கள்.

 

இக் கோமாளிகளுக்கு இவ் கால>   நேரம் உண்மையில் முக்கியனதாகவிருந்தால்>   இவர்களது பிரச்சார கூட்டம் பற்றி எந்தனை சுவிஸ்நாட்டின் பத்திரிகையோ அல்லது வெளிநாட்டு பத்திரிகையோ செய்திகள் வெளியிட்டிருந்தனா?.

 

மிக வேடிக்கையான விடயம் என்னவெனில்>   இவர்களது கூட்டம் சில தமிழ் ஊடகங்கள் மூலமாக நேர் ஒழிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ் வேளையில் பிரான்ஸின் கல்விமானும்>   பிரான்ஸ் அரசிடம் செவளியே பட்டம் பெற்ற>   காலாநிதி ஜோன்-மரி யூலியா (சுகிர்தராஜா)>   இவர்களது நிலைப்படுகள்>   நாட்டில் வாழும் மக்களது எதிர்காலம்>   இவ் தீர்மானத்தை கைவிட்டு விட்டு வேறு என்ன செய்ய முடியும் போன்ற கேள்வி கணைகளை தொடுத்ததும்>   ஊடகங்களில் நேரடி ஒழிபரப்பு யாவும் உடன் துண்டிக்கப்பட்டதுடன்>   பதிவு நாடாக்கள் யாவும் நிறுத்தப்பட்டது. அத்துடன் அங்கு எந்த கேள்வி பதில்களும் நேரடி ஓழிபரப்பு செய்யப்படவில்லை.

 

அதேவேளை இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம்இவ் தீர்மானத்தை முன்வைத்துள்ள அமெரிக்காவிற்கு நாம் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோமென கூறியதும்இவ் கோமாளிகளினால்இதுவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

இவர்கள் தான் தமிழர் கூட்டமைப்பின் ஜனநாயகம் பற்றி குறை கூறுபவர்கள்!

 

குழப்ப நிலை

 

எது என்னவானாலும்>   தமிழரிடையே அமெரிக்க தீர்மன விடயத்திலும் ஐக்கியம் இல்லை என்பதை அரங்கேற்றும் நோக்குடன் ஜெனிவா வந்த கோமாளிகள்> தமது திட்டத்தை திறம்பட நிறைவேற்றினார்கள்.

 

இதனால்சில நாடுகள்>   சில தமிழர்களும் ஜனதிபதி ராஜபகசாவும் விரும்பாத இவ் தீர்மனத்தில் தாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டுமென கூறி>   இவ் தீர்மானத்திற்கு சார்பாக தமது வாக்குகளை பதிவு செய்யவில்லை.

 

கடந்த தேர்தலில் இக் கோமாளிகளுக்கு 5000 வாக்குகள் தான் கிடைத்தது என்பதை இவ் நாடுகள் அறிந்திருக்கவில்லை. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இவர்களை ஆதரிப்பவர்கள் மிக அண்மைகாலங்களில் பல நோக்குகளுடன் அரசியல் தெரியாது அரசியலுக்கு வந்தவர்களும்>   தாமாக சிந்திக்க முடியாதவர்களுமே.

 

மனித உரிமை சபையில் சிறிலங்கா மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் - சீனா>   பாகிஸ்தான்>   ராஷ்யா>  இந்தியா போன்ற நாடுகள் ஆற்றிய உரைகளை இவர்கள் ஒழுங்காக கேட்டிருப்பார்களென நம்புகிறேன்.

 

ஐ.நா.வில் கூடியிருந்த சில தமிழர் கூறியதாவது>   இவர்கள் தமிழர் தேசிய கூட்மைப்பிடம் படுதோல்வி அடைந்தவர்கள்>   ஆகையால் தமிழர் தேசிய கூட்மைப்பு ஆதரிப்பதை எதிர்பதும்;> அவர்கள் எதிர்பதை ஆதரிப்பதுமே இவர்களது கொள்கையாம்.

 

இன்றுவரை இவர்கள் தமிழர்களுக்கு நாட்டில் எதை உருப்படியா செய்தார்களென சிலர் வினவினார்கள்.

 

பத்தரிகையாளர் மாநாடு நடத்துவதும்>   தமிழர் தேசிய கூட்மைப்பை குறை கூறவதும்>  பிழைபிடிப்பதுமே இவர்களது நாளாந்த வேலை திட்டமென வேறுசிலர் கூறினார்கள்.

 

நடந்து முடிந்த 25வது கூட்டத் தொடரில் ஏறக்குறைய 40லிருந்து 50 வரையிலான தமிழர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் சிலர் சிறிலங்கா அரசிற்கும் ராஜப்சாவிற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்பவர்கள். இன்னும் சிலர்>   வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல்>  படங்கள் சேர்ப்பவாகளா காணப்பட்டார்கள்.

 

தற்செயலாக அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியில் முடிந்திருந்தால்>   இக் கோமளிகள் மக்களுக்கு என்ன ஆறுதலை>   எதிர்காலத்திற்கான என்ன வழிமுறைகளை கூறியிருப்பார்கள்இன்று வடக்கு கிழக்கு சிங்களமயமாகி வருவது இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

 

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள்>   பேய்காட்டப்படுகிறவன் இருக்கும் வரை>  பேய்காட்டுகிறவனும் இருப்பனாம்.

 

இறையாமை

 

ஓரு நாட்டினுடைய இறையாமை பற்றி ஐ. நா. தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதோ இல்லையோ>  இவற்றை மதித்தே பிரேரணைகள் நிறைவேற்றப்படுத்தப்படுகின்றன.

 

சிறிலங்கா மீதான அமெரிக்கவினுடைய தீர்மானத்தின் முன்னுரை பந்தியில் சிறிலங்காவின் இறையாமை பற்றி கூறப்பட்டுள்ளது.

 

இன்று ராஷ்யா>   ஊக்கிறேனின் இறையாமை மதிக்காது தனது படைகளை ஊக்கிறேனுக்குள் நகர்த்தியுள்ளது. இவ் நகர்வை சிறிலங்கா ஆதரிக்கிறது. இவ்வேளையில் சிறிலங்கா எப்படியாக தனது இறையாமை பற்றி பேச முடியும்?

 

மனித உரிமை சபையில் இவ் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டு - பல நாடுகள்>  சர்வதேச அமைப்புக்கள்>   சர்வதேச வல்லுனார்கள்>   மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

 

இவ்விடயத்தில சீனா>   பாகிஸ்தான்>   ராஷ்யா>   கியூபா>   வெனிசூலா ஆகிய நாடுகளுடன் இணைந்து இவ் தீர்மானத்தை விவாதிக்கப்படதெனவும்>   10வது பந்தியை நீக்க வேண்டுமென இந்தியா வாக்களித்தாதன் ரகசியம் என்ன?

 

இவ் தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலைவகித்துள்ளதற்கு மேலாக>   வாக்களிப்பதற்கு முனனர்இந்தியா தூதுவரின் உரையில் பல உண்மைகள் முடிமறைக்கப்பட்டுள்ளது.

 

இவ் தீர்மானத்தை வெற்றியின் அடிப்படையில் ஆராயும் பொழுது>   சீனா>   இந்தியா> பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவு இல்லாது>   அவ் பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னால் தனித்து நின்று வெற்றியடைய முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதா?

 

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

05-04-2014

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.