Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கத்தி" ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா?
 
ஈழத்தமிழரைச் சித்தரிக்கும் சந்தோஷ் சிவனின் ’இனம்’ திரைப்படத்துக்கு தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க... மார்ச் 31-ம் தேதியுடன் அப்படத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார், படத்தின் தமிழக வெளியீட்டாளரான லிங்குசாமி. இந்த நிலையில், விஜய் நடிக்கும் "கத்தி' படத்தின் மூலம் இன்னொரு சர்ச்சை பெரிதாகியுள்ளது. 
kaththiinside1.jpg
 
ஈழ இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர்தான், "கத்தி' படத்தின் தயாரிப்பாளர் என்பது சர்ச்சைக்கான காரணம். பணத்துக்காக இனக் கொலையாளியின் கூட்டாளி படத்தில் விஜய் நடிக்கலாமா என பல நாடுகளிலும் தமிழின உணர் வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  "துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் முருகதாசும் விஜய்யும் இணைந்துள்ள படம் "கத்தி'. விநியோகஸ் தர்கள் மத்தியில் ஆர்வத் தைத் தூண்டிய இந்தப் படத்தை, ஈழத்தமிழர் நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல்தான் தயாரிப்பதாக முதலில்  அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்கத்தாவில் "கத்தி' ஷூட்டிங்கும் தொடங்கிவிட்ட நிலையில்... இன்னொரு ஈழத்தமிழர் நிறுவனமான ’லைக்கா மொபைல்’கம்பெனியும் இந்தப் படத் தயாரிப்பில் இணைவதாக அறிவிக்கப் பட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. 
 
லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரிந்தது தான். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருகிறார் என்றும் இதற்காக சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட இங்கிலாந்து தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு மாதம் 5 ஆயிரம் பவுண்டுகள் தருகிறார் என்றும் விவரங்களை அடுக்குகிறார்கள், இன உணர்வாளர்கள்.

kaththiinside.jpg

 

""எங்கட மக்களைக் கொன்னு குவித்த ராஜபக்சேவுக்குத் துணைபோகும் சுபாஷ்கரன் அல்லிராஜா, ஒரு தமிழன். அவருடைய தந்தையார் அரிசி ஆலை வைச்சிருந்தார். அவர் எங்கட மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை வலுப்படுத்த, நிதி திரட்ட பிரான்சுக்குப் போனார். போனவர் ஐரோப்பா முழுமைக்கும் தன்னோட வியாபாரத்தை விரிவுப்படுத்தினார். இனப்படுகொலைக்குப் பிறகே இலங்கைக்கு வந்தார். அரச பாதுகாப்போடு, இலங்கை அமைச்சர் சனத் ஜெயசூர்யாவோடு உலா வந்தார். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. எங்களால் வாழ்வு பெற்ற ஒருவர், எங்களின் அழிவுக்குக் காரணமான ஒருவரோடு வந்தார் என்றால் அவரும் இனத்துரோகியே! பத்தாத குறைக்கு, தமிழனாகப் பிறந்து ராஜபக்சேவிற்கு ஜால்ரா அடித்து வாழும் முத்தையா முரளிதரனுக்கு பாராட்டும், பணமும் கொடுத்தவர். எங்கள் இனத்திற்கு எதிராக யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவு தருவது அல்லிராஜாவோட வேலை. இப்போ விஜய்யை வைத்து படம் தயாரிக்கிறார். பணத்திற்காக துரோகியானவரின் தயாரிப்பில் விஜய் நடிக்கக்கூடாது. அவரின் படத்தில் விஜய் நடித்தால் அவரும் துரோகியே! பணம் தான் வேண்டுமென்றால் சொல்லுங்கள்... பிச்சை எடுத்தாவது கொண்டுவந்து கொட்டுகிறோம் என விஜய்க்கும் கடிதம் எழுதியுள்ளோம். படத்திலிருந்து விலகாவிட்டால் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்துவோம்'' என்றார் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கோயில் பூசகர், அம்பாறை நிரஞ்சன். 

kathiinside3.jpg

 

லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரனிடம் இதுபற்றி கேட்டதற்கு, ""எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனமும். சனத் ஜெயசூர்யா எங்கள் சேர்மனின் நண்பர், அவ்வளவே. எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஞானம் அறக்கட்டளை மூலம் அரசு தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்துள்ளோம். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார், கவனமாக. நடிகர் விஜய் தரப்போ, இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!
 
- நா.ஆதித்யா
 

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாஸுக்கு ஒரு முப்பது டாலர்கள் அனுப்பிவிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

 

என்னதான் இருந்தாலும் எங்கட விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கும்வரைக்கும் அப்படி எல்லாம் நடக்காது.

 

தவிர, புலம்பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் என வெள்ளையும் சுள்ளையுமா திரிகிறவர்களும் அவர்களது குடும்பமும்தான் நான் வாழும் தேசத்தில் முதலில் படம்பாக்கப்போகிறது. அதைவிடக்கொடுமை, படம் எடுத்து ஓடுறது தமிழீழ விடுதலைக்காக ஒரு துரும்பைத்தன்னும் கிள்ளிப்போடாத ஒரு இளையவர். தொட்டுக்கொள்ள வடை வாய்ப்பன் மட்டின் ரோல்ஸ் பால் தேத்தண்ணி இவைகளையும் வித்து காசாக்கி பெட்டிக்குள் முடக்கிறதுதான் இவர்களது வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

 

ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா?
 
 
ஈழ இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர்தான், "கத்தி' படத்தின் தயாரிப்பாளர் எ

 

 

 

eZNQboU.jpg

 

1fnNHDy.jpg

 

லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரனிடம் இதுபற்றி கேட்டதற்கு, ""எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனமும். சனத் ஜெயசூர்யா எங்கள் சேர்மனின் நண்பர், அவ்வளவே. எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஞானம் அறக்கட்டளை மூலம் அரசு தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்துள்ளோம். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார், கவனமாக. நடிகர் விஜய் தரப்போ, இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

 

ujbefuk7.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
'கத்தி'க்கு ராஜபக்ஷ நிதியுதவி?
செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014 11:35
984029_605618232856354_1096880749_n.jpg
தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'கத்தி' திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால் அத்திரைப்படத்துக்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
சில தினங்களுக்கு முன் சந்தோஷ் சிவன் என்ற கேரள சினிமா இயக்குநர் இயக்கிய 'இனம்' என்ற திரைப்படத்துக்கு தென்னிந்திய தமிழர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அத்திரைப்படம் வெளியிடுவதை அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி தடைவிதித்தார். 
 
இலங்கைத் தமிழர்களை அத்திரைப்படம் மோசமாக சித்தரிப்பதாகக் கூறியே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இனம் திரைப்படம் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. 
 
இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம், விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி திரைப்படத்தைத் தயாரிக்கின்றது. 
 
லைக்கா மொபைல் நிறுவனமானது, ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, இந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார். லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரன் அல்லி ராஜா தமிழர் என்றாலும், ஜனாதிபதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்று இந்திய செய்திகளில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட விஜய்யின் கத்தி திரைப்படத்தில், இப்போது லைக்கா மொபைல் நிறுவனமும் இணைந்துள்ளது. 
 
'தன்னை இலங்கைத் தமிழர்களின் காவலனாகச் சித்தரித்துக்கொண்ட விஜய்க்கு இந்த உண்மை தெரியாதா? அல்லது தெரிந்தே இப்படியொரு துரோகத்துக்கு துணை போகிறாரா?' என்ற கேள்விகளோ இந்த திரைப்படத்தை எதிர்க்க தமிழர்கள் தயாராகி வருவதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இது குறித்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், 'எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான் இந்த படத் தயாரிப்பு நிறுவனம். கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியதான் எங்கள் சேர்மனின் நண்பர்.
 
எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர் சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரச தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்து வருகிறோம். இது இனத் துரோகம் அல்ல. மேற்கொண்டு பேச முடியாது' என்று ரவீந்திரன் கூறியுள்ளார். (தற்ட்ஸ்தமிழ்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.