Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டமன்ற தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் நனறி

Featured Replies

செஞ்சோலை சிறார் படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசர கால சட்ட நீட்டிப்பு மசோதா மீதான விவாத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தி.மகேஸ்வரன் பேசியதாவது: கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் வர்த்தகர்களை சிறிலங்கா இராணுவத்தினரே கடத்துகின்றனர். துணை இராணுவக் குழுவினர் கடத்தியதாக கூறினாலும் அவர்களுக்கு அலுவலகம் திறக்க அனுமதித்த அரசாங்கமே அதற்குப் பொறுப்பு. சிறிலங்கா அரசாங்கம் இன்று காடைத்தனமான சர்வதிகார ஆட்சியை நடத்துகிறது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளனர். இதற்கான விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.

எவ்வளவு காலம்தான் கடத்துவீர்கள்? கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு ரூ. 4 கோடிக்கும் மேல் கப்பம் பெறப்பட்டுள்ளது. ஆனால் அந்த வர்த்தகர் விடுவிக்கப்படவில்லை. மலையக மக்கள் முன்னணியின் சிவகாந்தன் கடத்தப்பட்டுள்ளார். அவர் எங்கே என்று அரசாங்கம் பதில் கூற வேண்டும். புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறும் சிறிலங்கா அரசாங்கமே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. திருகோணமலை நீதிமன்றிலிருந்து மூதூர் படுகொலை வழக்கு அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்டது. தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை விடயத்தில் ராஜீவுக்குப் பின்னர் தமிழக மக்கள் தலையிடமாட்டார்கள் என்ற எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் செஞ்சோலை படுகொலைக்காக அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார் தி.மகேஸ்வரன்.

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பேசியதாவது: இலங்கையில் பூனைக்கு விளையாட்டு எலிக்கு மரணம் என்ற நிலைமைதான் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழர்களைக் கொல்லவும் கடத்தவுமே அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள். தமிழர்களின் கடத்தலுக்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையே காரணம். இதற்கு அரசாங்கமே பொறுப்பு. அனுராதபுரத்துக்கு மூதூர் வழக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. கொழும்பில் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால் கொடுங்கோல் அரசாங்கம்தானே நடைபெறுகிறது என்றார் மனோ கணேசன்.

http://www.nitharsanam.com/?art=20226

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.