Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடைக்கு அமெரிக்க அரசே காரணம் முன்னாள் பாதுகாப்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இந்தியாவில் தொடர்வதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வற்புறுத்தலே காரணம் எனத் தெரிவித்துள்ள இந்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் இலங்கை அரசால் கோரப்பட்ட இராணுவ உதவி எதனையும் அன்றைய வாஜ்பாய் அரசால் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் ஆழம் தெரிந்தவர் என்றும்

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின்போது பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஜோர்ஜ் பெர்னாண் டஸ் தமிழக நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலே மேற்கண்ட தனது கருத்து களையும், தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

அந்த செவ்வியின் முழு வடிவமும் வரு மாறு:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தின்போது இலங்கை அரசால் போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவ உதவிகள் என்பன எம்மிடமிருந்து கோரப்பட்டன. இவ் விடயத்தில் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டபோதும் எந்தவொரு இராணுவ உதவி களையும் வழங்க நாம் முன்வரவில்லை.

மேலும், இலங்கைப் பிரச்சினை விட யத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடா விடினும் அங்கு நடைபெறும் அனைத்து விட யங்கள் சம்பவங்களை டில்லி வெளியுறவுத்துறை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இதுவரை காலமும், இலங்கை அரசின் சிங்களப் பிரதிநிதிகளை மட்டுமே இந்தியத் தரப்பு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரி கள் சந்தித்து வந்தனர். எனினும், முதன்முறையாக இலங்கைத் தமிழ் எம்.பிக்களைச் சந்திக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவற்றிலிருந்து, இலங்கை விடயத்தில் இந்திய மத்திய அரசு மிகவும் கவனமாக நிதானமாக காய்நகர்த்துவதை அவதானிக்கலாம் என்றார்.

கே: இலங்கை மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மன்மோகன் சிங் அரசின் அணுகுமுறை எப்படியுள்ளது?

ப: இலங்கையில் வசிக்கும் அப்பாவித் தமிழர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, தமிழர்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர புதிய அணுகுமுறையில் அமைந்த ஒரு உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கே: புலிகள் அமைப்பின் மீது தடை இருக்கும்போது இந்தியா தலையிடுவதில் சிக்கல் இருக்கிறதே?

ப: புலிகள் அமைப்புக்கு தடை நீடிப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகியவற்றின் நிலைப்பாடுகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு இந்தியாவும் அந்த வழிகளிலேயே நடக்கக் கூடாது. அவர்களுக்கும், நமக்கும் வித்தியாசம் இருந்தாக வேண்டும். இலங்கையில் மற்றவர்களின் விருப்பங்கள் வேறு, நமது தேவைகள் வேறு.

கே: இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு ராஜீவ் கொலைக்கு முன்; ராஜீவ் கொலைக்கு பின் என்று ஆகியுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட பலரும் கூறுகின்றனரே?

ப: இவ்விடயத்தில் காங்கிரஸ் தான் இரட்டை வேடம் போடுகிறது. ராஜீவ் கொலையில் இதே கருணாநிதி மீது சந்தேகத்தைக் கிளப்பியதும் காங்கிரஸே. இதன் காரணமாகத்தான் குஜ்ரால் தலைமையிலான ஒரு மத்திய அரசையே 1996ஆம் ஆண்டு காங்கிரஸ் கவிழ்த்தது. ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமே தி.மு.கதான் என்று தமிழகத்தில் காங்கிரஸ் பிரசாரமே செய்தது. எந்த தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற வேண்டுமென்று கோஷம் கொடுத்த காங்கிரஸ், அதே தி.மு.கவின் அமைச்சர்களோடு மத்தியில் ஆட்சி நடத்துகிறது. எனவே, ராஜீவ் கொலைக்கு முன், பின் என்று ஒன்றும் கிடையாது.

கே: இலங்கை அரசுக்கு இரண்டு இராணுவ ராடர்களை இந்தியா வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தவிர சிங்கள பொலிஸாருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறதே. அதைப் பற்றி...?

ப: வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூட்டணி ஆட்சியில் நான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது போர்க்கப்பல்கள், கண்காணிப்பு ராடர்கள் உள்ளிட்ட இராணுவத் தளபாடங்கள் தரவேண்டுமென்று இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம். இவ்விடயத்தில் கடுமையான நெருக்கடி எங்களுக்கு வந்தபோதிலும் நாங்கள் உறுதியாக மறுத்துவிட்டதால், இலங்கை அரசு எங்கள் மீது கோபமாகக்கூட இருந்தது. தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியா இருக்க வேண்டுமே தவிர, தமிழர்களைத் துன்புறுத்துபவர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கக்கூடாது.

கே: இலங்கை விடயத்தில் புலிகள் அமைப்பைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு தீர்வைக் காண இந்தியா விரும்புவது எந்தளவுக்கு பலன் தரும்?

ப: தமிழர்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பைத் தள்ளிவைத்துவிட்டு எப்படி தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்திவிட முடியும்? எனவே, புலிகள் அமைப்பு இல்லாமல் தீர்வு காண்பதென்பது சரியான முடிவாக இருக்காது.

கே: இலங்கைப் பிரச்சினையில் தமிழகத் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லையே. உங்களின் பழைய நண்பர்கள் கருணாநிதி, வைகோ போன்றவர்களை ஒருங்கிணைக்க நீங்கள் முயல்வீர்களா?

ப: உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் 1980 மற்றும் 85ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் இலங்கை விவகாரத்தில் ஒன்றுசேர்ந்து பணியாற்றினோம். அதுபோன்ற முயற்சி இப்போதும் தேவை. ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் என்னால் இது முடியுமா என்று தெரியவில்லை என்றார் பெர்னாண்டஸ்.

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

þó¾¢Â¡Å¡ø ±ô¦À¡ØÐõ ¯ýÉ¢ôÀ¡¸ ¸ÅÉ¢ôÀ¨¾ò¾Å¢Ã

§ÅÚ ´ýÚõ ¯ÕôÀÊ¡¸ ¦ºöÂò¦¾Ã¢Â¡Ð

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியெனில், இவர் புலிகளின் இந்தியத் தடையை நீக்கச் சொல்லி பகிங்கரமாக எதிர் கட்சி என்ற முறையில் அறிக்கை விடுகிறாரோ? ஆட்சியில் இருக்கும்போது இப்படி கருத்து தெரிவித்திருக்கலாமே? எங்கள் லக்கிலூக் இதை விளங்கப்படுத்துவாரா?

þó¾¢Â¡Å¡ø ±ô¦À¡ØÐõ ¯ýÉ¢ôÀ¡¸ ¸ÅÉ¢ôÀ¨¾ò¾Å¢Ã

§ÅÚ ´ýÚõ ¯ÕôÀÊ¡¸ ¦ºöÂò¦¾Ã¢Â¡Ð

உன்னிப்பாக அவதானிப்பதோடு நிறுத்திக் கொண்டு அநியாயமாக இன்னொரு தலைவரை இழப்பதைத் தவிர்க்கலாம் என்று நினைத்திருக்கலாம்.

என்னால் நீக்கப்பட்டது

என்னால் நீக்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.