Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!!

Featured Replies

சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி! தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதி. 'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!! தமிழுக்கு இழுக்கு என நினைக்கும் எந்த செயலையும் அறவே ஒதுக்கக் கூடியவர். தனக்கு வரும் எத்தனையோ வாய்ப்புகளை, 'இந்தத் தம்பிக்கு கொடுப்பா' என்று கூறிச் செல்பவர். வெகு அரிதாகத்தான் பாடல் எழுதவே அவர் ஒப்புக் கொள்கிறார். லிங்குசாமியின் நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார் இனம் என்ற படத்தை அவர் வெளியிடும் வரையில். இனம் படத்தில் தமிழருக்கு எதிராக சந்தோஷ் சிவன் செய்த ஈனத்தனமான அரசியலைப் புரிந்து, அந்த கூட்டத்தை அறவே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் அறிவுமதி. 'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!! லிங்குசாமி இப்போது எடுத்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா ஹீரோ. பெரிய பட்ஜெட் படம். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு, இனம் படத்தை எடுத்த அதே சந்தோஷ் சிவன்தான். இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு அறிவுமதிக்கு மெட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார் லிங்குசாமி. அதைக் கேட்கவும் விரும்பாத அறிவுமதி, மெட்டை திருப்பியனுப்பியதோடு, "லிங்குசாமி, இனம் படத்தை எடுத்த உங்களைப் போன்றவர்கள் படங்களில் பாட்டெழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம். இனம் படத்தை எடுத்த சந்தோஷ் சிவன்தானே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அதில் நான் எப்படி பாடல் எழுத முடியும்..!" என்று திருப்பிக் கேட்டுள்ளார். தமிழ் தமிழ் என வாய் கிழியப் பேசும், வர்த்தக ரீதியில் பெரிய கவிஞர்களாகப் பார்க்கப்படும் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிதான் இனம் படத்துக்கு பாட்டெழுதினார். வைரமுத்து அந்தப் படத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம். அறிவுமதி... பெயரைப் போலவே தன்மானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கவிஞரே.. உங்கள் பெருமையை இந்த தமிழினம் அறியட்டும்!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/arivumathi-the-self-respect-tamil-poet-197630.html
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களில் சிலர் அதாவது தம்மை அறிவிஜீவிகளாக நடுத்தரவர்க்கத்திலிருந்து வந்து காட்டிக்கொள்வதற்காக, பிரித்தானியாவின் காலணி ஆதிக்கத்திலிருந்த நாடுகள் விளையாடும் அடிமைத்தனமும், தற்காலத்தில் பந்தயம் கட்டுபவர்களாலும், விளம்பர நிறுவனங்களாலும் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கக்கூடிய, அதன் ரசிகர்களை போதையிலேயே வைத்திருந்து வன்முறையைத் தூண்டும்வகையில் செயற்படவைக்கும் கிரிக்கெட் விளையாட்டை வெறும் விளையாட்டாகவே பார்க்கவேண்டும் இதில் இனத்துவேசம் காட்டக்கூடாது, என்ன சொன்னாலும் சிறீலங்கா துடுப்பாட்ட அணி அந்தமாதிரி எனச் சொல்லும் தமிழுலகத்தில்.........

 

இப்படியும் தூ எனக்காறி உமிழ்ந்து தனது இருப்பை ஒரு தமிழன் வெளிக்காட்டுவதற்கு, ஆத்தாவிடம் குடித்தபாலில் கொஞ்சம் வீரமும் தன்மானமும் சேர்ந்து இருக்கவேண்டும்.

 

கவிஞர் அறிவுமதி அவர்கள் லிங்குசாமி வகையறாக்களது முகத்தில் மாத்திரம் காறி உமிழவில்லை எமது முகத்திலும்தான்.

 

நாங்கள் இப்பவே ஆயத்தமெல்லோ, லிங்கசாமியின் தயாரிப்பான உத்தம வில்லனையும், அவரது இயக்கத்தில்வரப்போகும் சூரியாவின் அடுத்த அஞ்சானையும் வரவேற்பதற்கு.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.