Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா சாட்சியங்களை அச்சுறுத்தவா செல்வதீபன் மீது தாக்குதல்!? சாட்சியம் இணைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா சாட்சியங்களை அச்சுறுத்தவா செல்வதீபன் மீது தாக்குதல்!? சாட்சியம் இணைப்பு!

 

 

selvatheepan1-300x184.jpgஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஊடகவியலாளர் ஒருவர் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ மற்றும் ‘வலம்புரி’ பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் கடந்த இரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தபோது புறாப்பொறுக்கி சந்தியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அருகிலே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரோடு உரையாடலை ஏற்படுத்தி அவர்தான் செல்வதீபன் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகி விழுந்த பின் அவர் எழுந்து அருகிலிருந்த பற்றைக்குள் ஓட முயன்றபொழுது மீண்டும் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கடைசி பஸ் வண்டியின் சாரதி வீதியோரத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்திருப்பதைக் கண்டு பஸ்ஸை நிறுத்திய போது தாக்கியவர்கள் தப்பியோடியுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்ய முயன்றுள்ளனர்.

எனினும், காயமடைந்தவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனப் பொதுமக்கள் கூறி அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களைப் பதிவு செய்த பொழுது, காணாமல் போன தனது சகோதரர் தொடர்பாக இவரும் அங்கும் சாட்சியம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாகவே சந்தேகத்திற்குரிய நபர்களால் தான் பின்தொடரப்படுவதாக தனது பத்திரிகை அலுவலகங்களில் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு, நெல்லியடி பொலிஸ் நிலையத்திலிருக்கும் தனக்குத் தெரிந்த பொலிஸார் சிலரிடம் இது தொடர்பாக அவர் கூறியிருந்திருக்கிறார்.

கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் செல்வதீபன், தானும் தனது சகோதரனும் கடத்தப்பட்டமை குறித்து சாட்சியமளித்திருந்தார். அவர் அளித்த சாட்சிய வாக்குமூலம் வருமாறு:-

சிறிலங்கா படையினரால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டுக் காணாமற்போன தனது சகோதரனான சிவஞானம் பார்த்தீபனை மீட்டுத் தந்து தனது குடும்பத்தினதும் தாயினதும் கண்ணீரைப் போக்குமாறு காணாமற்போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவிடம் யாழ்ப்பாண ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே தானும் சிறிலங்கா புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கின்ற செல்வதீபன் அப்போது கருணா குழுவிற்கு தலைமை தாங்கிய இனியபாரதி என்பவரினால் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பின்னர் பெரும்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டே இனியபாரதி தன்னை விடுவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வெல்வாயப் பகுதியில் வங்கி ஒன்றில் பணப்பரிமாற்றம் செய்துவிட்டு புத்தள பாதையினூடாக பயணம் செய்த வேளை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட தனது சகோதரன் சிவஞானம் பார்த்தீபன் இன்றுவரை எங்கு உள்ளார் என தெரியாது தமது குடும்பம் தேடியலைவதாக அவர் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டம் வெள்ளவாய பகுதியில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய தனது சகோதரன் கடந்த 2008ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 திகதி காணாமற்போனார் என்றும் அவர் நன்றாக சிங்களம் பேசக்கூடியவர். பலவருடங்களாக சிங்கள மக்களுடன் அதிகமாக பழகி வாழ்ந்தவர். ஆனாலும் தமிழ் இளைஞர் என்ற காரணத்துக்காக இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை காணாமல் போயுள்ளார் என அவர் தெரிவித்தார்.

அதேபோன்று தன்னையும் வெல்வாயப் பகுதியில் வைத்து 2007 ம் ஆண்டு வெள்ளைவானில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுத முனையில் கடத்திச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணாவின் ஆயுதக் குழுவிடம் ஒப்படைத்தனர் என தெரிவித்தார்.

அப்போது அக் குழுவிற்கு தலைமை தாங்கிய இனியபாரதி 79நாட்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும் பின்னர் பல இலட்சம் ரூபா பணத்தினை தனது உறவினர்களிடம் பெற்ற பின் பொலநறுவை தொடருந்து நிலையத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தான் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே தனது சகோதரன் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர் என்ற ஒரே காரணத்திற்காகவே எத்தனை அப்பாவிகள் பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகள் அனுபவித்து வருகின்றனர். பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். காலத்திற்கு காலம் விசாரணை என்ற பெயரில் வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்துவரும் எங்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் அவர் சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

http://tamilleader.com/?p=31468

இப்படியான விடையங்களை இனி செய்தியாக எடுக்காமல் உடன் அறிவிக்க வேண்டியவர்களுக்கு அறிவித்து ஆவன செய்யுங்கள். அல்லது மோசமாக இன்னும் தொடரும்... இலங்கையை பயங்கரவாத நாடாக அறிவிக்க இப்படியான செயல்கள் உதாரணமாக அமையும். உங்கள் நாட்டின் அரசுக்களூடன், எதிர்கட்சிகளுடன் சிறந்த உறவுகளை பேணுவதன் மூலம் இலங்கையை வழிக்கு கொண்டுவரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.