Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷெர்பாக்கள் போராட்டம்: இவ்வருட எவரெஸ்ட் மலையேற்றங்கள் ரத்தாகுமா?

Featured Replies

140425111407_everest_sherpas_promo_304x1

மலையடிவாரத்து முகாமில் போராடும் ஷெர்பாக்கள்

 

மலையேறுவோர்க்கு வழிகாட்டிகளாக இருந்துவரும் ஷெர்பா இனத்தார் 16 பேர் சென்ற வாரம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பின்னணியில், தற்போதைய மலையேற்ற பருவத்தில் ஏனையோரின் பயணங்கள் தொடருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

மலையேறச் சென்றிருந்த மற்றவர்களும் எவரெஸ்ட் சிகர அடிவராத்து முகாமிலிருந்து தற்போது கீழே இறங்கிவர ஆரம்பித்துள்ளனர்.

 

ஷெர்பாக்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையும், இமலயலையில் தற்போது காணப்படும் ஆபத்தான சூழலும் இந்நிலைக்கு காரணம்.

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற ஆர்வலர்கள் ஏறுவதற்குரிய காலம் என்பது ஒரு மூன்று மாத காலகட்டம்தான்.

 

ஷெர்பாக்களின் ஊதியம்

 

மலையேறும் ஆர்வலர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்படுகின்ற ஷெர்பாக்கள் இந்த மூன்று மாத காலத்தில் சராசரியாக எட்டாயிரம் டாலர்கள் வரையில் வருமானம் ஈட்ட முடியும்.

ஆசியாவின் வரிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் சராசரி வருமானத்தோடு ஒப்பிடுகையில் இது பல மடங்கு அதிகம்.

ஆனால் மலையேற்ற அனுமதி உரிமங்களை வழங்குவதன் மூலம் வருடா வருடம் பல மில்லியன் டாலர்களை ஈட்டும் நேபாள அரசாங்கத்தின் வருவாயோடு ஒப்பிடுகையில், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதாது என ஷெர்பாக்கள் வாதிடுகின்றனர்.

மலையேற்றத்துக்கான வழிகாட்டி சேவை வழங்கும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு நபருக்கு அறுபதாயிரம் டாலர்கள் என வசூலிக்கின்றன என்ற நிலையில், அதையே ஷெர்பாக்கள் செய்யும்போது அவர்கள் பெறுகின்ற ஊதியம் மிகவும் குறைவுதான்.

 

140424063124_everest_304x171_afpgetty.jp

இறந்த ஷெர்பாக்களின் குடும்பத்தினர் கவலையில் மூழ்கியுள்ளனர்.

 

மலையேற வருகின்ற ஆர்வலர்களுக்காக கயிறு கட்டி பாதையை ஒழுங்குசெய்வதற்காக விடியற்காலையிலேயே சென்றிருந்த ஷெர்பாக்கள்தான் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்தப் பனிச்சரிவில் உயிரிழந்திருந்தனர்.

கடல்மட்டத்திலிருந்து 19000 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் அடிவாரத்து முகாமுக்கு அருகே பள்ளங்களும் பனிப்பாறைகளும் நிறைந்த கும்பு பனியருவி என்ற இடத்தில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டிருந்தது.

மலையேற வரும் வெளிநாட்டு ஆர்வலர்களுடைய பொதி மூட்டைகளை மேலே சுமந்து வந்து தரும் வேலை செய்யும் ஷெர்பாக்கள் ஒரு பருவத்தில் 20 முதல் 25 முறை அடிவார முகாமிலிருந்து அவற்றுக்கு மேலே இருக்கின்ற முகாம்களுக்கு சென்று திரும்ப வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் எதிர்கொள்கின்ற ஆபத்துகள் அதிகம்.

இறந்த ஷெர்பாக்களுக்கு அறிவிக்கப்பட்ட நஷ்டஈடும் போதாது, தங்களின் உதவியைக் கொண்டு பெரும் வருவாய் ஈட்டும் நேபாள அரசு தமக்கு வழங்கும் ஊதியம் போதாது என்றும் முறையிட்டு ஷெர்பாக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையேறும்போது ஆபத்தில் சிக்கிக்கொள்பவர்களை காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகளும் மருத்துவ சிகிச்சை வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் ஷெர்பாக்கள் கோருகின்றனர்.

 

பனிச்சரிவு ஆபத்து

 

140423033006_sp_everest_304x171_afp.jpg

 

தவிர இந்த வருடம் மலைச்சரிவில் ஆபத்து அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மலையேற்ற பயண சேவையில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனங்கள், இந்த வருடம் தாம் செய்வதாக இருந்த பயணங்களை ரத்துசெய்ய, வருடத்துக்கான மலையேற்ற பயணங்கள் ரத்தாகுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.

இந்த வருடம் முந்நூறுக்கும் அதிகமானவர்கள் எவரெஸ்ட் மீது ஏறுவதாக இருந்தது.

ஆனால் அனைத்து பயணங்களும் ரத்து செய்வதாக உத்தியோகபூர்வ அறிவுப்பு எதுவும் இதுவரை வந்திருக்கவில்லை.

1953ஆம் ஆண்டு நியூஸிலாந்து மலையேற்ற ஆர்வலர் எட்மண்ட் ஹில்லரியும், ஷெர்பா டென்ஸிங் நோர்கேவும் எவரெஸ்ட் உச்சியில் முதன்முதலாக கால்பதித்ததன் பின்னர், மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அந்த மலைச் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2014/04/140425_everestclimbing.shtml

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.