Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்போதைய நேரம் இன்மை குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பராமரிக்கப்படாது செய்து விடுகிறது.

Featured Replies

ஐரோப்பியசெய்தியாளர்

life(1)_CI.jpg

நவீன காலங்களில் எப்பொழுதும் நிலையாகக் காணப்டும் நேரம் இன்மையானது, தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தி எதிலும் அவசரத்தையும், முக்கியமான வற்றை மிக விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் எண்ணத்தையும் தந்து விடும் நிலையில், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பராமரிக்கப்படாது போய்விடுவதாக ஆய்வொன்று தெளிவு படுத்த முயல்கிறது.

அமைதியாகவும் மெதுவாகவும் செயற்ப்படுத்தப்டும் விடயங்களே, நிதானமாகவும், விரைவாகவும் தேவையானவற்றை சாதிக்க உதவும் தந்திரமாக உள்ளதென்பதனை மக்கள் அறிந்திருந்தும், அதனைப் பின்பற்றாதது மிகவும் துன்பகரம் ஆனதாகும். உணர்வையும், சக்தியையும் இணைத்து எதையும் கேட்டு அறிந்து கொள்ளக் குழந்தைகளுக்கு, அமைதியான சூழல் தேவைப்படுவதாகக் குழந்தைகள் மன நிலை பற்றிய ஆய்வியல் கூறுகிறது.

குழந்தைகள் எதையும் தாமதித்துப் புரிந்து கொண்டு, அதனை செயற்படுத்தும் தன்மை கொண்டவர்கள். அதற்கான நேரம் அவர்களுக்குத் தரப்பட்டால் மட்டுமே, அவர்களால் நீண்ட காலத்திற்கு நிலையாக நிற்கக் கூடிய வகையில் எதையும் கற்க முடியும் என்கிறது அந்த ஆய்வு. மிக அதிகப்படியான வேகம், எதையும் கவனிக்கும் வலிமையை மட்டுப்படுத்திவிடும்.

அவசரமாக செய்யப்படும் செயல்களை சகலராலும் அந்த நேரத்தில் உணர முடிந்த போதிலும், அது மிகவும் வலிமை குறைந்ததாகவும் எதையும் ஆழமாக மனதில் பதிய இயலாததாகவும் அமையும். குழந்தைகளுக்கு எதையும் அறிந்து, உணர்ந்து செயற்பட அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. அந்த நேரமானது அவர்களது சொந்த நிர்ணயத்திற்குள் அமைதல் அவசியம். மெதுவாக இயங்கும் தன்மை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, குழந்தைகளுக்குப் பெற்றோர் மேல் நம்பிக்கையைக் கொணரும் அடிப்படைத் தளமாகும். எனவே அடிக்கடி வேகத்தைக் குறைத்து, அழுத்தத்தை அகற்றி சகல கடமைகளையும் செய்ய முனையில் நிச்சயம் குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதி பூர்த்தியாக்கப் படுமென்கிறது அந்த ஆய்வு.

தாய் தந்தையரின் சகல கருமங்களிலும் தமக்கும் பொறுப்புண்டு எனும் உணர்வைக் குழந்தைகள் உணரும் படி சிறு வயதிலிருந்து பொறுப்புக்களைப் பங்கிட்டுக் கொள்ளுதல் அவசியம். வீடு துப்பரவாக்கும் வேலை குறிப்பாகத் தாயாருடையதென நம்பும்படியான வளர்ப்பு, அதிகமான வீடுகளிற் காணப்படுகிறது. சகல வீட்டு வேலைகளிலும் பங்கெடுத்துக் கொள்வது குழந்தைகளின் கடமை என்பதனை ஆரம்பக் காலங்களிலேயே புரியவைத்தல் வேண்டும். குழந்தைகளின் அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்து கொள்ளும் பழக்கம், அவர்களை இயல்பாய் சகல விடயங்களிலும் பங்கு கொள்ளும்படியான ஆர்வத்தைத் தரும்.

குழந்தைகள் மனங்களில், பெற்றோருக்கு மட்டும் தான் சகலதையும்  முடிவெடுக்கும் அதிகாரம் உண்டெனும் எண்ணமுண்டு. அதை மாற்றும் வகையில் அவர்களின் அபிலாஷைகளையும் கேட்டு அறிந்து முடிவுகள் சிலவற்றை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எடுக்க முயல வேண்டும். குழந்தைகள் தவறு விடும் பட்சத்தில் தண்டிப்பதற்குப் பதில், பிரச்சனையைப் பேசிப் புரியவைப்பது மிகவும் புத்திசாலித்தனம் மட்டுமல்லாது, குழந்தைகள் மறுபடியும் அப்பிழையை விடுவது தவிர்க்கப்படும்.

குழந்தைகளைத் தண்டிப்பதால் அது பிரச்சனையை வளர்த்து, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை சிதைத்து, கூட்டு இயக்க முயற்சியைத் தளர்த்தி மனவலிமையைக் குழப்பி, குழந்தைகள் தன்னம்பிக்கை இழக்கக் காரணமாகிவிடுகிறது. குழந்தைகளோடு முடிந்தவரை நட்புறவோடு பழகிக்கொள்ள வேண்டும். அடிக்கடி அவர்கள் சாதனைகளைப் புகழ வேண்டும். குழந்தைகள் பெற்றோரின் நடத்தைகளைப் பிரதி பலிக்கும் சக்தி கொண்டவர்கள். பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ, அதையே திருப்பிச் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் குழந்தைகள் என்பதனைப் பெற்றோர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்காத பட்சத்தில், அவர்களை வற்புறுத்தி அதனை நிறுத்தும்படி செய்யாது, தந்திரமாகப் பேசி அதனை அவர்களே நிறுத்தும்படி செய்வது ஒருவகை சாதுரியமாகும்.
எதையும் அவர்கள் சாதிக்கும் சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும். குழந்தைகள் எதைச் சாப்பிட வேண்டுமென்று பெற்றோர் கருதுகிறார்களோ அதனைக் குழந்தைகளோடு பெற்றோரும் சேர்ந்து உண்ணப்பழகிக் கொள்ளல் வேண்டும்.

பெற்றோர் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்க்கும் உயர் விடயங்களைத் தாமும் சேர்ந்து செய்து கொள்ளப் பழகின், குழந்தைகள் நிச்சயம் இவ்வுலகில் உயர்வான முறையில் வளரும். குழந்தைகள் வளர்கிறார்கள் நாம் வளர்க்க வேண்டியதில்லை என அலட்சியமாய் இருந்து விட்டுப் பின் ஒரு காலத்தில் கவலைப்படுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது????

 

 

ஐரோப்பியசெய்தியாளர் மகேந்தி

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106686/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.