Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எமக்கு உதவி வேண்டாம்: சொந்த நிலங்களே வேண்டும்" என்கின்றனர் சம்பூர் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எமக்கு உதவி வேண்டாம்: சொந்த நிலங்களே வேண்டும்" என்கின்றனர் சம்பூர் மக்கள்

 

எமது கஸ்ரங்களுக்கு உதவி வேண்டாம். எம்மை சொந்த நிலத்திற்கு செல்ல விடுங்கள் என சம்பூர் மக்கள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விட்டுள்ளனர்.

சம்பூர் பகுதிக்கு சனிக்கிழமை கிழமை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர் அவர்கள் தங்கியிருந்த மணல்சேனை, பட்டிக்குடியிருப்பு ஆகிய முகாங்களுக்குச் சென்று  அங்குள்ள மக்களை சந்தித்தஅ போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பூர் மக்கள் 4 அகதி முகாம்களில் உள்ளனர். இவர்களை சனிக்கிழமை (10) நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்று பார்வையிட்டோம். கடுமையான வெயிலில் அந்த மக்கள் தகரங்களுக்கு கீழே இருப்பதால் அந்த முகாமிலுள்ள பலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இங்கு குடியிருக்க முடியாமல் பல கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.

மூதூரிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றால்இ சம்பூர் அகதி முகாம்களிலுள்ள பலர் இந்த நோய்க்கு ஆளாகி வைத்தியசாலைக்கு வருவதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம் எங்களை எமது சொந்த இடங்களுக்கு அனுப்பினால் எங்களுடைய அரைவாசி வருத்தம் குறைந்து விடும் என அந்த மக்கள் எம்மிடம் தெரிவித்தனர். 

700 குடும்பங்களைச் சேர்ந்த 3000பேர் இந்த அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களுக்கு எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனமும் உதவி செய்வதற்கு போக முடியாது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவவோ பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கவோ முடியாத நிலை இங்குள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்க வந்த நிறுவனம் ஒன்றினை இராணுவம் வழங்க அனுமதி கொடுக்காது திருப்பி அனுப்பியுள்ளது.

இதேபோல், மீன் வியாபாரியோ, உடு துணிகள் விற்பனை செய்யும் வியாபாரியோ இந்த முகாமுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. 12 கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டியுள்ளது. சம்பூர் மக்களின் சொந்த நிலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதி நினைத்தால் அந்த மக்களின் நிலத்தை அவர்களுக்கு உடன் வழங்க முடியும். தமது சொந்த குடும்ப தேவைகளுக்காக அந்த நிலத்தை வைத்துக்கொண்டு 3000 மக்களின் வாழ்வை சீரழிக்காமல் அவர்களின் பரிதாப நிலையை கருத்திற்கொண்டு சம்பூர் மக்களின் நிலத்தை அவர்களுக்கு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது எனவும் இதன் போது சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

இம் மக்களுடனான சந்திப்பில் மூதூர் பிரதேசசபை உறுப்பினர்களான இராமலிங்கம் ராமேஸ்வரன், வேலாயுதம் மோகன், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், வவுனியா தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன் (பாபு), கூட்டமைப்பின் பிரமுகரான வேலாயுதம் நாகராசா (சங்கர்) ஆகியோரும் கலந்து கொணடனர். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106784/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.