Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல்வீரவன்ச அரசாங்கத்துக்கு கூறும் ஆலோசனை

Featured Replies

விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியாதென்ற `மாயை'யை சம்பூரில் புலிகளை தோற்கடித்ததன் மூலம் படையினர் முற்று முழுதாக தகர்த்தொழித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச, இந்த வெற்றியை உண்மையான வெற்றியாக நிலைநிறுத்த அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விமல் வீரவன்ச இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை, சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றாக தோற்கடித்து, அப்பிரதேசத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர். சம்பூரின் முக்கியத்துவத்தின் காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் அப் பிரதேசத்தை கைப்பற்றிக் கொண்ட புலிகளிடமிருந்து தற்போது அப்பிரதேசத்தின் கட்டுப்பாடு பறிபோயுள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு அதிகமான போர் நிறுத்த காலத்தில் ஆயுத வளம், யுத்த அடிப்படை வசதிகள், ஆளணி பலம் என சகலத்திலும் பாரிய வளர்ச்சி கண்டிருப்பது இரகசியமல்ல. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னரே புலிகள் சம்பூர் பிரதேசத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னரான காலத்தில் அவ்வுடன்படிக்கையை பாதுகாப்பதாக கூறி, புலிகளுக்கு தேவையான விதத்தில் செயற்படும் துரதிர்ஷ்டவசமான நிர்ப்பந்தத்துக்கு பாதுகாப்பு படையினர் ஆளானார்கள். அவர்களது மனத் தைரியம் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

இருப்பினும், இறுதியில் புலிகளை பாதுகாப்புப் படையினரால் இவ்வாறு தோற்கடிக்க முடிந்திருப்பது அவர்களின் மனத் தைரியம், உள்ளிருக்கும் பலம் இன்னும் வீழ்ச்சியடையவில்லை என்பதை எடுத்துக் கூறியுள்ளது.

புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியாதென நாட்டிலுள்ள புலிகளுக்கு சார்பான சில அரச சார்பற்ற நிறுவனங்களும் சில வெளிநாடுகளும் அடிக்கடி தெரிவித்து வந்ததை கேட்டிருக்கிறோம். இரு தரப்பும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாதெனவே அவர்கள் தெரிவித்து வந்தனர். எனினும், தங்களுக்கு மிகவும் குறைந்தபட்ச இழப்புகளுடன் மட்டும் புலிகளை சம்பூரில் பாதுகாப்புப் படையினர் தோற்கடித்ததன் மூலம் அந்த கணிப்பை முற்று முழுதாக தகர்த்தெறிந்துள்ளனர். புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியுமென நிரூபித்துள்ளனர்.

உண்மையில், மாவிலாறு, மூதூர், முகமாலை, கிளாலி மற்றும் ஊர்காவற்துறை போன்ற யாழ் குடாநாட்டுப் பகுதிகளிலும் இன்று சம்பூரிலும் பாதுகாப்புப் படையினர் இதை நிரூபித்து காட்டியுள்ளனர். சிலரால் "பலம் வாய்ந்த" புலிகளென வர்ணிக்கப்பட்டவர்களே இன்று தோற்று தப்பியோடியுள்ளனர்.

சம்பூரில் இருந்து புலிகளை தோற்கடித்து விரட்டியது போல முழு கிழக்கு மாகாணத்தில் இருந்தும் புலிகளை தோற்கடிக்க வேண்டும். உண்மையில், கிழக்கில் மட்டுமல்லாது வடக்கில் அவர்கள் நிலை கொண்டிருக்கும் சகல பகுதிகளில் இருந்தும் விரட்டியடிக்கப்பட வேண்டும்.

புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடிப்பதால் மட்டுமே புலிகளின் பணயக் கைதிகளாக சிக்கி, பிரபாகரனின் திறந்த சித்திரவதை கூடத்தில் இருந்து வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வழங்க முடியும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எதுவும் தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதல்ல. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பிரிவினைவாத பயங்கரவாதத்துக்கு எதிராகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெளிவு.

அத்துடன், தமிழீழத் தாகத்தில் புரண்டு கொண்டிருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தமிழ் மக்களுக்கு அழிவையும் துன்பங்களையும் தவிர வேறு எதனையும் வழங்க முடியாதென்பது தெளிவாகியுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் தலைவிதியை பந்தயம் வைத்து பிரபாகரன் ஆடும் இந்த சூதாட்டத்தில் அவருக்கு வெற்றி பெற முடியாதென்பது தற்போது தேவைக்கு அதிகமாகவே நிரூபணமாகியுள்ளது.

எனவே, பிரபாகரன் மீது எதிர்பார்ப்பு வைத்து காத்திருக்கும் எவரும் இருப்பின், இனிமேலும் அவர் மீது நம்பிக்கை வைத்து ஏமாறாமல் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைக்கிறோம்.

இதேவேளை, புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டுமெனின், அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த தேசத் துரோக போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக விலக வேண்டும். இலங்கை அரசுக்கு பகையாளியாக புலிகளுக்கு நட்பாக இருக்கும் நோர்வே அரசை தூதரக சம்பந்தங்களுடன் மட்டும் மட்டுப்படுத்த வேண்டும். அத்துடன், 1987 இல் பல வந்தமாக சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணம் இரண்டு மாகாணங்களாக அறிவிக்க வேண்டுமென நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அரசியல் ரீதியாக இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போதே சம்பூரில் படையினர் பெற்ற வெற்றி உண்மையான வெற்றியாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் அரசிடம் வேண்டி நிற்கிறோம்" என்றார்

http://www.sooriyan.com/index.php?option=c...d=3397&Itemid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.