Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளைக்கும் நிலவு வரும்…. றமணன் சந்திரசேகரமூர்த்தி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கும் நிலவு வரும்…. றமணன் சந்திரசேகரமூர்த்தி:-

14 மே 2014

நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் இடையில் அகப்பட்டு நிற்கின்றது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம். தமிழர்களின் அரசியல் இலக்குகளை வெற்றி கொள்ளக் கூடிய தளமாக விளங்கும் புலத்தின் மீதான கவனத்தை இலங்கை அரசாங்கம் கூர்மைப்படுத்தியுள்ளதை அண்மைய நகர்வுகள் மூலம் தெளிவாக உணர முடிகின்றது.

புலத்தில் செயல்படும் முக்கிய தமிழ் அமைப்புகளையும் தமிழ் பிரதிநிதிகளையும் தடை செய்வதான அறிவிப்பின் பின்னால் உள்ள அரசியல் மிகவும் நுட்பமானது.

இது புலத்தில் வாழும் சாதாரண தமிழ் மக்களை குழப்பிவிடும் ஒரு உத்தியாகவே நோக்கப்பட வேண்டும்.

தற்போது தீவிரமாக அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள முக்கியமானவர்களின் பெயர்களை கொண்டிராத இலங்கை அரசாங்கத்தின் பெயர் பட்டியல் சாதாரண பொதுமகனுக்கு குழப்பங்களை உண்டு பண்ணிவிடும் நோக்கிலேயோ வெளியிடப்பட்டுள்ளது.

எவரையும் எதற்கும் நம்பமுடியாத நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் தள்ளப்படுவார்கள்.

சாதாரணமாகவே “தமிழ்” மனநிலை கொண்ட தமிழர்கள் இது தான் சமயம் என்று போராட்ட மனநிலைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு சாதாரண வாழ்கை முறைக்குள் தமது வாழ்வை அடைத்துக் கொள்ள முற்படுவார்கள்.

இது தான் இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டும் புலத்தில் உள்ள தீவிர செயல்பாடுகளை கொண்ட தமிழர் அமைப்புகளை தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பது பின்னர் அவர்களை பயங்கரவாத அமைப்புகளாக்கி உலக நாடுகளில் தடை செய்வது.

இது இப்போது தீவிரமடைந்துள்ள சர்வதேச நாடுகளை இலங்கைக்கு எதிராக திருப்பி விடும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் நடவடிக்கைகளை வீரியமிளக்கச் செய்து தன்னை தப்பவைப்பதற்கான இலங்கையின் ஒரு தந்திரோபாயம்.

மறுபுறம் இந்த தடை குறித்து வெளியிடப்பட்டு வரும் மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் எச்சரிக்கைகள் என்பன புலம்பெயர் வாழ்கை முறைக்குள் வாழத் தலைப்பட்டுள்ள தமிழரகளை போராட்டங்களில் இருந்தும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்துள் தள்ளி வைக்கும்.

இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட ஒரு சிலரின் குடும்பத்தினர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தாயகத்தில் வாழும் உறவுகள் குறித்து கரிசனை கொண்டுள்ள புலம் பெயர் செயற்பாட்டாளர்களை பணிய வைக்கும் ஒரு உத்தி.

இதனை சரியான முறையில் நாம் எதிர் கொண்டால் இலங்கையின் இந்த திட்டத்தை முகத்தில் அறைந்து முடித்து வைக்க முடியும்.

தடை செய்யப்பட்ட தமிழர்கள் தமது உறவினர்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல் என்பதை தமது நாடுகளின் அரசாங்கங்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றாக சென்று முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும். இது இலங்கை மீதான அழுத்தங்களை அதிகரிக்கும்.

ஆனால் … நாம் ஒன்றாக போவதா ? அவர் வந்தால் நான் வரமாட்டேன் அவர் பேசும் மேடையில் என் மூச்சுக் கூட படாது அவர் துரோகி நான் தியாகி என்று விறைப்புக் காட்டும் நாங்கள் இதற்கு பின்னரும் இணையா விட்டால் நாம் எல்லோரும் தாயகத்தில் தம்முயிர் தந்த அத்தனை பேராலும் துரோகிகளாய் பார்க்கப்படுவதும் தவிர்க்க முடியாதாகிவிடும்.

2009ம் ஆண்டு மே மாதம் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் கொடுரமான முறையில் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நம்பிக்கையளிக்கும் களம் ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் திறந்தார்கள்

நடைபெற்று முடிந்த ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களினதும் போராளிகளினதும் ஆனமாவாக புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் முனைப்பு பெற்றது.

இது ஆயுதப் போராட்டத்தின் தொடர்சியாக ஈழவிடுதலை நோக்கிய நீட்சியாக பார்க்கப்பட்டது.

இதனை ஒடுக்குவதற்கும் முறியடிப்பதற்கும் ஆயுத பலத்திற்கும் மேலான இராஜதந்திர பலம் இலங்கைக்கு தேவைப்பட்டது.

அதற்கான வழிமுறைகளை அது தேடிக் கொண்டிருந்த போது அதற்கான தேவையில்லை நாமே தருகின்றோம் என்று நாம் முன்னறிவித்து நமக்குள் பகை முரண்களை வெளிப்படையாகவே அறிவிக்கத் தொடங்கினோம்.

துரதிஸ்டவசமாக நாமே நமக்குள் மோதல்களை தோற்றுவித்து எமது பலத்தை சிதைக்க தொடங்கினோம்.

2009 முன்னர் ஓரணியாக நின்ற புலம்பெயர் தமிழர் சமூகம் தலைமைத்துவ போட்டிகளால் இப்போது சிதறிக்கிடக்கின்றது.

பலமிழந்து போய் நிற்கும் எமக்குள் இன்னும் இன்னும் பிரிவினைகளை ஏற்படுத்தி ஒருபோதும் நாம் இணைய முடியாத படிக்கான நிரந்தர பிழவுகளை உருவாக்கும் நகர்வுகளை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுக்கின்றது.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இன அழிவினை சந்தித்த இனத்தின் விழுதுகளான நாம் நடைபெற்று முடிந்த அழிவினை ஒன்று பட்டு நின்று நினைவு கூர முடியாத அளவிற்கு மாறிநிற்கின்றோம்.

நீயா நானா என்ற போட்டியில் உயிர் நீத்தவர்களின் தியாகங்களை மறந்து போவதற்கும் அவர்களின் தியாகங்களின் பின்னால் நிமிர்ந்து நிற்கின்ற எப்போதும் சாய்ந்து போகாத விடுதலைக் கனவை கானல் நீரால் கழுவிவிடவும் முயல்கின்றோம்.

எமது தேசத்தில் எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதும் திட்டமிட்ட இன அழிப்பு என்பதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதிலேயே எங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்குள் கருத்து மோதல்கள் தோன்றுவது எத்தனை தூரம் அவமானத்திற்குரியது என்பதை நாம் ஒருபோதும் சிந்திக்கவேயில்லை.

எங்கள் மண்ணை அந்த மண்ணை நேசித்த மக்களையும் மறவர்களையும் மூடிப்புதைத்து விட்டு; காத்துக்கிடக்கும் முள்ளிவாய்காலின் ஈரம் காய்வதற்குள் நமக்கிடையில் தோன்றி நிற்கும் பிரிவினைகள் தேவை தானா?

தேசிய துக்க நாளா? இன அழிப்பு நாளா ? என்ற தலைப்பிற்கான பிரச்சினைகள் அங்கே யுத்தத்தின் பின்னரும் நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும் எங்கள் உறவுகளுக்கு எதனை தரப்போகின்றது.

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்கள் நாம் எமக்கு நேர்ந்த அவலங்களை மீண்டும் மீண்டும் நாம் வாழும் நாடுகளின் காதுகளுக்குள் உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று இல்லாவிடினும் என்றேனும் ஒரு நாள் அவர்கள் எங்கள் பிரச்சினை என்ன என்பதை கேட்பதற்கும் அதற்கு தீர்வு வழங்குவதற்கும் முன்வந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ இப்போது எமது

விடுதலை நோக்கிய பயணத்தின் துணையாக நாம் சர்வதேசத்தை வரித்துக் கொண்டு விட்டோம்.

இப்போது இருப்பதில் நடைமுறைச் சாத்தியமான வழிமுறை சர்வதேசத்தின் துணையோடு எமது விடுதலையை வென்றெடுப்பதாகவே இருக்கின்றது.

எம்மீது இன அழிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.. எமது நிலங்கள் திட்டமிட்ட வகையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.. எமது மக்களின் வாழ்வு மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றது எமக்கான அதிகாரங்களை நாம் பெற்றுக் கொள்வதே எமக்கு தீர்வாகும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் சர்வதேசத்திற்கு உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

மார்ச் மாதத்தில் வரும் ஜெனீவா மாநாட்டின் காச்சல் தீர்ந்த பின் மீண்டும் ஒரு ஜெனீவா மாநாட்டிற்காக காத்திருப்பதும் அதற்கிடையில் கிடைக்கின்ற சந்தரப்பங்களை எல்லாம் எமக்கிடையிலான மோதல்களுக்கான களங்களாக பயன்படுத்திக் கொள்வதும் ஆரோக்கியமான மாற்றங்களை எமக்கு தரப் போவதில்லை.

மீண்டும் ஒரு மே மாதம் வருகின்றது உலகத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்தால் எழுகின்ற குரல் பலமாக இருக்கும் எதிரிக்கு பயமாகவும் மாறும்.

ஒரு நாட்டில் நான்கு இடங்களில் நினைவு நிகழ்வுகளை நடத்தி விட்டு எனக்குத் தான் அதிக ஆதரவு இல்லை எனக்கு தான் என்று ஆட்கணக்கு பார்ப்பதில் பலனில்லை என்பது உணர்வோம்.

எமக்கிடையில் ஒருமை ஏற்படாமல் இருப்பதற்கான வேலைகளை மிக நுட்பமாக செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றது.

எமது மக்களின் கவனங்களை கவலைகளை திருப்புவதற்கும் திட்டங்கள் போடப்படுகின்றன.

இவற்றை தாண்டுவதற்கும் தகர்பதற்கும் எமக்குள்ள ஒரே வழி நாம் ஒன்றாய் எழுவது மட்டும் தான்.

நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் இடையில் சிக்கிக் கிடக்கின்ற தமிழினம் விடுதலை பெறுவதற்கு நாம் செய்ய வேண்டியது இது தான்.

நாளைக்கும் நிலவு வரும்… ஆனால் பார்ப்பதற்கு நாம் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய யதார்த்தம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106846/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.