Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய இராணுவத் தளபதி மிலாடிக் மீதான விசாரணைகள் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய இராணுவத் தளபதி மிலாடிக் மீதான விசாரணைகள் ஆரம்பம்
மே 20, 2014
  இனப்படுகொலை மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முன்னாள் பொஸ்னிய சேர்பிய இராணுவத் தளபதி ரத்கோ மிலாடிக் மீதான வழக்கில் பிரதிவாதி தரப்பு விசாரணை ஹேக் நகரில் நேற்று ஆரம்பமானது.
 
முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆஜராகவுள்ள மிகவும் அதிகளவுக்கு சந்தேகநபராக கருதப்படுபவர்களில் 72 வயதுடைய மிலாடிக்கும் ஒருவராவார். 1992 - 1995 காலப்பகுதியில் பொஸ்னிய யுத்தத்தின் போதான 11 குற்றச்சாட்டுகளை மிலாடிக் மறுத்து வருகிறார்.
 
சிறிபெரினிக்காவில் 7 ஆயிரத்துக்கு அதிகமான பொஸ்னிய ஆண்களையும் சிறுவர்களையும் படுகொலை செய்ததில் இவருக்கு பங்களிப்பு இருந்ததாக விசேடமாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படுகொலை 2 ஆம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற படுமோசமான அட்டூழியமாகக் கருதப்படுகின்றது.
 
ஐ.நா. நீதிமன்ற விசாரணை சாத்தானின் தன்மை கொண்டது என மிலளாடிக் கண்டித்திருந்தார். உத்தரவைப் பின்பற்றும் சாதாரண படைவீரராக ஜெனரல் மிலாடிக் இருந்தார் என அவர் தரப்பு சட்டத்தரணி வாதத்தை முன்வைத்திருக்கிறார். தனது மக்களைப் பாதுகாக்க போராடிய தாய்நாட்டுப் பற்றுடையவர் என்று மிளாடிக்கை அவருடைய வழக்கறிஞர்கள் வர்ணிக்கின்றனர்.  
 
பொஸ்னியாவின் பிராந்தியங்களில் சேர்வியர் அல்லாதோரை இன ரீதியாகச் சுத்திகரிக்கும் போராட்டத்தை இலக்கு வைத்து ஜெனரல் தலைமை தாங்கினார் என்று விசாரணையில் உரிமை கோரப்பட்டிருப்பதை எதிர்த்தரப்பு வாதம் மறுக்கின்றது. அதேவேளை ஞாபக சக்தி ஒழுங்கீனத்தால் மிலாடிக் பீடிக்கப்பட்டிருப்பதாக  எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உண்மைக்கும் புனைவுக்கும் இடையில் வேறுபாட்டை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வது கடினமானது என்பதை நிரூபிப்பதற்கு அவரின் சட்டத்தரணிகள் முயற்சிப்பார்கள் எனக் கூறப்படுகின்றது.
 
அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கின்ற போதிலும்,  தப்பிப் பிழைத்த பலர் தமது துன்பத்திற்கு அதிகளவுக்குப் பொறுப்பானவர்களில் ரத்கோ மிலாடிக்கும் ஒருவர் என கருதுகின்றனர் என்று ஹேக்கில் உள்ள பி.பி.சி.யின் நிருபர் அனா கூலிக்கன் கூறியுள்ளார். அவர்களைப் பொறுத்தவரை உண்மையை கேட்பதற்கும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இந்த விசாரணை அமையுமென பி.பி.சி. நிருபர் கூறுகிறார். எதிர்த்தரப்பினர் தமது பக்கவாதத்தை முன்வைப்பதற்கு 207 மணித்தியாலங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. வாதிகள் தரப்பு விசாரணைக்கு இதேயளவு காலம் வழங்கப்பட்டிருந்தது.
 
அத்துடன் எதிர்த்தரப்பு சட்டத்தரணி எவ்வளவு தொகை சாட்சியங்களையும் தருவிக்க முடியும். 1995 ஜூலையில் ஸ்ரீபெரனிகாவில் பொஸ்னிய சேர்விய படைகள் ஐ.நா. பாதுகாப்பு அரணை முறியடித்து முஸ்லிம் ஆண்களையும் பையன்களையும் படுகொலை செய்திருந்தன. அப்படைக்கு மிலாடிக் பொறுப்பாக இருந்தார். சேர்பியாவின் வடபகுதியில் 2011 இல் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் 16 வருடங்கள் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.http://www.sankathi24.com/news/41642/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.