Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிவின் விளிம்பில் நிற்கும் பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா?

Featured Replies

  • palm-tree-.jpg

தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

மாநில அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மாநில மலர் செங்காந்தள், மாநில பறவை மரகதப் புறா, மாநில விலங்கு வரையாடு, மாநில விளையாட்டு சடுகுடு, மாநில நாள்காட்டி திருவள்ளுவர் ஆண்டு, மாநிலத் திருநாள் தைப் பொங்கல் போன்ற மாநில சின்னங்களின் வரிசையில் மாநில மரமாக இருப்பது பனைமரம்.

மக்களின் இயல்பு நிலையை பனை, தென்னை, வாழை என்று 3 மரங்களின் இயல்புடன் ஒப்பிட்டு, திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது. எந்தவிதப் பயனையும் பெறாமல் பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள் பனை மரத்துக்கு ஒப்பானவர்கள் என விளக்கும் வகையில் உயர்ந்த இடத்தைப் பெற்றது பனை மரம்.

கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 10 கோடி மரங்களும், தமிழகத்தில் சுமார் 5 கோடியும் இதில் தென் மாவட்டங்களில் மட்டும் 50 சதவீதம் உள்ளது. ஓராண்டில் ஒரு மரம் 150 லிட்டர் பதனீர், 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் வழங்குகிறது. இதேபோல் ஒரு மரம் 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்களைத் தருவதாகக் கணக்கிட்டுள்ளது.

1985- 86ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் 6.94 லட்சம் பேருக்கும், மாநில அளவில் 5.87 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கியது. இதில் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் அடங்குவதாக வாரியக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இத்தகைய சிறப்புடைய பனையின் நிலை குறித்து சிவகங்கை சிவப்பு நட்சத்திர மக்கள் இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாவட்டச் செயலர் எல். ஆதிமூலம் கூறியதாவது:

பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

கார்த்திகைத் திருநாளில் ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது இளைஞர்களின் வழக்கமாகும். பனை ஓலை குருத்துகளைப் பிரித்தெடுத்து, பகலில் வெயிலிலும், இரவில் பனியிலும் பதப்படுத்தும் முன்பாக ஓலையின் நடுப்பகுதியில் உள்ள ஈக்கியுடன் ஓலையைப் பிரித்தெடுத்தும் ஈக்கியில்லாத ஓலையைத் தனியாக பிரித்து எடுத்து நுட்பமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

அரைப்படி முதல் 5 படி வரை கொள்ளவு கொண்டவை கொட்டான்கள் எனவும், 7 படியிலிருந்து 11 படி வரை கொள்ளளவு உள்ள பெட்டி வகைகள் சீர்வரிசைப் பெட்டிகள் எனவும், 20 படியிலிருந்து 30 படிகள் வரை கொள்ளளவு கொண்ட நார்பெட்டிகள் அரைப்பெட்டிகள் என்றும், 5 மரக்கால் அளவுள்ள பெரிய நேர்த்தியான நார்பெட்டிகள் கடகம் என்றும், நெல் இதர தானியங்களை காற்றில் தூற்றி தரம் பிரிக்கப் பயன்படுத்துபவை தூற்றுப் பெட்டிகள் என்றும், தானியங்களை புடைத்து எடுக்க சொழகு அல்லது முறம் என்றும் சரக்குகளை கட்டி அனுப்ப பனைப் பாய்கள் என அழைத்து அதனைப் பயன்படுத்தி வந்தனர். இதைத் தவிர, மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்களும் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பதனீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் விருத்தியாகும், நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாகவும், சீமைக் கருவேல் மரங்களின் எல்லையில்லா வளர்ச்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்

கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

ஆர்வலர்களின் விருப்பம் நிறைவேறுமா?

http://www.dinamani.com/latest_news/2014/05/25/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/article2244605.ece

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.