Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச விசாரணைக்கு உதவ முக்கிய விபரங்கள் சேகரிப்பு - மாவை சேனாதிராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கமைவாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாகவும் முழுமையான விபரங்களை சேகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை    சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில்  மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றபோது நாங்கள் ஒரு தொகுதி ஆவணங்களை கொடுத்திருக்கின்றோம். ஆனால் அவை போதுமானதாக இல்லை. குறிப்பாக                    எங்களுடைய மண்ணில் எவ்வளவு நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? எவ்வளவு மக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் தற்போது எங்கே உள்ளார்கள்? என்பன போன்ற தகவல்கள் எங்களிடம் கிடையாது. ஆனால் அத்தகைய தகவல்களை படை உளவுத்துறையினர் வைத்திருக்கின்றார்கள்.

 எனவே இது ஆரோக்கியமான ஒரு விடயம் அல்ல. நாங்கள் ஒவ்வொரு நாளும் நாளை யார் காணாமல் போவார்களோ? எவருடைய நிலம் ஆக்கிரமிக்கப்படுமோ? என்ற ஏக்கத்துடனேயே உறக்கத்திற்குச் செல்கின்றோம். எனவே நாம் எங்களுடைய பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான தகவல்களை திரட்டி, அவற்றை ஆவணப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஐ.நா. பிரதிநிதி ஒருவர் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில க்கிரமிப்புக்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவிருக்கின்றார். எனவே அதனை வலுப்படுத்துவதற்காக நாங்களும் ஆவணங்களை வழங்கவேண்டும். நில ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்களுடைய பாதிப்புக்கள், துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர்களுடைய பாதிப்புக்கள் தொடர்பாகவும்      நாங்கள் ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கான பணியினை எங்கள் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பி னர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் செய்து முடிக்கவேண்டும். அதனை இன்றே உடனடியாகத் தொடங்கவேண்டும் .

வீடுவீடாகச் சென்று அந்தப் பணியினை நாங்கள் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். மற்றொரு முக்கியமான விடயம் யாழ்.மாவட்டத்தில் 14 இலட்சம் மக்கள் இருக்கவேண்டிய  இடத்தில் தற்பொழுது 6 இலட்சமாக இருக்கின்றது. இதனால் நிதி ஒதுக்கீடு, வேலைவாய்ப்புக்கள், பல்கலைக்கழக அனுமதிகள் அனைத்தும் இந்தச் சனத்தொகை அடிப்படையிலேயே மதிப்பீடு   செய்யப்படுகின்றன.

எனவே ஜூன் மாதம் புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும். அதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு கிராமசேவகர் மட்டத்தில் முகவர்களை நியமித்து புதிய வாக்காளர்களை பதிவு செய்ய முயற்சிக்கவேண்டும். தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் அதிகம் அக்கறை காட்டுகின்றார்கள்.

அதேபோன்ற முயற்சியினை நாங்கள் முன்னெடுக்கவேண்டும். இரு வாரங்களுக்குள் வீடுவீடாகச் சென்று மக்களை நன்கு அறிவுறுத்தி வாக்காளர்களாக பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் ஆணையாளருடன் பேசி புல ம்பெயர் நாடுகளில் குடியுரிமை பெறாதவர்களையும் வாக்காளர்களாகப் பதிவு          செய்வதற்கான நடவடிக்கையினை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

எனவே கடந்த காலத்தில் இந்த வாக்காளர் பதிவில் நாங்கள் போதுமான நடவடிக்கை எடுத்திருக்காத நிலையில் இம்முறை உரிய நடவடிக்கை எடுத்துச் செயற்பட வேண்டும். அதற்கு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் முன்வரவேண்டும். வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவிகளையும் நாங்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107458/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.