Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைத்தலைமைகளின் அறிவிப்புக்கு அரச பேச்சாளரின் பதில் குழப்பமா

Featured Replies

இணைத்தலைமைகளின் அறிவிப்புக்கு அரச பேச்சாளரின் பதில் குழப்பமாக இருப்பதாக கூறுகிறார் பிரிட்டிஷ் தூதுவர்

ஒஸ்லோவில் அடுத்த மாதம் பேச்சு நடத்த அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இணங்கியுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்திருப்பதும், அதற்கு அரசாங்கத்தின் இராணுவ விவகாரப் பேச்சாளர் அளித்துள்ள பதிலும் குழப்பமாக இருப்பதாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பை இறுகப்பற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி கண்காணிப்பு அறிக்கை 2006 இணை வெளியிடும் நிகழ்வு கொழும்பு இலங்கை வெளிவிவகார உறவுகளுக்கான நிறுவகத்தில் இடம்பெற்றவேளை, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய டொமினிக் சில்கொட் இதனைத் தெரிவித்தார்.

மனிதநேய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை தனது நாடு முழுமையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான நெருக்கடி குறித்து தெரிவிக்கப்படும் கவலைகள் உண்மையானவையாகவுள்ளன என குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது;

இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ள விடயங்களும், இலங்கை அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்ட கருத்துகளும் புதிரானவையாக உள்ளன.

தேவையற்ற நிபந்தனைகளை விதிக்காமல், தாமதிக்காமல் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்.

இராணுவத்தினரின் கையோங்கியிருப்பது போலவும், அவர்களால் பல வெற்றிகளை பெற முடியும் என்பது போலவும் தற்போது தோன்றலாம்.

எனினும், இதன் மூலம், இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை காண்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனக் கருதுவது பாரிய தவறாக அமையும்.

பிரிட்டனுக்கு இந்த விடயத்தில் சிறந்த அனுபவங்கள் உள்ளன.

10,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை வெறுமனே 1,000 போராளிகள் எதிர்கொண்ட வரலாற்று அனுபவத்தை நாம் வட அயர்லாந்தில் சந்தித்தோம்.

யுத்தத்தினால் நாம் அனுபவித்தவைகள் போதும் என பொது மக்கள் குரலெழுப்பும் நிலை உருவாகலாம்.

இதன் காரணமாக ஆக்கபூர்வமான அரசியல் நடைமுறைகள் ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயல வேண்டும்.

அரசாங்கம் அனைத்து கட்சி சந்திப்புகள் மூலம் புதிய அரசியல் முற்சிகளை மேற்கொள்கின்றது. இது வரவேற்கத்தக்கது.

தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் உட்பட அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் செயற்பாடுகள் அவசியம்.

அரசாங்கம் தங்களது நலன்களில் அக்கறையாகவுள்ளது என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுவது அவசியம்.

பல இலங்கையர்கள் அரசாங்கம் தங்களது நலன்களில் அக்கறையாகயில்லை எனக் கருதுகின்றனர். அவர்களின் இந்தக் கருத்து ஓரளவிற்கு உண்மையானது.

மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான நெருக்கடி குறித்து முன்வைக்கப்படும் கருத்துகள், குற்றச்சாட்டுகள் அர்த்தமுள்ளவையாகவுள்ளன.

கண்ணிவெடிகள் குறித்த விடயத்தில் அரசாங்கம் இன்னமும் சிறப்பாக செயற்படலாம்.

அரசாங்கம் ஒட்டாவா பிரகடனத்தில் கைச்சாத்திடுவதன் மூலம், நிலக்கண்ணிவெடிகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அரசாங்கம் சில உறுதியான செய்திகளைத்தெரிவிக்கலாம்.

வட,கிழக்கு மக்களின் நலன்கள் தனக்கு முக்கியம் என்ற செய்தியைச் சொல்லலாம்.

அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரசாங்கம் நேர்மையான விருப்பத்தை கொண்டுள்ளது என்பதை தெரிவிக்கலாம். இது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சமூகங்களிடையே நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவது வெற்றிகரமான சமாதான முயற்சிகளுக்கு மிகவும் அவசியமான ஒரு விடயம். அனைத்து சமூகங்களும் தாங்கள் நன்மையடைந்துள்ளதாக கருதுவது அவசியம்.

நிலக்கண்ணிவெடிகள் அதிக பயனுள்ள ஆயுதங்களில்லை என்பது இராணுவத்திற்கு நன்கு தெரியும். இதன் காரணமாக கொல்லப்படுபவர்கள் அநேகமாக பொது மக்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதனால், உண்மையான பாதுகாப்பு எதுவுமில்லை என்பதும் தெரியும்.

உலகம் இலங்கையை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அரசாங்கம் ஒட்டாவா பிரகடனத்தில் கைச்சாத்திட்டால் அது அரசாங்கத்திற்கு பெருமையை கொண்டுவரும்.

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு காத்திராமல் அரசாங்கம் உடனடியாக இதில் கைச்சாத்திட வேண்டும்.

புதிதாக கண்ணிவெடிகள் புதைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது உண்மையாயின் இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவாக இதனைக் கருத வேண்டும்.

http://www.thinakkural.com/news/2006/9/14/...s_page10758.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.