Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் - சுப்ரமணியம்சுவாமி

Featured Replies

subramaniam%20swamy_CI.jpg

13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டுமென ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் துரித கதியில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லதை கொடுத்தால் நல்லது கிடைக்கும் என்ற எண்கக்கருவின் அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் கடந்த கால கசப்பான அனுபவங்கள் முறியடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதென அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியானது இலங்கைத் தமிழர் பிரச்சினையால் கிடைக்கப்பெறவில்லை எனவும், திமுகவின் 2ஜீ ஸ்பெக்;ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மோசடிகள் அம்பலானதனால் ஜெயலலிதா வெற்றியீட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் வைகோ சொந்த தொகுதியில் தோல்வியை தழுவியதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் இதில் அதிகமானவர்களுக்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் நிதி உதவி வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பலவீனமான நிர்வாகமே இலங்கை சீனாவுடன் நெருங்குவதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் காணி காவல்துறை அதிகாரங்களை பின்னர் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107658/language/ta-IN/article.aspx

 

13 ஐ முழுமையாக அமுலாக்க அனுமதிக்கமாட்டடோம்: அரசின் பங்காளிக் கட்சிகள் எச்சரிக்கை

13_CI.jpg

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பதைப்போல, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதனை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அரசின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இந்தியாவின் உத்தரவுகளின்படி செயற்படமுற்படுவதால் அரசாங்கம் ஏற்கனவே நெருக்கடியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண ஒமல்பே சோபித தேரர், மேலும் அதே பாதையில் செல்வதற்கு அரசாங்கம் முற்பட்டால் மோசமான விவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார்.

இதேவேளையில், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பாற்றுவதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானது எனவும் எச்சரித்தார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கின்ற போதிலும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டார். 

'13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தால் அது மிகப்பெரிய தவறாக இருக்கும். மக்கள் அதற்கு ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டார்கள். அரசாங்கம் அவ்வாறான உறுதியை வழங்கினாலும் அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்' எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107651/language/ta-IN/article.aspx

 

மோடி அல்ல எவருக்கும் இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு விட இடமளியோம் ・ ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை
இந்தியாவின் மோடியல்ல எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்த இடமளிக்கமாட்டோம் என எச்சரிக்கை விடுக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, தமிழ் மக்களுக்கு 13ஐ கொடுப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது இலங்கையர்களே தவிர இந்தியர்கள் அல்ல என்றும் அக்கட்சி தெரிவித்தது.
 
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க மேலும் தெரிவிக்கையில்,
 
இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் அல்ல நரேந்திரமோடி வந்தாலும் அது எமக்கு பெரிய விடயமல்ல. இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்கும் உரிமையும் அதிகாரமும் இலங்கை மக்களுக்கு உள்ளது.
 
அந்த அதிகாரத்தை இந்தியர்களுக்கு வழங்கவோ அல்லது எமது இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தவோ இடமளிக்கமாட்டோம். அவ்வாறு எல்லை மீறி இந்தியா எமது நாட்டின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க முனைந்தால் மக்களை வீதியில் இறக்கி போராடுவோம். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது இலங்கை மக்களுக்குரிய பொறுப்பாகும்.
 
அத்தோடு இங்குள்ள தமிழ் மக்களுக்கு 13ஐ வழங்குவதா இல்லையா? அத்தோடு எந்ததெந்த உரிமைகளை வழங்க வேண்டுமென்பதை இந்தியா தீர்மானிக்க முடியாது.
 
அதனை நாமே தீர்மானிப்போம். நாமே வழங்குவோம். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாத அதிகாரப்பரவலாக்கல் இல்லாத அரசியலமைப்பே நாட்டுக்கு தேவையாகும். என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்

Edited by Athavan CH

வந்திட்டான்யா வந்திட்டான்யா சு. சாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.