Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க ?

Featured Replies

புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன் இன்று தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரின், இரண்டாவது நாளான நேற்று, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்றனர். எம்.பி.,க்கள் பதவியேற்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, லோக்சபாவின் புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.

 

 
 

மனு தாக்கல்:சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன், 72, தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக நேற்று அவர் மனு தாக்கல் செய்தார். சபாநாயகர் பதவிக்கு, சுமித்ரா மகாஜனின் பெயரை, பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பா.ஜ., தலைவர்கள் சிலரும், காங்., லோக்சபா கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதீப் பந்தோபாத்யாய், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஜிதேந்திர ரெட்டி உட்பட, 19 பேர் முன்மொழிந்தனர். அத்துடன், சுமித்ரா மகாஜனை சபாநாயகராக தேர்வு செய்வதற்கான தீர்மானமும் சபையில், தாக்கல் செய்யப்பட்டது.


 

 

எட்டாவது முறை:மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் லோக்சபா தொகுதியில் இருந்து, எட்டாவது முறையாக லோக்சபாவுக்கு தேர்வானவர் சுமித்ரா மகாஜன். இவர் லோக்சபாவின், இரண்டாவது பெண் சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார். முந்தைய லோக்சபாவில், காங்கிரசைச் சேர்ந்த மீரா குமார் சபாநாயகராக இருந்தார். அவர் தான் லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர். அதே நேரத்தில், லோக்சபா துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, கரூர் தொகுதி எம்.பி.,யான தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த, 1985 முதல்,

1989 வரை, லோக்சபா துணை சபாநாயகராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தம்பிதுரை. அவர் துணை சபாநாயகராக தேர்வாகலாம் என்ற தகவல்கள் உலா வந்தாலும், பா.ஜ., தரப்பிலோ அல்லது அ.தி.மு.க., தரப்பிலோ, அதை யாரும் உறுதி செய்யவில்லை. மேல்சபையான ராஜ்ய சபாவில், மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை யான, 245 பேரில், பா.ஜ., வுக்கு, 42 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதனால், ராஜ்யசபாவில், 10 எம்.பி.,க் களை உடைய, அ.தி.மு.க.,வின் ஆதரவு, மோடி அரசுக்கு தேவைப்படலாம் என்பதால், தம்பிதுரை துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கூடு தல் எண்ணிக்கை பலம் அமைவது, திட்டமிட்ட பணிகளை நிறைவேற்ற வசதியாக அமையும். அக்கருத்தை முன்னிறுத்தி, அ.தி.மு.க.,வுக்கு இப்பதவியைத் தருவதன் மூலம், இரு கட்சிகளிடையே மேம்பட்ட உறவு ஏற்படும் சாத்தியங்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது.


 

 

சுறுசுறுப்பான சுமித்ரா மகாஜன்:16வது லோக்சபா சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள சுமித்ரா மகாஜன் எளிமை, நேர்மை, சுறுசுறுப்பு மற்றும் அரசியலில் தூய்மையானவர் என்ற பெருமைக்கு உரியவர். 71 வயதான இவர், நாட்டிலேயே ஒரே தொகுதியில் தொடர்ந்து 8 முறை எம்.பி., ஆன ஒரே பெண் தலைவர். பாலியல் தொல்லை, வன்கொடுமை உள்ளிட்ட பெண்களின் பிரச்னைகளுக்காக போராடியவர். இதனால் இவரது தொகுதி மக்களால் 'மூத்த சகோதரி' என அழைக்கப்படுகிறார். 1943 ஏப்., 

12ல், ம.பி., சிப்லுன் கிராமத்தில் பிறந்தார்.

இந்தூர் பல்கலையில் எம்.ஏ., எல்.எல்.பி., படித்துள்ளார். திருமணத்துக்குப் பின், அரசியலில் நுழைந்தார். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திலும் பணிபுரிந்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் செல்வாக்கு பெற்றிருந்தார். 1989ல், முதன்முறையாக 46வயதில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்டு காங்., வேட்பாளரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி., ஆனார். ஆனால் இதற்கு முன், இந்தூர் சட்டபை தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு தோல்வி கண்டவர். 2002- 04ல் மத்திய தொலைத்தொடர்பு, பெட்ரோலிய துறை இணை அமைச்சராக இருந்தார். 

2014 தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட இவர், ம.பி.,யிலேயே அதிக வித்தியாசமாக 4,66,301 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பா.ஜ.,வில் இவ்வளவு சாதித்திருந்தாலும், இதுவரை இவரால் ம.பி.,யின் முதல்வராக முடியவில்லை. ஆனால், தற்போது இவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=991897

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.