Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (06.06.14)  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய வழக்கில், இரு மதகுருமாரின்; ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

கொன்சலிற்றா, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி காணாமற்போயிருந்த போதும், அவர் மறுநாள் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்கின்றது. இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கொன்சலிற்றாவின் பெற்றோர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிநின்றார்.

அதுமட்டுமன்றி இரு மதகுருமார்களின் தொலைபேசி பதிவு தொடர்பில் மூன்று மாதகால பதிவுப் பட்டியல் எடுக்கப்பட்டாலே விசாரணைக்கு ஏதுவாக இருக்கும் என்றும்  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையிலேயே இரு பாதிரியார்களின் தொலைபேசி பதிவுகள் தொடர்பிலான மூன்று மாதப் பதிவுப் பட்டியலினை பெற்று சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், வழக்கை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ்.குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெரோம் கொன்சலிற்றா கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு மதகுருமாரே காரணம் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன் 16 ஆம் திகதித எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

மறைக்கல்வி கற்பிப்பதற்குச் சென்ற கொன்சலிற்றாவினை மதகுருமார்கள் இருவரும்  பாலியல் தொந்தரவு செய்து கொன்லிற்றாவின் மரணத்திற்கு காரணமாகினர்கள் என அவருடைய பெற்றோரும் உறவினர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதேவேளை இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 'எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் மதகுருமார் இருவரே காரணம்' என கொன்சலிற்றாவின் தாயாரும் , 'எனது மகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம்' என தாம் சந்தேகிப்பதாக அவருடைய தந்தையும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107846/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.