Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா கொண்டுவந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் நாடு முழுவதும்...

 

 

புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பது கட்டாயம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். 

மேலும் 'ஊழல் இந்தியா' என்பதை 'திறமை மிகு இந்தியா' வாக மாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரையாற்றினார். பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக அவர் மக்களவையில் உரையாற்றினார். 

மோடி பேசுகையில், "குடியரசுத் தலைவர் உரை பற்றிய அனைவரின் பேச்சையும் கூர்ந்து கேட்டேன்.  மக்களவைக்கு புதுமுகமான எனது பேச்சில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.

குஜராத்தில் 24 மணி நேர மின்சாரம் பற்றி வாக்குறுதி தந்தபோது பலர் சந்தேகப்பட்டனர். ஆனால் தற்போது குஜராத்தின் அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரம் மின்சாரம் உள்ளது. அதேப்போல வலிமையான பாரதத்தை உருவாக்க குடியரசு தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும், செயல்திட்டங்களும் நிறைவேற்றப்படும். நிலையான அரசு, நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்பதே எங்கள் நோக்கம்.

மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். காந்திடிஜியின் சுதந்திரப் போராட்டம் போல வளர்ச்சியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். முஸ்லீம்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற கவனம் செலுத்தப்படும்

 

ஏழைகளுக்கான அரசு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. குடிசையில் இருக்கும் ஏழையின் கனவை நனவாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக இந்த அரசு செயல்படும். வறுமையை அகற்ற ஏழைகளின் கையில் கல்வி ஆயுதத்தை வழங்குவோம்.

 

கிராமங்களில் 24 மணி நேர மின்சார வசதி, தொழில்நுட்பம்

கிராமங்களில் 24 மணி நேர மின்சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். அனைவருக்கும் கல்வியும், தொலை தொடர்பும் கிடைத்தால் புதிய பாரதம் உருவாகும். கிராமங்கள் வளர்ச்சியடைந்தால்தான் நாடு முன்னேறும்; இளைஞர்களும் கிராமங்களை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆய்வகங்களில் உள்ள தொழில்நுட்பம் நிலங்களுக்கு இடம்பெயர வேண்டும். இணையதள வசதியும், தரமான கல்வியும் கிராமங்களில் கிடைக்க வேண்டும்.

 

2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு

வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் யாரும் மின்சார வசதி, கழிப்பறை, தண்ணீர் வசதியுடன் கூடிய சொந்த வீடு இல்லாமல் இருக்கக்கூடாது. செலவுகளை பற்றி கவலைப்படாமல் இதனை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

 

அரசியலாக்க வேண்டாம்
கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை அரசியலாகக் கூடாது.பெண்களின் பாதுகாப்புக்காக போராடுவது அனைததுக்கட்சிகளின் கடமையாகும். பெண்களின் பாதுகாப்பு பற்றி பொறுப்பற்ற அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.


'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்

திறமையான இந்தியாவாக நாம் அறியப்பட வேண்டியது அவசியமாகும். ஊழல் இந்தியாவாக நாம் அறியப்படுவதை மாற்ற வேண்டும். 'ஊழல் இந்தியா' என்பதை 'திறமை மிகு இந்தியா' என்று மாற்ற வேண்டும்.  இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இந்தியாவில் ஒருவர் கூட பசியுடன் இல்லாத நிலையை உருவாக்கவே விரும்புகிறோம்

 

வேளாண்மையில் நவீன முறை


வேளாண்மையில் நவீன முறைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் தேவை. விலைவாசி உயர்வைக் கட்டப்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படும்

 

நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டம்

 

குஜராத்தை விட, தமிழக வளர்ச்சி மாடலே சிறந்தது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை வரவேற்கிறேன்.  ஒரே வளர்ச்சி மாடலை நாடு முழுமைக்கும் அமல்படுத்த முடியாது. கேரளாவில் நடைமுறையில் உள்ள குடும்பஸ்ரீ திட்டமும், தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டமும் பாராட்டப்பட வேண்டிய திட்டங்களாகும். தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

 

தீர்மானம் நிறைவேற்றம்

 

மோடியின் உரையை தொடர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.

 

மக்களவை ஒத்திவைப்பு

இதையடுத்து மக்களவையை மறு தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28871

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.