Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களின் துயர வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு!

Featured Replies

himachal-lead_650_061114102145.jpg

 

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விக்யான் ஜோதி பொரியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 48 பேர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர்.

 

 
அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் ஆற்றில் நின்று புகைப்படம் எடுத்தனர். 
 
24_students_washed_away_in_beas_river_inஅப்போது லார்ஜி நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக அங்குள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 6 மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். 
 
கரையில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடிவில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
 
மாணவர்களை தேடும் பணியில் மீட்பு படையினரும், இராணுவத்தினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 2 மாணவிகள் உள்பட 5 மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
India%20Students%20Drowni_Kand_0_0_0_0_0
மாணவர்கள் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் அவர்களின் பெற்றோர்கள் கதறி துடித்தனர். மீட்கப்பட்ட மாணவ, மாணவிகள் நிவேதா, ராம் பாபு, ஐஸ்வர்யா, லட்சுமி காயத்திரி ஆகிய 4 பேர் உடல்கள் தனி விமானத்தில் நேற்று ஐதராபாத் கொண்டு வரப்பட்டது.
 
 ஐதராபாத்தைச் சேர்ந்த கிரண்குமார் என்ற மாணவன் 4 மாணவிகளை கை கொடுத்து கரை சேர்த்தார். ஆனால் இறுதியில் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை நின்ற பாறை வெள்ளத்தில் உருண்டதால் அவரும் வெள்ளத்தில் மூழ்கினார்.11-1402469311-kiran-himachal-tragedy3-60
 
எனினும் கிரண் குமாரின் தந்தை வெங்கட்ரமணா தனது மகன் உயிருடன் வருவார் என்று நம்பிக்கையுடன் உள்ளார். தனது மகனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால் அவர் நிச்சயம் நீந்தி கரை சேர்ந்திருப்பார் என்று நம்புகிறார்.
 
மேலும் பி.டெக் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவி ஸ்ரீநிதி படமெடுத்து விட்டு கரைக்கு திரும்பினார். பின்னர் விட்டு போன தனது பாதணியை  எடுக்க ஆற்றில் இறங்கினார். கண் இமைக்கும் நேரத்தில் அவரை திடீரென ஆற்று வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.
 
இந்நிலையில் தற்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களின்  வீடியோ காட்சி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
virakesari

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
இமாசல வெள்ளப் பெருக்கு பின்னணியில் மணல் மாபியா?

 

 இமாசலப் பிரதேசம் மாநிலம் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் பின்னணியில் மணல் கடத்தல் கும்பலே காரணமாக உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

 

பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், தெலுங்கானா பகுதியை சேர்ந்த 25 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தற்போதைய நிலையில், அவர்களில் 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் உடல்களை மீட்க கடற்படையை சேர்ந்த ஆழ்கடல் வீரர்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

 

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கிற்கு, அணையின் கதவு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திறக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் கடத்தல் நடத்தப்படுவதாகவும், மணல் கடத்தலுக்கு வசதியாக தண்ணீர் பிரிந்து செல்லும் பாதையில், நெடுஞ்சாலைக்கு டிராக்டர்கள் செல்ல வழி ஏற்படுத்தும் சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது ஆகியவையே 25 மாணவர்கள் உயிரிழக்க காரணமானது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறுகையில், "மாநில அரசு இங்கு நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சி எடுக்கவில்லை. இங்கு இயங்கும் மணல் கடத்தல் கும்பலுக்கு ஒருவகையில் அரசும் துணை போகின்றது" என்றார்.

 

மேலும், "இங்கிருக்கும் அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, மணல் கடத்தல் கும்பலுக்கு உதவி செய்ய, அணையின் நீர் வெளியீட்டை அதிக வேகத்தில் திறந்து விடுகின்றனர். மற்ற இடங்களில் இருக்கும் அணைகளில் இதுபோன்ற அளவிலான வேகத்தில் நீர் வரத்து இருக்காது.

அதிக வரத்து நீரால், ஆற்றில் மணல் அதிக அளவில் ஒதுங்கும், இது மணல் கொள்ளைக்கு உதவி செய்யும். இதனால் இங்கு இது போன்ற செயல்கள் இங்கு வழக்கமாக நடக்கிறது. ஆற்றில் ஒதுங்கும் மண்ணை இரவு நேரங்கள் பெரிய முதலாளிகள் திருடுகின்றனர்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆற்றிலிருந்து நீர் அதிவேகத்தில் வெளியாதை இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாதது ஏன் என்பது குறித்த கேள்வியும் இந்த விவகராத்தில் எழுந்துள்ளது.

 

 

இது தவிர நீர் வரத்து அதிவேகத்தில் இருக்கும் சமயத்தில், சுற்றுலா தலமான இந்த பகுதியில் விபத்து தடுப்பு அதிகாரிகளின் பணிகளும் நடைபெறுவது இல்லை என்ற மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

குலு மாவட்டத்தில் லார்ஜி அணைத் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பணிக்காகவோ அல்லது அணையை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்காகவோ எந்த விதமான பாதுக்காப்பு வசதியும் இங்கு இருக்கவில்லை. இந்த அணையை சுற்றி சுமார் 5 கி.மீ தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைப்படாமல் உள்ளது. இதனால் இங்கு வாழும் கிராம மக்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தில்தான் எப்போதும் உள்ளனர் என்று மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

 

அணையிலிருந்து நீர் திறந்திவிடப்பட்டதற்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்படாததும், அரசின் அக்கறையின்மையுமே 25 மாணவர்கள் உயிர் பலியானதுக்கு காரணம் என்று லார்ஜி அணை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6104047.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.