Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை மிரட்டும் வறட்சி...எதிர்கொள்ள தயாராகும் மத்திய அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: இந்த ஆண்டில் பருவமழை வழக்கமான அளவைவிட  குறைவாகவே பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பரவலாக வறட்சி தாக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வறட்சியை சமாளிக்க அரசு தயராக இருப்பதாக மத்திய வேளாண் துறை  அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தென் மாவட்டங்களை 'எல்நினோ' எனப்படும் வெப்பக்காற்று தாக்கக்கூடும் என்றும், இதனால் ஈரப்பதத்தை இது உறிஞ்சி  பருவமழையை சீர்குலைத்துவிடும் என்றும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வழக்கமாக பெய்யும் பருவமழையும் இந்தியாவில் இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

'எல்நினோ' என்றால் என்ன?

.எல்நினோ  என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு 'சிறு பையன்' என்று பொருள். பரந்த வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல், உலகிலேயே அதிக சூரிய ஒளியை பெறுகிறது. இந்த ஒளி, வெப்பமாக கடலினுள் சேர்த்து வைக்கப்படுகிறது. பொதுவாக, பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, வடகிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் இருந்து வெப்ப மேற்பரப்பு உடைய நீரை மேற்கு நோக்கி கொண்டு சேர்க்கிறது. இதற்கிடையே, கிழக்கு பசிபிக் பகுதியிலிருக்கும் குளிர்ந்த நீர், மேற்பரப்பிற்கு வரும். இது பூமத்திய ரேகை பகுதியில் சேர்ந்து கிழக்கு மேற்கு பகுதியில் வெப்பநிலை மாறுபாட்டை உருவாக்கும்.

el%20nino%201.jpg

பசிபிக் காற்று, வடதுருவத்தில் வசந்த காலம் துவங்கியதும், தனது வலிமையை இழக்கும். குறைந்த அளவிலான தண்ணீர் மேற்கு நோக்கி தள்ளப்பட, மத்திய, கிழக்கு பசிபிக் பகுதியிலுள்ள நீர் வெப்பமேற துவங்கும். ஆசியாவில் கோடை மழை ஏற்படும்போது, இந்த காற்று மீண்டும் வலிமை பெறும். இதனால் வெப்பச் சமநிலை மீண்டும் பராமரிக்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹம்போல்ட் நீரோட்டம், தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரமாக, வடக்கு திசையில் நகர்ந்து பூமத்திய ரேகை பகுதிக்கு சென்று விடும். இதனால், வெதுவெதுப்பான வறண்ட காற்று பெரு, ஈக்வேடார் போன்ற நாடுகளின் கரையோரத்தை அடையும்.

 இந்த வெப்ப நீரோட்டம் கடலின் அடியில் இருக்கும் குளிர்ந்த நீரை மேலே கிளப்பிவிடும். இதுதான் 'எல் நினோ' என அழைக்கப்படுகிறது. பொதுவாக 3 முதல் 7 ஆண்டு இடைவெளியில் இந்த வெப்பநிலை மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தோன்றும் இந்த 'எல் நினோ', காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது செப்டம்பர் மாதமே தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை

இந்நிலையில், வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட தாமதமாக கடந்த 6ஆம் தேதிதான் தொடங்கியது. வழக்கமாக தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழைதான் அதிக மாவட்டங்களில் நீர்வளத்தை கொடுத்து, ஆறு, குளங்கள்,அணைகளை நிரப்பும். தென்மேற்கு பருவமழை மதுரைக்கு தெற்கே சில மாவட்டங்களில் மட்டும் கைகொடுக்கும். ஆனால் இந்த தென்மேற்கு பருவமழை அளவு தமிழகத்தை பொறுத்தவரை மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வறட்சி அபாயம்

இதேப்போன்றுதான் மற்ற மாநிலங்களிலும் பருவமழையின் அளவு குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இந்தியா கடும் வறட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

drought%20300%203.jpg

இதன் காரணமாக குடிநீர் பஞ்சம், உணவு தானியங்களின் விலை உயர்வு, விவசாய வேலைகளை நம்பியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

எதிர்கொள்ள தயாராகும் மத்திய அரசு

ratha%20mohan%20sing.jpgஇந்நிலையில், மழை குறைவால் ஏற்படும் வறட்சியை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நாட்டில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதில், பஞ்சாப், மகராஷ்ட்ரா, சத்தீஸ்கர், சீமாந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படலாம். சராசரியாக பெய்யும் மழையால் ஏற்படும் வறட்சியை சமாளிக்க அரசு தயாராக உள்ளது.

வறட்சியை சமாளிக்க, நாடு முழுவதும் 500 மாவட்டங்களுக்காக தற்காலிக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு கடன் வசதி மற்றும் மானிய விலை டீசல் போன்ற உதவிகளை செய்வதற்காகவும் அமைச்சரவை குறிப்பு ஒன்றை தயாரித்துள்ளோம். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், நான் (ராதா மோகன் சிங்) மற்றும் விவசாயத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளோம்.

மேலும், வறட்சியை சமாளிப்பதற்கு இப்போதே தயாராகுங்கள் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த வாரம் மாநில  விவசாயத்துறை  அதிகாரிகளின் இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28955

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.