Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏறாவூரில் இஞ்சி செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்.

Featured Replies

ஏறாவூரில் இஞ்சி செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள். அமோக விளைச்சலும் அதிகளவு வருமானமும்.
 
மட்டக்களப்பு - ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் 17 கிராமசேவையாளர்  பிரிவுகள் உள்ளன.
 
இங்கு இஞ்சி செய்கை அதிக ஆர்வத்துடன் செய்கை பண்ணப்படுவதாகவும் அதன் அமோக விளைச்சலும் நம்பமுடியாத இலாபமுமே இந்த ஆர்வத்திற்கு காரணம் என்று விவசாய போதனாசிரியை M.H முர்சிதா ஸிரின் கூறுகிறார்.
ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் இதுவரை சுமார் 60 குடும்பங்கள்  இஞ்சி செய்கையில் ஈடுபடுகின்றனர்.
 
குறைந்தது ஒரு கொள்களனில் இஞ்சி செய்கையில் ஈடுபடுபவர்களும் இருக்கின்றனர். கூடியளவு 1500  கொள்களன்களில்  இஞ்சி செய்கையில் ஈடுபடுபவர்களும் இருக்கின்றனர். 
 
சமீப சில நாட்களுக்கு முன்னர் 1500  கொள்களன்களில்  இஞ்சி செய்கையில் ஈடுபட்ட ஒரு விவசாயி அதற்காக 5 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்திருந்தார். அறுவடையின் மூலம் அவருக்குக் கிடைத்த மொத்த வருமாணம் 28 லட்சங்கள் ஆகும்.
 
இஞ்சி செய்கையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன,
 
முதலாவது விவசாயிகளுக்கு வழங்கப்படும் விழிப்பூட்டலின் மூலம் இஞ்சி செய்கை பற்றிய அனுகூலங்களை  விவசாயிகள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளனர்.
 இஞ்சி செடிகளில் நோய் பீடைத்தாக்கம் குறைவாக உள்ளது இதனால் அதன் பராமரிப்பிற்கு அதிக பிரயாசை எடுக்கத் தெவையில்லை.
இஞ்சி செடிகளிற்கு அதிகளவு நீர் பாய்ச்ச தேவையில்லை என்ற படியால் , தூவல் நீர்ப்பாசனம் மட்டும் போதுமானது.
இதனால் இஞ்சி செய்கை விவசாயிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
 இஞ்சிப் பயிரை எந்த இடத்திலும் செய்கை யை பண்ணக்கூடியதாக இருப்பதும் ஒரு காரணமாகும்.
 
அதாவது வீட்டு வளவில் உள்ள முந்திரி மரங்கள், மா, பலா,தென்னை, பப்பாசி போன்ற அடர்ந்த மர‌ங்களின் கீழ் ஊடுபயிராக இஞ்சிப் பயிரை வளர்த்து அதிகளவு இலாபத்தை ஈட்டமுடியும் என்று நிரூபிக்கப் பட்டிருப்பதாக விவசாய போதனாசிரியை முர்சிதா ஸிரின் கூறுகிறார்.
 
இஞ்சி செய்கையும் அதன் விளைச்சலும் குறைந்த முதலீட்டில் குறைந்த பராமரிப்புச் செலவில் நம்பமுடியாத இலாபத்தை பெற்றுத்தரக்கூடியதாக இருக்கின்றது.
 
கறுப்பு நிற கனமான பொலித்தீன் மூலம் 1 அடி உயரமும் 3 அடி விட்டமும் கொண்டதான ஒரு கொள்களனைச் செய்து அதில் 200 கிராம் இஞ்சியை நடுகை செய்தால் அதிலிருந்து 6 கிலோ கிராம் விளைச்சளை பெறமுடியும்.
 
ஒரு கொள்களனைத் தயாரிப்பதற்கு ஏற்படக்கூடிய ஆகக் கூடிய செலவு மொத்தமாக 200 ரூபாவாக இருக்கும் நிலையில் அதிலிருந்து 1750 ரூபாய் வருமானத்தைப் பெரக்கூடியதாக இருக்கிறது.
 
குடும்ப பெண்களும் தமது வருமானத்தை பெருக்கிக் கொள்ள தமது வீட்டிலுள்ள குறுகிய நிலப்பரப்பிற்குள்ளேயே இஞ்சி செய்கையினை மேற்கொண்டு சிறந்த வருமானத்தினை ஈட்ட முடியும் என்கிறார் விவசாய போதனாசிரியை M.H முர்சிதா ஸிரின் .
 
விவசாய போதனாசிரியை M.H முர்சிதா ஸிரின் அவர்களின் அயராத முயற்சியினால் ஏறாவூரில் தரிசு நிலமாகவும் கவனிப்பாரற்றும் கிடந்த பல காணிகளில் ஆண்களும் பெண்களும்  இஞ்சி உட்பட பழமரச் செய்கையிலும், மரக்கறி பயிர் உற்பத்தியிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
இது ஒரு சாதகமான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய புரட்சி என்று சொல்வதில் பெருமைப் பட்டுக்கொள்ள முடியும்.
 
 
Agriculture+Instructor+Murshida+Shreen.J
 
 
DSC00146.JPG
 
 
DSC00155.JPG
 
DSC00189.JPG
 
DSC00190.JPG
 
 
DSC00195.JPG
 
 
DSC00212.JPG
 
 
 

 


DSC00216.JPG


DSC00223.JPG

 

 


DSC00224.JPG

 

DSC00233.JPG

 

DSC00239.JPG

 

DSC00249.JPG

 

DSC00633.JPG

 

DSC00640.JPG

 

battinews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.