Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப்பில் பார்த்த பெற்றோர்!

Featured Replies

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப் மூலம் பார்த்த பரிதாப சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
Untitled-2_37.jpg
 
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சீமோன்பிள்ளை மற்றும் எலிசபெத் 1990 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர்.
 
இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 2 ஆவது மகன் லியோசின் 30 வயது . இவர் கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல்மார்க்கமாக சென்றுள்ளார். 
 
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் முதலாம் திகதி காலையில் லியோசின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்தியாவிலுள்ள லியோசினின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
 
அவுஸ்திரேலியாவில் சடலம் தொடர்பிலான விசாரணை முடிந்து லியோசினின் உடல் அங்குள்ள அவரது நண்பர்கள் மற்றும் மெல்போர்ன் நகரில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது. 
 
நேற்றைய தினம் லியோசினின் இறுதி சடங்கு இடம்பெற்றது.இந்தியாவில் உள்ள  உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் நேற்யை தினம் முகாமில் இருந்தபடியே கணனியில் ஸ்கைப் தொழிநுட்பத்தின் மூலம் மகனின் இறுதி கிரியைகளை பார்த்து மன வேதனையுடன் கதறி அழுதனர்
 
 
நூற்றுக் கணக்கானோர் கண்ணீர் மல்க லியோ சீமான்பிள்ளையின் இறுதி யாத்திரை Geelong இல் நடை பெற்றது:

 

Semanpillai.n_CI.jpg

நூற்றுக் கணக்கானோர் கண்ணீர் மல்க லியோ சீமான்பிள்ளையின் இறுதி யாத்திரை Geelong இல் நடை பெற்றது

இதன் போது  பலதரப் பட்ட புகலிடக் கோரிக்கயாலர்களும் கலந்துகொண்டதுடன் மிகவும் அமைதியான முறையில் லியோவின் இறுதி ஊர்வலம் இடம் பெற்றது 
 
 ஒரு மனிதநேயமிக்க நாடான அவுஸ்ரேலியா லியோவின் இறுதி பயணத்துக்கு  கூட தாய்  தந்தையரை அனுமதிக்க வில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
 
அகதியாக வந்த லியோ இன்று தன் சொந்தங்கள் கூட பார்ப்பதற்கு முடியாமல் தனியாக இறுதி யாத்திரை சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
globaltamilnews

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.