Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒதியமலை வைரவர் ஆலய வளாகத்தில் புத்தமத அடையாளங்கள் திணிக்கப்படுகின்றன : ரவிகரன்

Featured Replies

ஏறத்தாள 200 வருட வரலாற்றுடனும் சிவ அடையாள நம்பிக்கைகளுடனும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த ஒதியமலை வைரவர் ஆலய வளாகத்தில் இப்போது புத்த சமய அடையாளங்கள் திணிக்கப்பட்டு வருகிறன்றன என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
 
ravikaran.jpg
 
தமிழர் பூர்வீக இடங்களிலும் பௌத்தம் தவிர்ந்த மதங்களிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் திணிக்கும் செயல்களுள் ஒதியமலை வைரவர் ஆலய வளாகமும் தற்போது உள்வாங்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
1984 மார்கழி மாதம் 32 தமிழரை படுகொலை செய்து தமிழர் தேசங்களை உலுக்கிய ஒதியமலை படுகொலை நிகழ்ந்ததன் பின்னர் அவ்விடங்களை விட்டு வெளியேறிய ஒதியமலை மக்கள் 2010ஆம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்டு தமது நாளாந்த வாழ்க்கை செயன்முறைக்குள் மெல்ல மெல்ல ஈடுபடத்தொடங்கியிருந்தனர்.
 
இந்நிலையில் அதன் செயற்பாடுகளில் ஒரு கட்டமாக காலங்காலமாக தாம் வழிபட்டு வந்த மலையடி வைரவர் ஆலய வளாகம் பற்றைகளால் நிரம்பி இருந்த நிலையில் ஊர் மக்கள் ஒன்று கூடி ஒதியமலை வைரவர் ஆலய வளாகத்தை சுத்தப்படுத்த தொடங்கினர்.
 
இராணுவ அழுத்தங்களுள் உட்பட்டிருந்த ஒதியமலைக் கிராம மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் இராணுவத்தினரும் சிரமதானத்தில் பங்கெடுத்து கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தங்களின் பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில் சில நாட்கள் கடந்த நிலையில் மலையடி வைரவர் வளாகம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் மலையோடு சேர்ந்ததாக இராணுவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டு அப்பகுதியை அண்மித்து ஒருவரும் வருகை தரக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
காலங்காலமாக தாம் வழிபட்ட மலையடி வைரவர் வளாகம் தமக்கு வேண்டுமெனவும் கும்பாபிசேகம் செய்து மீண்டும் பூசை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டுமெனவும் மக்கள் கிளர்ந்தெழுந்த நிலையில் சிலர் பொலிசாரால் அழைத்துச்செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஒதியமலை வளாகம் அரசாங்க சொத்து எனவும் இங்கு மத அடையாளங்கள் எதுவும் இடப்படலாகாது என்ற கருத்துக்களை திட்டமாக முன்வைத்த இராணுவத்தினரும் பொலிசாரும் மக்களின் மலையடி வைரவர் ஆலய சமய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
 
இராணுவ முகாம்களால் சூழப்பட்டிருக்கும் ஒதியமலையில் ஆங்காங்கே குடியிருக்கும் தமிழ்க்குடும்பங்கள் இவர்களின் எச்சரிக்கைகளையும் தடுப்புகளையும் மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் மலையடி வைரவரை வேண்டி அவரிடமே பாரத்தை இறக்கி மெல்ல மெல்ல தமது நாளாந்த நடவடிக்கைகளுக்கு திரும்பி இருந்தனர்.
 
இவை நடந்து சில நாட்கள் கடந்த நிலையில் புத்த பிக்கு ஒருவர் ஒதியமலைக்கு சென்று வந்தது மீண்டும் மக்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தத்தொடங்கியிருந்தது.
 
இந்நிலையில் மேற்படி விடயங்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்ற முனைப்பில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விபரிக்க மறுநாளே அங்கு சென்று மக்கள் சந்திப்பை நடாத்திய ரவிகரன் மலையடி வைரவர் தொடர்பில் மேலும் பல தகவல்களை சேகரித்தும் பின்னர் இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியில் மலையடி வைரவர் வளாகத்தை அண்மித்து மக்கள் கூறும் விடயங்கள் சரியென உறுதிப்படுத்தினார். அவற்றிற்கான ஆதாரங்களையும் சேகரித்தார்.  
மலையடி வைரவர் மீண்டும் ஒதியமலையில் எழுந்தருளுவார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கினார்.
 
சில நாட்கள் இவை தொடர்பில் மௌனித்த இராணுவத்தினர் மெல்ல மெல்ல தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக மீண்டும் இரு மாத கால இடைவெளியின் பின்னர் தொடர்பு கொண்ட ஒதியமலை மக்கள் தெரிவித்தனர். மண், கற்கள் போன்றவையும் கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக கொண்டுசெல்லப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
 
இதன் அடிப்படையில் மீண்டும் அவ்விடத்திற்கு விரைந்து ஒதியமலை வளாகத்தை பார்வையிட்டு அரசமரம் அங்கே நாட்டப்பட்டிருப்பதையும் விளக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் உறுதிப்படுத்தினார். அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்ககூடாது என்ற எச்சரிக்கைகளை இராணுவத்தினர் பிறப்பித்த நிலையில் அங்கு சென்று இயலுமான அளவு ஆதாரங்களை பெற்று பௌத்த மத அடையாளம் நிறுவப்படுவதற்கான பணிகள் ஆரம்பமாகிறது என்பதை உறுதிப்படுத்தினேன்.
 
திரும்பிய பின்னும் அன்று இரவு அழைப்பை ஏற்படுத்திய ஒதியமலை மக்கள் ரவிகரன் வருகை தொடர்பில் பொலிசாராலும் இராணுவத்தினராலும் தாம் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக அச்சத்துடன் தெரிவித்திருந்தனர்.
 
முற்றுமுழுதாக இராணுவ அழுத்தங்களுள் மக்களை முடக்கி அவர்களின் உரிமைகளை மெல்ல மெல்ல பறித்து அவர்களின் இயல்புநிலை வாழ்க்கையை வெகுவாக சிதைத்து பௌத்த மத அடையாளத்தை நிறுவ எத்தனிக்கும் பௌத்தமத வாதிகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் மீண்டும் ஒதியமலையில் சிவன் அடையாளத்தை நிறுவுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் மாகாணசபையின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என்று தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.