Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூங்கும் வேங்கையை இடறுகிறது மத்திய அரசு: வைகோ காட்டம்

Featured Replies

xvaiko_jpg_1603704h.jpg.pagespeed.ic.Wr0
வைகோ | கோப்புப் படம்

இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலங்களின் மீதும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் என்றும், தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்றும், மே மாதம் 27 ஆம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் தர வேண்டும் என்றும் அறிவித்து இருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் கருத்துகளைப் பதிவு செய்வதற்குச் சமூக வலைதளங்களையே முழுமையாகப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், தற்போதைய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு மிகவும் கவலை தருகிறது.

1938 ஆம் ஆண்டில் இருந்தே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகம் தியாகம் நிறைந்த போராட்டங்களை நடத்தி இருக்கின்றது. 38 இல் தாளமுத்து - நடராசன் களபலியானது முதல், எட்டுத் தமிழர்கள் இந்தியை எதிர்த்துத் தீக்குளித்து மாண்டனர்.

1965 இல் நடைபெற்ற மொழிப்புரட்சியில், இந்திய ராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் களம் கண்டனர். பலர் உயிர்ப்பலி ஆயினர். பேரறிஞர் அண்ணா 1963 இல் மாநிலங்கள் அவையில் பேசுகையில், 'புகழ்மிக்க தமிழ் மொழிக்குச் சொந்தக்காரன் நான். எந்த மொழியில் இலக்கியங்களை, காவியங்களை நாங்கள் பெற்று இருக்கின்றோமோ, அந்த மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உரிய இடத்தைப் பெறும் வரையில், நான் மனநிறைவு அடைய மாட்டேன்' என்றார்.

இந்தி ஆட்சி மொழியாக ஆவதைத் தடுக்க நடைபெற்ற அறப்போரில், இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவு தீயிடப்பட்டது. எண்ணற்றோர் சிறை புகுந்தனர். 1967 இல், அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்தவுடன், 'தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை' என்று சட்டம் நிறைவேற்றினார். எனவே, இந்தப் பிரச்சினை இந்தி பேசாத மக்களுக்குக் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் கவலை தருகின்ற உணர்ச்சிமயமான பிரச்சினை ஆகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்; அதுவரை ஆங்கிலம் மத்திய ஆட்சி மொழியாக நீடிப்பதுதான், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சிதையாமல் பாதுகாக்கும்.

1998 இல், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோது, அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என அறிவித்தது.

2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோதும், கொள்கை அளவில் இதை ஏற்பதாக உறுதி கூறப்பட்டது.

ஆனால் தற்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இந்தி நமது தேசிய மொழி ஆட்சி மொழி, எனவே, இதனை ஊக்குவிப்பேன் என்று கூறி உள்ளார்.

தமிழகம், இந்தி ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தித் திணிப்பை எதிர்த்து, ரத்தமும், கண்ணீரும் சிந்தி மகத்தான போராட்டங்களைத் தமிழகம் நடத்தி வந்து உள்ளது. தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6133350.ece?ref=sliderNews

 

இந்தியை கட்டாயப்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

 

xmodi_jaya_1948586h.jpg.pagespeed.ic.1Go

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி | கோப்புப் படம்

அரசின் சார்பில் சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, “பேஸ்புக்” போன்ற தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது.

அதிலும், முதலில் இந்தியில் பதிவிட்ட பின்னர் ஆங்கிலத்தில் பதிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தை விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

சட்டப்படி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இணைப்பு மொழி ஆங்கிலமாகும். 1976-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி குறித்த சட்டப்படி, மத்திய அரசு அலுவலகலங்களில் இருந்து சி- பிராந்தியத்தில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அச்சட்டப்பிரிவில், இந்தி பேசாத மக்கள், இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சி- பிராந்தியத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளுடன் அனைத்து தொடர்பையும் ஆங்கிலத்தில் மேற்கொள்வது அவசியமாக இருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் தகவலை தெரிவிக்காவிட்டால் அது அவர்களுக்குச் சென்றடையாது.

அவ்வாறு இருக்கும்போது, உள்துறை அமைச்சகம் தொடர்பு மொழியாக இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியிருப்பது 1963-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத்திற்கே எதிரானதாகும்.

எனவே, அரசின் சார்பில் சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சக உத்தரவில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு ஆங்கிலத்தை பயன்படுத்த பிரதமர் வழிவகை செய்ய வேண்டும்.

இதேபோல், கடந்த 3-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் தொண்மை வாய்ந்த தமிழ் மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தேன்.

மேலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் அத்தனையையும் இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 8-ல் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இந்த கோரிக்கைளை நிறைவேற்றினாலே, சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

 

 

தமிழர்களுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி !

தமிழர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்திய அரசு தன் இந்தித் திணிப்பு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

அதாவது சமூக வலைத் தளங்களின் இந்தியை பயன்படுத்துவது என்பது இந்தி பேசும் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது. இப்படியான உறுதியை கொடுத்துள்ளது இந்திய அரசு. இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகம் மட்டும் தான் எதிர்வினையாற்றியது . ஆனால் இதன் மூலம் பயனடைந்தது கேரளா , கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களும் தான்.

சரி, இந்தித் திணிப்பு இந்தி மாநிலங்களில் மட்டும் தான் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் இவ்வளவு நேரம் எங்களுக்கு வீணாகி இருக்காது. நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக் கொண்டீர்கள். ஆனால் நாங்கள் எங்கள் முடிவை மாற்ற இயலாது. தமிழகத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் , தேசிய நெடுச்சாலைகளில் உள்ள இந்தி திணிப்பை நாங்கள் அழிப்பது என முடிவெடுத்து உள்ளோம் என்பதை இந்தி அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 

முகநூல் வழியாக‌ //

இராச்குமார் பழனிசாமி

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.