Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதத்தைத் தூண்டும் அரசு தெற்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதலை ஊக்குவிக்கும் விசித்திரமான நிலைமை!

Featured Replies

இலங்கையின் பயங்கரவாதத்துக்கு பலிக்கடா தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் 'FB' என்ற சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலைவரங்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை வரைந்தமைக்காக இருபது ஆண்டு காலச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம் 2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வாஷிங்டனில் அஞ்ஞாதவாசம் புரிந்துவருகின்றார். தமிழாக்கம் :- வி.சிவராம். 

 

தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத் தூதரகங்களைத் தாக்கும் இலக்குடன் சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று கருதப்படும் இலங்கையர் இருவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டமையை அடுத்து, இந்தியாவைத் தாக்குவதற்கான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் ஆட்கள் இணைவுத் தளமாக இலங்கை உள்ளது என்ற கருத்து நிலைப்பாடு மேற்கிளம்பி மீண்டும் உச்சத்துக்கு வந்திருக்கின்றது. ஆனால் இந்தப் பிரச்சினை வேறு ஒரு சிக்கலைக் கொண்டுவந்துவிட்டது.

 

சர்வதேசக் குற்றங்களை இழைப்பவர்களாக இலங்கையில் செயற்படுபவர்கள் எஞ்சியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குழுதான் என்று இலங்கை அரசு காட்டும் பட விளையாட்டை இது மோசமாகப் பாதிக்கச்செய்துவிட்டது. மீண்டும் இலங்கைத் தீவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒன்றிணைகிறார்கள் என்பதுதான் கொழும்பின் அண்மைக்கால 'புதுக்கதை' வெளிப்பாடாக உள்ளது. இதற்காக, செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறப்படும் ஏனையயோரைக் கொன்று, அதன் பின்பு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள 16 அமைப்புக்களையும் 424 தனியாட்களையும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் அறிவித்தது அரசு. அதற்கு, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் ஐ.நாவின் 1378 இலக்கப் பிரேரணையை நியாயமான ஆதாரமாகவும் காட்டியது. அரசுக்கு எதிரான இராணுவப் படையான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச உதவிகளைப் பெற்று மீளிணைகின்றது என்ற பிரச்சினையை இலங்கை தூக்கிப் பிடிப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது மிகச் சுலபம். அதன் மூலம் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போக்குக்குள் தன்னை அது ஆட்படுத்திக் காட்ட முடியும். அத்தகைய பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் நாடாகத் தன்னை வெளியே காட்டிக்கொண்டு, அதற்குள் மூழ்குவதன் மூலம் வெளிநாடுகளுக்குப் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கத் தவறியுள்ள தனது செயலின்மையை மூடிமறைக்க முடியும். 2009 மேயில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதுடன் இலங்கையின் முப்பது ஆண்டுகால சிவில் யுத்தம் முடிவுக்குக்கு வந்தது. எனினும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஆழமாக விதைத்து வேரோடியுள்ள அரசியல் பிணக்கு இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. அதற்குள் முஸ்லிம்களும் கூட இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளனர். 2009 இலிருந்து வந்த வருடங்களில் தமிழர்களின் எதிர்வினைப் போக்கு புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது - இலங்கைக்குள் வன்முறையற்ற அஹிம்சைப் போராட்டமாக. அதில் கூட புலம்பெயர் தமிழர்களின் ஈடுபாடு அதிகளவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் முகம்கொடுக்கும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து பகிரங்கப்படுத்தி வருகையில், கொழும்பு அதனை எதிர்கொள்வதற்கும் தனக்கு பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான புதிய ரகக் கதை ஒன்று அவசியமானது என்று உணர்ந்து கொண்டது. யுத்தத்தன் இறுதி மாதங்களில் இலங்கைப் படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளர்ச்சியாளர்களாலும் இழைக்கப்பட்டவை எனக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை சர்வதேச சமூகம் வலியுறுத்தத் தொடங்கியதும் புதுக்கதை தேடும் விடயம் இலங்கைக்கு மிக அவசரமானதாயிற்று.

 

இலங்கையில் சிவில் யுத்தம் நடந்த சமயத்தில் ஆயுதங்களை சுவீகரிக்கவும், உளவுத் தகவல்களைத் திரட்டவும் பிற வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மலேசியாவைப் புலிகள் தங்களது தளமாகப் பயன்படுத்தினர். புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நொறுக்குவதில் இலங்கையினதும் மலேசியாவினதும் உறவு நீண்டகாலப் பின்னணி உடையது. அதற்கு சிறப்பம்சமான ஓர் உதாரணத்தைக் காட்டுவதாயின் இந்த கூட்டுறவுச் செயற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதச் சுவீகரிப்பாளரான செல்வராஜா பத்மநாதன்(கே.பி.) 2009 ஓகஸ்ட்டில் அதிரடி நடவடிக்கை மூலம் மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டமையைக் குறிப்பிடலாம். 2009 இற்குப் பிறகு, தமிழ் அகதிகளைக் கட்டுப்படுத்தவேண்டும் என கோலாலம்பூர் தீர்மானித்தமைக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று மலேசியாவின் சுதேசிகளான இந்தியக் குடிகள் (அதில் குறிப்பிடத்தக்க வலிமையான குரலாக தமிழர்கள் அடங்குகின்றனர்) அங்கு மலேயர்களின் மேலாதிக்க நாட்டில் மேன்மையான கவனிப்புக்காக தீவிர பிடிவாதத்தையும் வலியுறுத்தலையும் ஆரம்பித்தமை ஆகும். மலேசியத் தமிழரான பேராசிரியர் பி.இராமசாமி மலேசிய நாட்டின் பினாங் மாநில அரசின் பிரதி முதலமைச்சராக உயர்ந்தமையும் தமிழ் அகதிகள் பிரச்சினை நாட்டுக்குள் தீவிரமடைந்தமையும் பிற காரணிகளாகும். அத்தோடு, இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பிரயோசனங்களை கேலாலம்பூர் ஊன்றி அவதானிக்கவும் தொடங்கியது. கோலாலம்பூரில் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளரினால் அகதிகள் என அந்தஸ்து அளிக்கப்பட்ட மூவரை அவர்கள் விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் என்ற காரணத்தினால் கைது செய்திருப்பதாக மலேசியா மே 15 ஆம் திகதி அறிவித்தது. அதற்கான ஆதாரம்: அவர்களிடம் விடுதலைப் புலிகளின் பிரசார விடயங்கள் இருந்தனவாம்! பெரிய விசாரணைகள் ஏதும் முன்னெடுக்கப்படாமலேயே அந்த அகதிகள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு விட்டனர். ஆனால், நாடுகடத்துவதற்கு இணங்கியமைக்காக மலேசிய அரசை மனித உரிமைகள் கண்காணிப்பகமும், அதிகளுக்கான ஐ.நா. தூதரகமும் கடுமையாக விமர்சித்தன. "அகதிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்கள் சித்திவதைக்கு உட்படுத்தப்படுவதினின்றும் காப்பாற்ற வேண்டிய தனது கடப்பாட்டை நிறைவுசெய்து அந்தப் பொறுப்பை கௌரவமாக நிறைவேற்றுவதை விட, இலங்கையுடனான தனது உறவைத் துலங்கச் செய்வது குறித்துத்தான் மலேசிய சிரத்தையாக உள்ளது." - என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பிரதி இயக்குநர் பில் றொபர்ட்ஸன் தெரிவித்தார். கடந்த ஐந்து வருடங்களாக இலங்கை மண்ணில் சர்வதேசக் குற்றங்களைப் புரிந்து தொல்லை தரும் ஏகத்தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்று இலங்கை தெரியப்படுத்தி வந்தபோதிலும் ஆசியாவில் குற்றங்களுக்கான மையம் இலங்கையே என்பது அடையாளம் காணப்பட்டது. அதற்கு ஓர் உதாரணம் மனித ஆட்கடத்தல்.

 

 

 

 

 

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான படையினரின் வன்முறைகள் இன்னமுமே ஒரு விவகாரமாக இருக்க அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாதுகாப்பான சொர்க்கத்தை நோக்கிக் கப்பலில் தாங்கள் செல்வதற்காகப் பெரும் தொகைப் பணத்தை செலுத்த முன்வந்தனர். - பெரும்பாலும் கிழக்காசியாவுக்கு அல்லது கனடா, ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு. தமிழ் அகதிகள் என்று கருதப்படுவோர் தங்களது மண்ணை வந்தடைவது குறித்து ஆட்சேபித்து அதைத் தடுத்து ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்ததும் இத்தகைய நடவடிக்கைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகளே முன்னெடுக்கிறார்கள் என்று இலங்கை அவசரமாக அறிவிக்கும். இந்த மோசடியில் அரசுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பதை தனக்குச் சார்பான முறையில் இலங்கை மறந்து ஒளித்து விடும். கடந்த நவம்பரில் மனித ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்யப்பட்டனர் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் அறிவித்தன. அந்த அறிக்கை இந்த விடயத்தில் முக்கிய சூத்திரதாரி இலங்கைக் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சஞ்சீவ அனட்டுகொட என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மேலும் அதிரவைக்கும் செய்திகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் 2013 ஜனவரி மத்தியில் வெளியாகின. 'த ஒஸ்ரேலியன்' பெயர் விவரத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தாமல் "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நன்கு தெரிந்த, நெருக்கமான உயர்மட்டமே...." இந்த ஆட்கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று பகிரங்கப்படுத்தியது. எனினும் ஆஸ்திரேலிய அரசு பின்னர் அந்த அறிக்கையை மறுத்தது.

 

இந்தியாவை இலக்குவைக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் ஆள்சேர்ப்பு மையமாக இலங்கை விளங்குகின்றது என்று கூறப்படுகின்றமை இலங்கை எதிர்கொள்ளும் இன்னொரு சர்வதேசக் குற்றவிவகாரம் ஆகும். கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களான ஸாகிர் ஹுசைன் , முஹமட் ஹொசைனி இருவரும் மட்டும்தான் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தான் உளவுப் பிரிவினரான ஐ.எஸ்.ஐயினரால் தாங்கள் இலங்கையிலேயே ஆட்சேர்க்கப்பட்டனர் என்பதை ஒப்புக்கொண்டனர் என்பதல்ல; 2012 செப்ரெம்பரில் தமிழ்நாடு பொலிஸார் இந்தியப் பிரஜையான டமீம் அன்ஸாரி என்பவரைக் கைது செய்தனர் - இந்தியப் பாதுகாப்பு மையங்கள் தொடர்பாக உணர்வுபூர்வத் தகவல்களைத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டில். அவரை இயக்கியவர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து செயற்பட்டபடி ஐ.எஸ்.ஐயின் தமிழ்நாட்டு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருந்த அமீர் சுப்பையா சித்தீக் எனக் கூறப்பட்டது. "இலங்கையில் உள்ள முஸ்லிம்களை தங்கள் நாசவேலைகளுக்குப் பயன்படுத்தினால் அத்தகைய சம்பவங்களில் தங்களுக்கு நேரடியான தொடர்பு ஏதும் கிடையாது என்று பின்னர் மறுக்கும் போது அது நம்பகரமானதாக இருக்கும் என்பதுதான் இதில் ஐ.எஸ்.ஐயின் பிரதான தந்திரோபாயம்" - இப்படி என்.டி.ரி.வி ஹுசைனின் கைது தொடர்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

 

ஆள்கடத்தல்களில் தனது சம்மதத்தை இலங்கை மறைத்தமை போன்றே அரசும் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரிக்கின்றது என்பதை நிராகரித்தது. 1990களின் ஆரம்பத்தில் அது தீவிர பழமைவாத வஹாபிசஸம் தரப்புகளால் தூண்டப்பட்டு, சவூதி அரேபியாவினால் நிதி உதவி அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இலங்கை இராணுவம் தீவிரப்போக்குடைய முஸ்லிம்களை 'ஊர்காவல்படை' என்று அறியப்பட்ட பெயரில் ஒன்றிணைத்து, தமிழ்க் கிராமங்களை அச்சுறுத்தி, தமிழ்க் கிளர்ச்சியாளாருக்கு எதிரான தமது பதில் கிளர்ச்சி நடவடிக்கைத் தந்திரோபாயத்துக்கான உளவுத் தகவல்களைத் திரட்டிப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களைப் பயன்படுத்திக்கொண்டது. அந்தத் தீவிரவாதம் கிழக்கு இலங்கையில் நீடித்ததுடன் (பாகிஸ்தானின்) ஐ.எஸ்.ஐ. தனது செயற்பாட்டாளர்களை அங்கிருந்து ஆள்சேர்த்து எடுப்பதற்கான தகுந்த சூழலையும் தந்தது.

 

தீவிர இஸ்லாமியப் போக்குக்கு கிழக்கில் அனுமதி அளிக்கும் இலங்கை அரசு, அதேசமயம், தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டிவரும் பௌத்த தேசியவாதிகளுக்கும் ஆதரவு நல்கி வருகின்றது என்பது அவதானிப்பதற்கு முக்கியமான விடயமாகும்.

 

தமிழ்த்தேசியவாதம், வலிமையான அயல்தேசமான இந்தியா ஆகிய இரண்டையும் வசமாகக் கையாள்வதற்கு தீவிர இஸ்லாமிய மூலங்கள் உதவும். அதேவேளை கடந்த ஜூலை 15 ஆம் திகதி இடம்பெற்றமை போன்று பௌத்த தேசியவாதம் முஸ்லிம்களிடையே வன்முறையைக் கிளறிவிடும். அது, அரசுக்குப் பிரித்தாளும் தந்திரமாகக் கைகூடும்.

 

இந்தப் போக்குகளின் பின்புலத்தில்தான் சர்வதேசக் குற்றங்களுக்கான மையமாகவும் ஆட்கடத்தல் மற்றும் அயல்நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆட்களைத் திரட்டும் தளமாகவும் இலங்கை மாறிவருகின்றது என்பதற்கான சான்றுகள் திரண்டு வருகின்றன.

 

இதில் துரதிஷ்டம் என்னவென்றால் நாட்டின் அரசின் முழு அதிகாரங்களும் முழு அளவில் செல்லுபடியாகும் பிரதேசங்களில்தான், அரசியல் மற்றும் இராணுவ உயர்மட்டங்களுக்குத் தெரிந்திருக்கத்தக்கதாக இவ்வளவும் நடைபெறுகின்றன என்பதுதான்.

 

ஆட்சி முறைமை, மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் மிக மோசமான போக்கையுடைய பல நாடுகளுள் இலங்கையும் ஒன்று-அவை பயங்கரவாதத்துக்கு எதிரான தங்களது வெற்றிக் கதைகளை தங்களின் சொந்தக் குற்றங்களை மறைப்பதற்காகப் பயன்படுத்துவதுதான் கவலைக்குரியது.

 

சர்வதேச சமூகத்தை உரிய முறையில் கையாளவேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உண்மையிலேயே சிரத்தை இருக்குமானால் முதலில் அவர்கள் கோதுமையிலிருந்து பதரை நீக்கவேண்டும் - பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற முகமூடியை தங்களுடைய குற்றங்களை மறைப்பதற்கான பொருத்தமான விடயமாகப் பாவிப்போரை ஒரு புறமும் உண்மையில் பயங்கரவாதத்தை முறியடிக்க நேர்மையுடன் ஆதரிப்போரை மறுபுறமுமாக

 

http://malarum.com/article/tam/2014/06/26/3176/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.