Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைநகர்: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக போராட்டம்

Featured Replies

6(2122).jpgயாழ்.காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் நடத்தப் போவதாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் வியாழக்கிழமை (17) தெரிவித்தார். 

பாடசாலை செல்லும் இச்சிறுமியினை மேற்படி கடற்படைச் சிப்பாய், ஏலாலை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமியின் பெற்றோர்களினால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச் சிப்பாய் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை எனவும் ஊர்;காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து கண்டனப் போராட்;டம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன் மூலமே வடபகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகளினை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும் எனவும் அனந்தி மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/118406-2014-07-17-04-16-14.html

யாழ்.காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் நடத்தப் போவதாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

பாடசாலை செல்லும் இச்சிறுமியினை மேற்படி கடற்படைச் சிப்பாய், ஏலாலை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமியின் பெற்றோர்களினால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச் சிப்பாய் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை எனவும் ஊர்;காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து கண்டனப் போராட்;டம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன் மூலமே வடபகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகளினை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும் எனவும் அனந்தி மேலும் தெரிவித்தார்.

 

http://www.pathivu.com/news/32509/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு கூட்டமைப்பு விஜயம்                                  

 

காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஸ் பிறேமச் சந்திரன் மற்றும் மாகணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், சிவயோகன் ஆகியோரும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் குடும்பத்தினருக்கு தமது ஆறுதல்களைத்  தெரிவித்தனர்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=228833234017130349#sthash.iwtOwp2j.dpuf                    

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு- பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள்

 

 

பிரச்சனையை பெரிதாக்காமல் சமாளிப்பதற்கு தமிழ்த் தரப்பொன்று பணப் பேரம் பேசலில் ஈடுபட்டுள்ளது.... குளோபல்தமிழ்ச்செய்தியாளர்

GTN%20Flash%20News_CI.jpg

காரைநகரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமியையும் குடும்பத்தினரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அலைக்கழித்த கடற்படையினர் பிரச்சனையை பெரிதாக்காமல் விடும்படியும், அங்கு இருக்காமல் வேறு இடத்திற்கு மாறிச் செல்லும்படியும், இல்லாவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் மிரட்டி வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

 இதேவேளை இன்று (17.07.14) சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று உள்ளனர். இவர்களை திடிரென சுற்றிவளைத்த கடற்படையினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் தெரிந்த பின் விலகிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் அரசிற்கு நெருக்கமான தமிழ்த் தரப்பொன்று பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனக் கோரி இருப்பதுடன் அதற்காக எவ்வளவு தொகைப் பணம் வேண்டும் என பேரம் பேசியதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது.

காரைநகரில் 11வயதுச் சிறுமி மீது கடற்படையை சிப்பாய்  தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் - விடயத்தை முடக்கிவிட உயர் மட்டத்திலிருந்து அழுத்தங்கள் - குளோபல்தமிழ்ச்செய்தியாளர்-

16-07-2014 - 08:14

யாழ்ப்பாணம், காரைநகரில் 11 வயது சிறுமியொருவர் அப்பகுதியினில் நிலைகொண்டுள்ள கடற்படையை சிப்பாய் ஒருவரால் தொடர்ச்சியாக 12 நாட்களிற்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்;கப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த சிறுமி மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையில் காரைநகரின் ஊரி கிராமத்தில் பாடசாலைக்கு செல்லும் குறித்த சிறுமி மடக்கி அருகிலுள்ள கண்டல் காட்டினுள் கொண்டு சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். அத்துடன் குறித்த சிறுமி மிரட்டப்பட்டதையடுத்து வீட்டாருக்கு தகவல் தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில் இரத்தப் பெருக்கினையடுத்தே பெற்றோர் வினவிய போதே உண்மை வெளியாகியுள்ளது.

இச்செய்தி வெளியாகும் வரை குறித்த கடற்படை சிப்பாய் நீதிமன்றில் காவல்துறையால் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கவில்லை. விடயத்தை முடக்கிவிட உயர்மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109473/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.