Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாசியா மீதான அமெரிக்காவின் செல்வாக்கு தளர்கின்றது? - ஓர் ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

South%20asian%20leaders.jpg

இந்தியாவின் அயல்நாடுகள் பல சீனாவுடன் நல்லுறவைப் பேணிவருவதில் ஆர்வங் காண்பிக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியாவை எதிர்த்தே இந்த நாடுகள் சீனாவுடன் நல்லுறவைப் பேணுகின்றன எனத் தென்படுகின்ற போதிலும், தமக்கெதிரான அமெரிக்காவின் கடும்போக்கு அணுகுமுறையை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய உத்தரவாதம் அளிப்பவராகவே இந்த நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றன. 

இவ்வாறு Eurasia Review இணையத்தில் Chintamani Mahapatra* எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

தென்னாசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கானது மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இப்போக்கானது எதிர்காலத்தில் மேலும் அதிகமாகும் என எதிர்வு கூறப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்ற பின்னர், தென்னாசியா மீதான மூலோபாயக் கொள்ளை வகுப்பாளராக அமெரிக்கா விளங்கியது. இதற்கும் மேலாக தென்னாசியாவானது அமெரிக்காவின் வர்த்தகத் துறைக்கு பல்வேறு பொருளாதார வாய்ப்புக்களையும் வழங்கியது. 

பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்ததன் பின்னர் அமெரிக்காவானது தென்னாசியா தொடர்பில் கவனம் செலுத்தத் தொடங்கியது. பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்பைப் பேணிய போதிலும் சில சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானுக்கு உதவ முடியாதிருந்தது. தென்னாசிய ஒப்பந்த அமைப்பு மற்றும் மத்திய ஒப்பந்த அமைப்பு ஆகியவற்றில் பாகிஸ்தான் உறுப்புரிமை பெற்றிருந்த போதிலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவால் உதவ முடியவில்லை. 

1970களின் பிற்பகுதியில், ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் தலையீட்டை மேற்கொண்டதன் பின்னரே தென்னாசிய விவகாரத்தில் அமெரிக்கா தீவிர ஈடுபாட்டைக் காண்பித்தது. 

இந்தியப் பொருளாதார சீர்திருத்தத்தின் பார்வையில் நோக்கும் போது, பனிப்போருக்குப் பின்னான காலப்பகுதியில் அமெரிக்கா, தென்னாசியா மீது தீவிர அக்கறை காண்பிக்கத் தொடங்கியது. தென்னாசியப் பிராந்தியத்தில் நிலவிய அணுவாயுதப் பயன்பாடுகள் மற்றும் அமெரிக்கா மீதான ஆப்கானின் செப்ரம்பர் 2001 பயங்கரவாதத் தாக்குதல் போன்றன அமெரிக்காவின் கவனத்தை தென்னாசியாவின் பக்கம் திசைதிருப்பியது. 

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவானது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்ததுடன், இந்தியாவுடன் வியக்கத்தக்க மூலோபாயப் புரிந்துணர்வு உடன்படிக்கையையும் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் தென்னாசியா குறிப்பிடத்தக்க முன்னுரிமையைப் பெற்றுக் கொண்டது. 

2001ல் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது. ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறுவது தவிர்க்க முடியாததாகும். பல பில்லியன் டொலர்கள் செலவில் அமெரிக்காவால் ஆப்கானில் நடாத்தப்பட்ட யுத்தமானது தென்னாசியா மீதான அமெரிக்காவின் செல் 
க்கை 2014ன் பின்னர் கணிசமானளவில் குறைக்கும் என்பது நிச்சயமானதாகும். ஆப்கானிய தலிபானின் மீளெழுகை மற்றும் அரச சாரா அமைப்புக்களை எதிர்த்து நிற்பதற்கான வல்லரசு நாட்டின் இயலுமைகள் போன்றன தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும். 

இரண்டாவதாக, ஆப்கான் யுத்தத்தின் போது பாகிஸ்தான் மீது அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருளாதார நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் இராணுவ, பொருளாதார உதவிகள் தடைப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். வரலாறு மீண்டும் மீண்டும் ஏற்படும் என்பது தவிர்க்க முடியாததாகும். 1989ல் ஆப்கானிலிருந்து சோவியத் பின்வாங்கியதன் பிறகு ஏற்பட்டது போன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவு முடிவுக்கு வரும். 

மூன்றாவதாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸின் காலத்தில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட 'மூலோபாய பங்களிப்பின்' தோற்றத்துடன் இந்தியா மீதான அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கிய போதிலும், தற்போதைய அமெரிக்காவின் பராக் ஓபாமா அரசாங்கம் இந்தியாவுடனான உறவில் நீட்சியை ஏற்படுத்தாது என்பது தெளிவாகும். ஓபாமாவின் முதலாவது நிர்வாகக் காலப்பகுதியில், இந்தியாவுடனான உறவு ஓரளவு நிலைத்திருந்தாலும் கூட, இரண்டாவது அரசாங்கத்தில் இந்தியா மீது மிகக் குறைவாகவே அக்கறை காண்பிக்கப்படுகிறது. 

இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியானது மக்களின் ஆணையுடன் பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட அமோக வெற்றியானது இந்தியா மீது அமெரிக்காவுக்கு ஈடுபாட்டை அதிகரித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

அமெரிக்காவுக்கு வருகை தருமாறு மோடியிடம் ஒபாமா அழைப்பு விடுத்தமை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வால் தேசாய் இந்தியாவில் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு இந்தியாவுக்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டமை, அமெரிக்காவின் செனற்றர் ஜோன் மக்கெய்ன், பிரதி இராஜங்கச் செயலர் வில்லியம் ஜே பேர்ண்ஸ் ஆகியோர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஸ் ஆகியோருக்கிடையிலான இந்திய-அமெரிக்க மூலோபாயக் கலந்துரையாடலைத் தயார்ப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வருகை தந்தமை போன்றன இந்தியா மீது ஒபாமா தீவிர கவனம் செலுத்துகிறார் என்பதைச் சுட்டிநிற்கின்றன. 

ஆனால் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்வதில் பெரிதளவில் ஆர்வங்கொள்ளவில்லை என்பது போல் தெரிகிறது. இதற்குப் பதிலாக மோடி, தனது அயல்நாடுகளுடன் சமாதானத்தைக் கட்டியெழுப்பி அதன்மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், இந்தியாவை பூகோளத்தில் சக்தி வாய்ந்த தலைமைத்துவ நாடாக மாற்றுவதில் சிரத்தை காண்பிக்கிறார். தேவ்யானி கோப்பிறகேட் மீது அமெரிக்க அதிகாரிகளால் பத்து மாதங்களுக்கு முன்னரேயே நுழைவுவிசை மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரமானது அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையில் உளவியல் ரீதியான விரிசலை ஏற்படுத்தியது. இந்தியாவில் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, இவ்விவகாரம் தொடர்பில் இந்தியா தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வது மிகச் சுலபமானதல்ல. 

தென்னாசியாவின் சிறிய நாடுகளான பங்களாதேஸ் மற்றும் சிறிலங்கா போன்றவற்றுடன் ஒபாமா நிர்வாகத்தின் உறவானது அண்மைய ஆண்டுகளில் மோசமானதாக உள்ளது. 2014 ஜனவரியில் பங்களாதேசில் தேர்தல் இடம்பெற்று அவாமிக் கட்சி அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்ட பின்னர் பங்களாதேசுடன் வர்த்தக உறவைப் பேணுவதில் அமெரிக்கா தயக்கம் காண்பித்து வருகிறது. தற்போதைய பங்களாதேஸ் அரசாங்கமானது ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டமை மற்றும் பங்களாதேசின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஆடை ஏற்றுமதி குறைவடைந்தமை போன்றன அமெரிக்காவின் வர்த்தக உறவில் விரிசல் ஏற்படக் காரணமாகும். 

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கமானது பொறுப்பளிக்கத் தவறியமையானது அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா தன்னால் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் என அமெரிக்கா பல்வேறு அழுத்தங்களை வழங்கியிருந்த போதிலும் சிறிலங்கா இதனை மேற்கொள்ளத் தவறியுள்ளது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் சார் உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பயங்கரவாதத்தை எதிர்த்தல் தொடர்பில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதாவது அமெரிக்காவானது தான் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் ஆனால் ஏனைய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதனை எதிர்ப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 

குறிப்பாக, இந்தியாவின் அயல்நாடுகள் பல சீனாவுடன் நல்லுறவைப் பேணிவருவதில் ஆர்வங் காண்பிக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியாவை எதிர்த்தே இந்த நாடுகள் சீனாவுடன் நல்லுறவைப் பேணுகின்றன எனத் தென்படுகின்ற போதிலும், தமக்கெதிரான அமெரிக்காவின் கடும்போக்கு அணுகுமுறையை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய உத்தரவாதம் அளிப்பவராகவே இந்த நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றன. 

நேபாளத்தில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவானது நேபாளத்துடனான தனது நெருக்கத்தை அதிகரித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். ஆனால் சீனாவுடன் ஒப்பிடும் போது, நேபாளத்தின் மீதான அமெரிக்காவின் செல்வாக்கு மிகக் குறைவாகும். இந்நிலையில் தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்ச்சியடையும் அதேவேளையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்பதைச் சிந்திக்கும் தருணம் இதுவாகும். 

Chintamani Mahapatra - Professor, School of International Studies, JNU.

 

http://www.puthinappalakai.com/view.php?20140717110895

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.