Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வீரர் ஜடேஜாவுடன் மோதிய அண்டர்சனுக்கு எதிராக ஐ.சி.சி. விசாரணை

Featured Replies

இந்திய வீரர் ஜடேஜாவுடன் மோதிய அண்டர்சனுக்கு எதிராக ஐ.சி.சி. விசாரணை
 

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சன், வீரர்களுக்கான ஐ.சி.சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ரவீந்திர ஜடேஜாவுடன் ஜேம்ஸ் அண்டர்சன் மோதலில் ஈடுபட்டமையே இதற்குக் காரணம்.

இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் நகில் நடந்த இப்போட்டியின் இரண்டாவது நாளான கடந்த வியாழனன்று மதிய உணவு இடைவேளைக்காக வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியபோது, ஜடேஜாவை ஜேம்ஸ் அண்டர்சன் திட்டியதுடன் தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில் வீரர்களுக்கான ஐ.சி.சி. ஒழுக்கக் கோவையின் 2.3.3. விதியை அண்டர்சன் மீறியுள்ளாரென குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. 

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்கு விசாரணை ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் இவ்விடயம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் ஐ.சி.சி. தெரிவிததுள்ளது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6214#sthash.2sDmHnVn.dpuf

  • தொடங்கியவர்

ஆண்டர்சனுடன் மோதல்: ஜடேஜாவுக்கு அபராதம்
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

 

அவரது ஆட்டத் தொகையில் 50% அபராதமாகச் செலுத்த ஆட்ட நடுவரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் உத்தரவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்தியா லெவல் 2 புகாரை அளித்தது. பதிலுக்கு ஜடேஜா மீது இங்கிலாந்து புகார் அளித்தது. அதாவது அதே லெவல் 2 புகாரைத்தான் அளித்தது.

அதன் படி 4 டெஸ்ட் அல்லது 2 டெஸ்ட் போட்டிகள் நீக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனால் டேவிட் பூன் மேற்கொண்ட விசாரணையில் ஜடேஜா லெவல் 1 விதிமுறையை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

 

இதனால் ஆட்டத்தொகையில் 50% அபராதத்துடன் தப்பினார் ஜடேஜா. ஆண்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது ஜடேஜாவும் ஆண்டர்சனும் வாக்குவாதத்தில் ஈடுபட, கடைசியில் ஆண்டர்சன், ஜடேஜாவைத் தள்ளி விட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.

 

இந்த விவகாரத்தில் இந்தியா புகார் அளிக்க, இங்கிலாந்து பதில் புகார் செய்தது. இந்திய கேப்டன் தோனி மிகவும் சூசகமாக ஜடேஜாவை ஆண்டர்சன் பிடித்துத் தள்ளியதைக் குறிப்பிட்டதோடு, எப்போதும் இந்திய வீரர்களே பாதிக்கப்படுகின்றனர் என்று விரிவான பேட்டியும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6249122.ece

  • தொடங்கியவர்

முற்றுகிறது ஜடேஜா விவகாரம்: ஐ.சி.சி., அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுப்பு

லண்டன்: ‘தள்ளு’ விவகாரத்தில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜாவுக்கு ஐ.சி.சி., விதித்த அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதன் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளிய ஆண்டர்சன் மீது, இந்திய அணியும், ஜடேஜா மீது இங்கிலாந்து அணியும் புகார் கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விசாரிக்கிறது.

சவுத்தாம்ப்டனில் நடந்த ஜடேஜா தரப்பு விசாரணையில், இரு வீரர்கள் மற்றும் அவர்களது சட்ட ஆலோசகர்கள் பங்கேற்றனர். ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் (ஆஸி.,), இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரித்தார்.

முடிவில், ஆண்டர்சனை நோக்கி மிரட்டும் வகையில் சென்றதாக தெரிவித்து, ஜடேஜாவுக்கு முதல் டெஸ்ட் போட்டி சம்பளத்தில், 50 சதவீதம் அபராதம் விதித்தார்.

ஆண்டர்சன் மீதான விசாரணை, மூன்றாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் (ஆக., 1) நடக்கும். ஐ.சி.சி.,யின் முடிவை ஏற்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது.

ஏற்கனவே, இப்பிரச்னை காரணமாக, பி.சி.சி.ஐ., மற்றும் இங்கிலாந்து போர்டு இடையே உரசல் ஏற்பட்டது. இப்போது, பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெ ளியிட்ட அறிக்கையில்,‘ ஐ.சி.சி., விதித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஜடேஜா தரப்பில் எவ்வித தவறும் இல்லை என, நம்புகிறோம். இவ்விஷயத்தில் ஜடேஜாவுக்கு முழு ஆதரவு உண்டு,’ என, தெரிவித்துள்ளது.

http://sports.dinamalar.com/2014/07/1406310218/jadejacricket.html

  • தொடங்கியவர்

குற்றம், நடந்தது என்ன?: டோனி
ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோருக்கிடையிலான மோதல் பற்றி டோனி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ரவீந்தர் ஜடேஜா தண்டிக்கப்பட்டது மன உடைவை தந்துள்ளதாகவும், அதை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் டோனி தெரிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா ஆக்ரோஷமாக முறைத்துப் பார்த்தார் என்ற குற்றத்திற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதத்தினை தண்டமாக போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூண் அறவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த நிலையிலேயே டோனி தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு நடந்த விடயத்தையும் கூறியுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய போசன இடைவேளைக்கு வெளியே செல்லும் போது ஜடேஜாவை நோக்கி வீரர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்தார். அதை கவனித்த நான் நடுவே சென்று அது தொடராத மாதிரி பார்த்துக் கொண்டேன். மைதானத்தை விட்டு வெளியே சென்று வீரர்கள் அறைக்கு அண்மையில் செல்லும் வேளையில் ஜடேஜா எனக்கு பின்னால் ஒன்று  அல்லது இரண்டு யார் தூரத்தில் வந்து கொண்டு இருந்தார். குறித்த வீரர் மீண்டும் ஜடேஜாவை நோக்கி ஏதோ கூற அவர் குறித்த வீரரை திரும்பி பார்த்தார். அப்போது அந்த வீரர் ஜடேஜாவை தள்ளி விட அவர் சமநிலையை இழந்து தடுமாறிப் போனார். யார் என்ன சொன்னார்கள் என திர்ம்பிப் பார்ப்பது குற்றமா? இவ்வாறு டோனி நடந்த சமபவம் பற்றி விளக்கியுள்ளார். போட்டி நிறுத்தப்பட்டு வெளியே வந்து குறித்த சம்பவம் நடக்கும் வரை ஜடேஜா ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. நான் பொய் சொல்லவில்லை என்றால் நீங்களே இந்த சம்பவம் தொடர்பாக முடிவு செய்து கொள்ளுங்கள் எனவும் டோனி கூறியுள்ளார். அவர் யார் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.

தரம் 2 இற்கான குற்றத்திற்கு தரம் 1 இற்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளதும் இதுவே முதற்தடவை எனக் கூறியுள்ள டோனி, இங்கே தரம் 1 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியாது. ஆனால் தரம் 2 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியும். இந்த தண்டனையின் சிறப்பே அதுதான் எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் முதற்தடவையாக விசாரணையில் ஒரு பக்க நியாயம் மாத்திரம் கேட்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த தண்டனைக்கு மீள் முறையீடு செய்ய முடியாத போதும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை குறித்த சமபவம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவருகின்றது. ஜெம்ஸ் அன்டர்சன் மீதான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. அவருக்கு குறைந்தது இரண்டு போட்டிகளுக்கான தடை வழங்கப்படும் என எதிர்பார்கப்படுகின்றது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/119672-2014-07-27-10-44-44.html

 

  • தொடங்கியவர்

தடையிலிருந்து தப்பினார் ஆண்டர்சன்; ஜடேஜா மீதும் தவறில்லை

ஜடேஜாவைத் தள்ளி விட்டதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்தியா அளித்த புகாரை விசாரித்த நீதித்துறை ஆணையர் கார்டன் லூயிஸ் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தார்.

இன்று ஆண்டர்சன் மீதான விசாரணையுடன், ஜடேஜாவுக்கு அபராதம் விதித்ததன் மீதான மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வந்தது.

இருவர் மீதும் தவறில்லை என்று கார்டன் லூயிஸ் தீர்ப்பளித்ததாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே ஜடேஜாவுக்கு விதித்த 50% அபராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் நடந்தது. இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சிலர் சாட்சியங்கள் அளித்தனர். இவற்றை கார்டன் லூயிஸ் பரிசீலித்தார்.

ஆண்டர்சன் மீது லெவல் 3 புகார் அளிக்கப்பட்டது. இதில் இவர் தவறு செய்ததாக முடிவெடுக்கப்பட்டிருந்தால் குறைந்தது 2 போட்டிகளிளாவது தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆண்டர்சன் தப்பிவிட்டார்.

பிறகு ஆண்டர்சனுக்கு தண்டனை அளிக்காமல் ஜடேஜாவுக்கு மட்டும் தண்டனை கொடுத்தது சரி என்று தீர்ப்பளித்தால் தவறாக முடியும் என்று இருவரது புகார்களையும் தள்ளுபடி செய்துவிட்டார் என்று தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/தடையிலிருந்து-தப்பினார்-ஆண்டர்சன்-ஜடேஜா-மீதும்-தவறில்லை-என்று-தீர்ப்பு/article6272821.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.