Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதி பதவி நீட்டிப்புக்காக தி.மு.க அமைச்சர்கள் சந்தித்து உண்மைதான்: முன்னாள் அமைச்சர் தகவல்

Featured Replies

 நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. அமைச்சர்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அதிரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நீதிபதி பதவி நீட்டிப்புக்காக தி.மு.க அமைச்சர்கள் சந்தித்து உண்மைதான்: முன்னாள் அமைச்சர் தகவல் இந்த நிலையில் சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், சர்ச்சையில் சிக்கிய நீதிபதி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பதவியில் தொடருவதை மார்க்கண்டேய கட்ஜூ விரும்பவில்லை என, தன்னைச் சந்தித்த தி.மு.க. அமைச்சர்கள் முறையிட்டதாகவும், இந்த விவகாரத்தில் தி.மு.க உறுப்பினர்கள் தரப்பில் எந்தவித நெருக்கடியும் அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதியின் ஒப்புதலைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக எம்.பி. ஒருவர், ஆட்சியைக் கலைத்து விடுவோம் என மிரட்டியதாக முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பரத்வாஜ், பிரதமர் இருந்த விமான நிலையத்தில் கட்ஜூ இருந்தாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் புகழை சீர்குலைக்கும் வகையில் முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ நடந்து கொள்வதாகவும் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/now-ex-law-minister-bhardwaj-says-dmk-sought-extension-hc-judge-206594.html

SC shame: Katju's allegation damns integrity of three Chief Justices of India
Katju clarifies on timing of corruption allegations  / hindu

 

  • தொடங்கியவர்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்சு அவர்களின் குற்றச்சாட்டு கவனிக்கதக்கது. நீதிபதி

நியமனங்களில் முன்பு காங்கிரசு அரசும் தலையிட்டிருக்கிறது. இப்போது பா.ஜ க அரசும்

அதனைச் செய்கிறது. இந்திய நீதித்துறையின் அலங்கோலம் இப்படி அம்பலத்திற்கு

வருகிறது.உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் சிறப்பு இது!

 

தமிழர்களாகிய நாம் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டிய விடயம் இந்த நீதிபதி நியமன

விடயத்தில் கருணாவின் திமுகவும் ஈடுபட்டது என்பதேயாகும். வெளிவந்துள்ள

தகவல்களின்படி சம்பந்தப்பட்ட தமிழகநீதிபதி பல ஊழல்களில் ஈடுபட்டவர்.ஆனால்

கருணாவிற்கு நெருக்கமானவர்.இவரின் ஊழல்கள்பற்றிய அறிக்கையை இந்திய

உளவுத்துறையினர் பிரதமநீதியரசரிடம் கையளித்தனர்.எனினும் பதவி நீடிப்பு

வழங்கப்பட்டது. இதைச் செய்யாவிடின் சோனியா அரசை கவிழ்க்கப்போவதாக

திமுக பயமுறுத்தியதாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளை

நிறுத்துவதற்கு தமது செல்வாக்கைப் பயன்படுத்தாத திமுக கட்சி ஓர் ஊழல்

நீதிபதிக்காக முனைந்து நின்றதென்பது கவனிக்கதக்கது. தமிழின மக்களின் அழிவுக்கு

அவர்கள் வழங்கிய முக்கியத்துவம் அவ்வளவுதான்! இதனை உணர்ந்த தமிழகமக்கள்

இந்த தமிழினத்துரோகிகளை தமிழ்நாட்டிலிருந்து முற்றாக அகற்றி  ஒழிக்கவேண்டும்.

 

மேலும் கூடிய தகவல்களை அறிந்துகொள்ள மேலே தரப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.