Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குள்ள சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான் என முன்னாள் நீதிபதி மாக்கண்டேய கட்ஜூக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று  வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:-

உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டிருக்கிறாரே?

என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிட்ட போதும், அந்தக் கணக்கு தரப்பட்டு நாளேடுகளிலும் வந்துள்ளது. அந்தக் கணக்கை இந்த நீதிபதி இப்போது கேட்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விபரம் தெரிந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நான் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவன். சுமார் 70 திரைப்படங்களுக்கு என்னுடைய 25ஆம் வயது முதல் திரைக்கதை, உரையாடல் எழுதியிருக்கிறேன். எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீடுதான். இந்தியாவிலே உள்ள எந்த முதலமைச்சரும் இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாகத் தெரியவில்லை. இந்த வீட்டைக் கூட எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு பொதுச் சொத்தாக்க, அறக்கட்டளைக்கு இப்போதே எழுதிக் கொடுத்து விட்டேன். நான் திருப்பிக்கேட்கிறேன். இந்த நீதிபதியின் சொத்துக் கணக்கு என்ன? இவர் புகழ்ந்த முதலமைச்சரின் சொத்துக் கணக்கு என்ன? சொத்துக் குவிப்பு வழக்கு என் மீதா நடக்கிறது? அந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைக் காப்பாற்றத் தானே யாருடைய தூண்டுதலாலோ இவர் தற்போது புதிதாகப் புறப்பட்டிருக்கிறார்.

உங்களை ஜாமீனில் விடுவித்தார் என்பதற்காக நீதிபதி ஒருவருக்கு தாங்கள் பல்வேறு உதவிகளைச் செய்ததாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சொல்லியிருக்கிறாரே?

புகார் கூறியிருக்கிற நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் தொடர்ந்து இருந்தவர். ஓய்வுக்குப் பின் 'பிரஸ் கவுன்சில் ஆஃப் இண்டியா'வின் தலைமைப் பொறுப்பிலே இருப்பவர். அவர் என் மீது மறைமுகமாகச் சாட்டியுள்ள குற்றச்சாட்டு, என்னை ஜாமீனில் நீதிபதி அசோக்குமார் விடுவித்தார் என்பதற்காக அவருக்கு நான் பல வகைகளிலும் பரிந்துரை செய்ததாகச் சொல்லியிருக்கிறார். அவரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நம்முடைய மூத்த கழக வழக்கறிஞர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சண்முகசுந்தரம் ’டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் விரிவாக பதில் எழுதியிருக்கிறார்.

குறிப்பாக நீதிபதி அசோக்குமார் என்னை ஒரு வழக்கில் ஜாமீனில் விடுவித்தார் என்பதே உண்மையல்ல. 2001ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஜெயலலிதா அரசில் நள்ளிரவில் காவல் துறையினர் அத்துமீறி வீடு புகுந்து என்னைத் துன்புறுத்திக் கைது செய்து, அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் என்னை ’ரிமாண்ட்’ செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு, நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கே போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். நீதிபதி, காவல் துறையினரிடம் 'எப்.ஐ.ஆர். நீதிமன்றத்திற்கு முறைப்படி அனுப்பப்பட்டு விட்டதா?’ என்று கேட்டபோது காவல் துறையினர் 'இல்லை’ என்றனர்.

வழக்கு பற்றிய விவரங்களும் அவர்களிடம் இல்லை. இந்த விவரங்கள் இல்லாமல் என்னை 'ரிமாண்ட்’ செய்யக் கூடாது என்று கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடினார்.   ஆனால் அந்த வாதத்தை மறுத்து விட்டு நீதிபதி அசோக்குமார் என்னை 'ரிமாண்ட்’ செய்தார் என்பதுதான் உண்மை. மேலும், நான் அப்போது ஜாமீனே கோரவில்லை. காரணம், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் சிறையிலேயே இருக்க விரும்பினேன். என்னைக் கைது செய்ததால் ஜெயலலிதா அரசுக்கெதிராகத் தமிழகமே கொந்தளித்ததால்,  ஒரு சில நாட்களில் அரசாங்கமே என்னைச் சிறையிலிருந்து விடுவித்து விட்டது. அதனால் நான் ஜாமீன் கேட்க வேண்டிய அவசியமே எழவில்லை. ஒரு நீதிபதியாக இருந்தவர் இந்த விவரங்களை எல்லாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் என் மீது மறைமுகமாக எவ்வளவு பெரிய குற்றச்சாட்டினைச் சுமத்தியிருக்கிறார் என்பதை அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க நினைக்கும் சில ஏடுகள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்

மேலும் கட்ஜூ, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களிடம் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஏதோ பேசியதாகவும் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்திருப்பது பற்றி தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அவரைப் பேட்டி கண்டவர், 'அந்தச் செய்தியை உங்களுக்குத் தெரிவித்தது யார்?’ என்று கேட்ட போது,  அந்தச் செய்தியைச் சொன்னது யாரென்று மறந்து விட்டதாக நீதிபதி கட்ஜூ கூறியிருக்கிறார். ஒரு குற்றச்சாட்டைக் கூறும்போது முழு விவரங்களையும் ஆதாரத்தோடு தெரிவிக்க வேண்டாமா?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது பெரிய குற்றமா என்று  கேட்கிறார்களே?

எத்தனையோ பேர் சாதாரண நிலையிலே உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பதுண்டு. ஆனால் அது பற்றி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்து விடுவார்கள். தாமதத்திற்கு உரிய காரணமும் கூறி விடுவார்கள். ஆனால் யாரும் 17 ஆண்டுக் காலம் வழக்கை நடத்தி விட்டு, அதற்குப் பிறகு தண்டனை கிடைக்கப்போகிறது என்றதும் சமரசத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

19-96-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் மூன்றாண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்பதற்காக வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று இருவரும் தாக்கல் செய்த மனுக்களை சென்னை விசாரணை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் 2006-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 30.1.2014 அன்று அளித்த தீர்ப்பில், 'வழக்கிலிருந்து ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை விடுவிக்க முடியாது. விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, ரத்து செய்யப்படுகிறது. இன்னும் நான்கு மாதங்களுக்குள் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று ஜனவரி மாதத்திலேயே உத்தரவிட்டது. 

இவ்வாறு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி மே மாதத்திற்குள்ளாக விசாரணை முடிந்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. இந்த வழக்கு குறித்து, வருமான வரி ஏய்ப்பு வழக்குகளில் ஆஜராகும் பிரபல வழக்கறிஞர்கள் கூறும்போது, 'வேண்டுமென்றே, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாமல், வரி ஏய்ப்பு செய்தால், சிறைத் தண்டனை உண்டு.  வரி ஏய்ப்புத் தொகை, ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், அபராதத்துடன், குறைந்தபட்சம் மூன்று மாதம், அதிகப்பட்சம் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். வரி ஏய்ப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அபராதத்துடன், குறைந்தபட்சம் ஆறுமாதம், அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்கிறார்கள். இந்த வழக்குகளில் ஜெயலலிதா 12 லட்சம் ரூபாயும், சசிகலா 9 லட்சம் ரூபாயும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 32 லட்சம் ரூபாயும் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த வழக்கு இன்னும் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்பட்டு எந்தத் திசையில் பயணிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30551

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

toon2_2025504f.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.