Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசைக் கவிழ்க்கும் நோக்கம் இல்லை! - இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசைக் கவிழ்க்கும் நோக்கம் இல்லை! - இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கூறுகிறது. photo.png 

[sunday 2014-07-27 09:00]
press-confrence-200-news.jpg

ஊடகவியல் கல்வியை கற்பதற்கான உரிமை தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்படுவதாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 'ரைட்ஸ் நௌவ்' என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற ஊடக கற்கைநெறி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை அல்ல என்று ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் அ. நிக்ஸன் தெரிவித்தார்.கொழும்பு இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

  

'டிஜிற்றல் ஜேர்னலிசம்' என்ற ஊடக பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஊடகவியலாளர்கள் குழு ஒன்றை ஓமந்தை சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனையிட்டதுடன் அவர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த இந்தச் செய்தியாளர் மாநாட்டில் நிக்ஸன் விளக்கமளித்தார்.

திட்டமிடப்பட்ட முறையில் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்திற்குள் கஞ்சா பெட்டி ஒன்றை வைத்து விட்டு அதனை ஊடகவியலாளர்கள் கடத்தியதாக படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஊடகவிலாளர்களை கைது செய்யும் நோக்கிலும் குறித்த பாடநெறியில் அவர்கள் பங்குகொள்வதை தடுக்கும் வகையிலும் படையினர் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் துணிச்சலாக செயற்பட்டு படையினருடன் வாக்குவாதப்பட்டனர். உண்மையை எடுத்துக் கூறினர். நள்ளிரவு என்றும் பாராமல் ஊடகவியலாளர்கள் வீதியில் அமர்ந்திருந்து நடத்திய போராட்டத்தினால் படையினர் அவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் தொலைபேசி மூலமாக ஊடகவியலாளர்கள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கபடுகின்றது. அதேவேளை அவர்கள் பயணம் செய்த சாரதி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு படையினரால் தொடர்ந்தும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கை. அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் நோக்கம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை. ஊடகத் தொழிலை உரிய தொழிற் தகுதியுடன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படும் பயிற்சி நெறிகளை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் சுனில் ஜயசேகர அரசாங்கம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் செயற்படுவதக குற்றம் சுமத்தினார். கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கடத்த வேண்டிய ஒரு தேவை தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை என்றும் கூறிய அவர் ஊடக சுதந்திரத்தில் படையினர் தலையிடுவதாகவும் குறிப்பிட்டார்.

 

press-confrence-270714-seithy%20(1).jpg
 
 
நன்றி - செய்தியிணையம்

 

btn-back.gif   lg-share-en.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.