Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி முறைகேடு வழக்கில் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி: வழக்கு பதிவு செய்தது அமலாக்க பிரிவு

Featured Replies

gallerye_021752703_1036023.jpg
 
 
புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக, பா.ஜ., தலைவர், சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான, ராகுலுக்கு, டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட், 'சம்மன்' அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை, அமலாக்கப் பிரிவும் விசாரிக்க துவங்கியுள்ளது. இது, சோனியாவுக்கும், ராகுலுக்கும், புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு துவக்கிய பத்திரிகை, நேஷனல் ஹெரால்டு. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பல ஆண்டுகளாக வெளிவந்த இந்த பத்திரிகைக்கு, டில்லியில் சொந்த கட்டடம் மற்றும் இடங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, 2,000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.நேஷனல் ஹெரால்டு பத்திரி கையை, 'அசோசியேடட் ஜர்னல்ஸ்' என்ற நிறுவனம் நடத்தி வந்தது. நேஷனல் ஹெரால்டு உட்பட மேலும் இரண்டு பத்திரிகைகளை, அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது.
 
ரூ.90 கோடி கடன்:
 
பல்வேறு காரணங்களால், சில ஆண்டுகளுக்கு முன், நேஷனல் ஹெரால்டு உட்பட மூன்று பத்திரிகைகளையும், அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுத்தி விட்டது. அந்த நிறுவனம் செயல்பட்டு கொண்டிருந்த போது, வங்கியில் கடன் பெற்றும், பிற வழிகளில் பணத்தை பெற்றும், பத்திரிகையை நடத்தி வந்தது. இதனால், அந்த நிறுவனத்திற்கு, அதாவது, அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு, 90 கோடி ரூபாய் அளவுக்கு கடன்
இருந்தது. அரசியல் கட்சிகளுக்கு வருவாய் எவ்வளவு இருந்தாலும், அந்தக் கட்சிகள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில், ஜனநாயகத்தின் ஒரு தூணாக கருதப்படும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுக்கு, வருமான வரி விதிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் அமைப்பு சட்டப்படி, அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.எனவே, அரசியல் கட்சிகள் வர்த்தக நோக்கத்தில் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. அதாவது, பிறருக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
 
75 சதவீத பங்கு:
 
இந்நிலையில், கடனில் தவித்த அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு, 'யங்இந்தியன்' என்ற, காங்கிரசின் ஒரு அமைப்பு, 90 கோடி ரூபாய் கடன் வழங்கியது. அதற்குப் பதிலாக, அந்த அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்து களை, யங் இந்தியன் எடுத்துக் கொள்ள முடிவானது.யங் இந்தியன் அமைப்பின் பங்குகளில், 75 சதவீத அளவு, சோனியாவுக்கும், அவர் மகன் ராகுலுக்கும் உள்ளது. அதன் பிற நிர்வாகிகளாக, இந்த இருவருக்கும் நெருக்கமான காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உள்ளனர்.'அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை, யங் இந்தியன் கைப்பற்றுவதன் மூலம், அதன், 2,000 கோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்க, சோனியாவும் அவர் தலைமையிலான, யங் இந்தியன் நிறுவனமும் முயற்சிக்கிறது' என, பா.ஜ., மூத்த தலைவர், சுப்ரமணியசாமி, டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில், கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தார்.அவர் சமர்ப்பித்த ஆதாரங்களை
 
ஆராய்ந்த நீதிபதி, கோமதி மனோச்சா, 'இந்த முறைகேடு தொடர்பாக, சோனியா மற்றும் பிறர் மீது வலுவான ஆதாரங்கள் உள்ளதால், ஆகஸ்ட் 7ல், சோனியா, ராகுல் மற்றும் பிறர் ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டார். இதற்காக, அவர்களுக்கு, சம்மனும் வழங்கப்பட்டது.
 
திடீர் திருப்பம்:
 
இதை எதிர்த்து, சோனியா தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மெட்ரோபாலிடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை கோரப்பட்டது. அந்த வழக்கு,இம்மாதம் 5ல், டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, மத்திய அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், நிதி மோசடி மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும், அமலாக்க இயக்குனரகம், சோனியா, ராகுல் மற்றும் பிறர் மீதான வழக்கை விசாரிக்க முன்வந்து உள்ளது. இதற்காக அமலாக்க இயக்குனரகம், முதற்கட்ட விசாரணையை துவக்கியுள்ளது.
 
இது, சோனியா மற்றும் ராகுலுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில், லோக்சபா தேர்தல் தோல்வியால் துவண்டுள்ள அவர்களுக்கு, சட்ட நெருக்கடி மற்றும் அமலாக்க இயக்குனரக விசாரணை போன்றவை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், 'இது, மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை; யங் இந்தியன் அமைப்பு, லாப நோக்கற்ற அமைப்பு; அதன் நிர்வாகிகள் சம்பளம் கூட பெற்றுக் கொள்வதில்லை' என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.