Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியப்பை ஏற்படுத்தியுள்ள மூவர் குழு

Featured Replies

அரசாங்கம் நியமித்திருந்த காணாமற் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச மட்டத்தினை மனித உரிமைகள் மற்றும் யுத்தகுற்றங்கள் பற்றிய சட்ட நிபுணர்கள் மூவரை வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பது சற்றும் எதிர்பாராத ஒன்றாகும். இத்தீர்மானம் அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட அங்கத்தினர்கள் சிலருக்குமே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மனித உரிமைகள் மீறல்களும் யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றமை குறித்த குற்றச்சாட்டை பெருமளவுக்கு உறுதியான முறையில் அரசாங்கம் மறுத்து வந்திருக்கின்றது. அரசாங்கத்தால் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலுமே அவ்வாறான குற்றங்கள் எதும் இடம்பெறவில்லை, என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடே தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இராணுவம் விசாரணை செய்து அதில் இராணுவத்தினர் குற்றங் காணப்பட்டதிலிருந்து விடுதலை செய்யப்பட்ட விசாரணைகள் சர்வதேச ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாயிருக்கவில்லை. இவ்வருடம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை செய்த தீர்மானத்தின் படி சுதந்திரமான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை அது நியமித்திருப்பதால் இலங்கை அரசாங்கம் அதன் கடந்த கால நிலைப்பாட்டை தவிர்க்க முடியாத வகையில் தூக்கியெறிந்து விடவேண்டியதாயிற்று.

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை இவ்வருடம் மார்ச் மாதம் செய்த தீர்மானத்தில் இரண்டு  முக்கிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனை கவனிப்பது பயனுள்ளதாகும். சர்வதேச மக்களையும் தலைவர்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் கடந்தகால நிலைமைகள் பற்றி விசாரணை செய்வது அதில் முதலாவதாகும். அவ்வாறான விசாரணையை இலங்கை அரசாங்கம் தானாக செய்யாது போனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் உயர் ஆணையாளரை அதுதொடர்பில் சுதந்திரமான விசாரணை ஒன்றை செய்யும்படி கோருவது இரண்டாவது சரத்தாகும். மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் இலங்கையின் யுத்தம் தொடர்பாக விசாரணை செய்ய மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்ததன் பின்னரேயே இலங்கை அரசாங்கமானது நிபுணர்களை நியமித்து அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணைகளையும் விஸ்தரித்துள்ளதோடு, அவர்களை மேற்பார்வை செய்ய சர்வதே தரத்திலான தகமையும் நம்பகத்தன்மையும் கொண்டவர்களையும் இப்போது நியமித்துள்ளது. இப்போது அரசாங்கம் சுதந்திரமாக ஆலோசனைவழங்குவதற்கு மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளதால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் தீர்மானத்தின் முதலாவது சரத்தை அது நிறைவேற்றியுள்ளதாக தென்படுகிறது. இதன் வாயிலாக ஐ.நா. தீர்மானத்தின் இரண்டாவது பகுதியினை (சரத்தினை) நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில்லாததாக்கிவிட்டதாக நம்பலாம்.

 

அரசாங்கம் நியமித்துள்ள ஆலோசனைக்குழு அதியுயர் அளவிலான திறமையையும் நம்பகத்தன்மையையும் கொண்டதாகும். அக்குழுவின் தவிசாளராக பணிபுரியப்போகும் அக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான சேர்.டெஸ்மன்ட் டி சில்வா ஒரு மகாராணியின் அங்கீகாரம் கொண்ட முன்னணி பிரித்தானிய வழக்குரைஞராவார். இவர் சியாரா வியோனில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம வழக்குத் தொடரும் வழக்கறிஞராக யுத்தகுற்றங்கள் தொடர்பான விசாரணையில் பணிபுரிந்ததுடன் அவர் ஒரு இலங்கை வம்சாவளியினருமாவார். இரண்டாவது அங்கத்தவரான சேர். ஜியோ பிரி றைஸ் என்பவரும் ஒரு பிரித்தானிய வழக்குரைஞராவார். இவர் ஹேக் நகரில் செயற்பட்ட முன்னாள் யூகோஸ்லாவிய நாட்டின் சுலோ போடன் மைலோஸ்விக் விசாரணைக்கு தலைமை தாங்கிய பெருமைக்குரியவர். மூன்றாவது அங்கத்தவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கிரேன் என்பவராவார். இவர் சியாரா லியோன் நாடு தொடர்பிலான சிறப்பு நீதிமன்றத்தின் பிரதம வழக்கு தொடருனராகப் பணியாற்றி லைபீரியா ஜானாதிபதி சாள்ஸ் டெய்லரை குற்றவாளியாக இனங்காட்டியவர். காணமற்போனோர் பற்றிய ஆணைக்குழுவினது கடமைகளையும் ஆணைகளையும் மீள திருத்தியமைத்தபோது, ஆலோசனை குழுவுக்கான அங்கத்தவர்களை அரசாங்கம் விரும்பினால் மேலும் அதிகரிப்பதற்கான உரிமை இருப்பதாக கூறியிருப்பதால், ஒருவேளை தகுதியற்ற எவரையும் அதில் நியமித்தால் என்னவாகும் என்ற ஒரு கருத்து முரண்பாடும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த கருத்து அரசின் மீதான நம்பகத்தன்மையிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

 

ஐயுறவான மதிப்பீடுகள்  விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அது விடுக்கும் கோரிக்கைகளின் பேரில் ஆலோசனை வழங்க மூன்று பேரடங்கிய சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்கம் காணாமல் போனோர் பற்றி விசாரிக்க நியமித்த ஆணைக்குழுவின் ஆணைகளை விஸ்தரித்தும் உள்ளன. அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட புதிய ஆணைகளில், யுத்தத்தின்போது உயிரிழந்த பொதுமகனது மரணத்திற்குப் பொறுப்பான காரணங்கள், சூழ்நிலைகள் என்பனபற்றி விசாரித்து அறியப்படல் வேண்டும். என்பதும், சர்வதேச மனிதாபிமான பாதுகாப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மீறப்பட்டதன் காரணமாக மரணம் ஏற்பட நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனிப்பட்டவர்களோ அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ பொறுப்பாயிருந்திருக்குமானால் அவைபற்றியும் விசாரிக்க வேண்டும் என்பதும் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணையாகும். இவற்றோடு இராணுவத்தினால் தவிர்க்க முடியாததாகவும் (இன்றியமையாததாகவும்) மற்றும் ஆயுத முரண்பாடு பற்றிய சட்டங்களுக்கு ஏற்ப விகிதாசாரமாகவும் அமையவேண்டியவை பற்றி சரியாக இனங்காணப்படல் வேண்டும் என்ற தத்துவங்களுக்கு உட்படவோ அல்லது புறக்கணிக்கவோ இலங்கை ஆயுதப் படையினர் காரணமாயிருந்தனரா? என்பது பற்றியும் விசாரித்தறிந்து கொள்வதுடன், இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில், அரசு துறை சாராத ஒரு பாத்திரமாயிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளையும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குட்பட்டவர்களாக உள்ளடக்க வேண்டுமா என்பது பற்றியும் விசாரித்தறிந்து கொள்ள ஆணை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக விஸ்தரிக்கப்பட்ட இவ்வாறான ஆணைகள் வழங்கியிருக்கும் போது, முன்னர் காணாமற் போனோர் பற்றி விசாரிப்பதற்கான சில வரையறைகளுக்குள் செயற்பட நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் இவ்விசாரணைகள் முழுமையாக நிறைவேற்றிவிட முடியுமா என்பது இப்போது அவ்வாணைக்குழு எதிர்நோக்கும் பெரும் வினாவாகும், இதுரை ஆணைக்குழு அமைதியான தீர்மானங்களுடன் தமது விசாரணைகளை செய்து வந்திருக்கிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இதுவரை பல விசாரணைகளைச் செய்து 19,000 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இப்போது ஆலோசனை வழங்க அரசாங்கம் நியமித்துள்ள "ஆலோசனைக்குழு' பற்றி ஐயங்களைக் கொண்டுள்ள தரப்பினரும் இருக்கின்றனர். அவர்கள் கடந்த காலத்தில் அரசாங்கம் நியமித்த இன்னொரு ஆணைக்குழுவுக்கு நேர்ந்த கதி பாரிய அனுபவத்தை நிச்சயமாக இப்போது நினைவுபடுத்திக் கொள்வார்.  அதாவது அரசாங்கம் "கடுமையான மனித உரிமைகள் மீறல்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு'  ஆலோசனைவழங்க சர்வதேச சுதந்திரமானதும், உயர்மான்பு மிக்கதான  நபர்களைக் கொண்ட குழு ஒன்றினை 2007ஆம் ஆண்டு நியமித்தது. பதினொரு அங்கத்தவர்களைக் கொண்ட அந்தக் குழுவை இவ் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்களை அவதானிக்க ஜனாதிபதி அழைத்திருந்தார். விசாரணைகளின் போது ஒளிவுமறைவின்மை மற்றும் சர்வதேச பெறுமானங்களும் தரங்களும் பேணப்பட்டனவா என்பதனை அவதானிப்பதே அக்குழுவின் பணியாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

 

ஆனால் அந்த ஆலோசனைக்குழுவோ ஆணைக்குழு தனது விசாரணைகளைச் செய்வதில் போதிய முன்னேற்றங்களைக் கொண்டதாக இல்லை என்பதால் ஒரு முடிவுக்குக்  கொண்டு வரப்பட்டுவிட்டது. அக்குழுவின் அபிப்பிராயங்கள் அப்படியொன்றும் எமக்கு சாதகமாயிருக்க வில்லை. பல முரண்பாடான கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அப்போது ஏற்பட்ட தகர்வு அல்லது வீழ்ச்சியைப் பற்றி இப்போது அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்கும் என நம்பலாம். ஏனெனின் இப்போது இந்த விசாரணைக்கு சமாந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான ஒரு விசாரணை யுத்தகால குற்றங்கள் தொடர்பில் எங்கோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதாலாகும். அரசாங்கம் எச்சரிக்கையுடன் கவனமாக கவனிக்கவேண்டிய இன்னொரு காரியமும் உண்டு. நாட்டில் நிலவும் வேறுபட்ட பிரச்சினைகளை தனித்தனியாக கையாள்வதன் மூலம் கடந்த காலத்தில் நடந்தவை பற்றியும் தற்போது நிலவும் ஆட்சி நிலவரங்கள் பற்றியும் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட வகையில் கண்டறிய முடியுமா என்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது. யுத்தம் முடிந்ததன் பின்னர் குற்றம் செய்தவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாக்கும் கலாசாரம்  தொடர்வதாக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எனப்படும் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த வன்முறைகளின் போது பாதுகாக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் நிரூபித்து வருகிறது. அத்துடன் சிவில் சமூகக்குழுக்களது சுதந்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதன் மூலமும் அது சர்வதேச நியமங்களை மீறி வருகின்றது. இவையாவற்றையும் விட அதிகார பரவலாக்கம் தொடர்பில் ஏற்கனவே உறுதியளித்தவை (13+) போன்றவற்றிலும் அரசாங்கம் தவறியுள்ளது. சர்வதேச நாடுகளிடமும் சமூகங்களிடமும் நாட்டில் நல்லிணக்கச் செய்முறை வழியில் தான் சென்று கொண்டிருப்பதாக கூறிவரும் அரசாங்கம் நாட்டில் முரண்பாடுகளிலும், பகைமையைவளர்த்துக் கொள்வதிலும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான களநிலவரத்தை கண்காணித்து வரும் இலங்கை மீது கரிசனம் கொண்ட தரப்பினர்கள், இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செய்முறையில் காட்டும் நேர்மையான நடத்தை குறித்து அதன் தரக் குறைவானதாகவே மதிப்பிடுவார்கள். தென்னாபிரிக்கா தென்னாபிரிக்காவின் சிறப்புத்தூதுவர் சிறில் ரமபோச இலங்கைக்கு வந்ததைத் தொடர்ந்து இலங்கையில் நல்லிணக்கத்திற்கான செய்முறையில் ஏதேனும் புதிய வழி ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருந்தபோதிலும் தேசிய நல்லிணக்கச் செய்முறை தொடர்பில் ஆவன செய்வதில் அரசாங்கத்தினர் இதுவரை பின்பற்றிய அணுகு முறையிலிருந்து எதுவித மாற்றமும் தென்படுவதாக இல்லை.

 

தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வடமாகாண முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடியதானவரும், அவருடன் முரண்பாடு காட்டாதவருமான ஒருவரை ஆளுநராக நியமிக்கும் படி அரசாங்கத்திடம் கேட்டுவரும் நிலையிலும், அரசாங்கமானது ரமாபோõச இலங்கையை விட்டு வெளியேறிய உடனேயே முன்னிருந்த ஆளுநரையே மீண்டும் அப் பதவிக்கு நியமித்துள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கையின் விவகாரங்களில் கரிசனம் கொண்ட பலரும், அவர்களிடம் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியினை மீறியவகையில் வடமாகாண ஆளுநரையே மீண்டும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கின்றனர். வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்தப்போவதாக கூறிய சந்தர்ப்பத்தில் தான் ஜனாதிபதி புதிய ஆளுநரை நியமிக்கப்போவதாக கூறிய வாக்குறுதிகளையும் மீறியிருக்கிறார். வாக்குறுதியின் ஒரு பகுதியான தேர்தல் நடத்துவதை நிறைவேற்றினாலும் மறுபகுதியை உதாசீனம் செய்திருக்கின்றனர். ரமபோச இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் நல்லிணக்கச் செயல்முறைகளை பின்பற்ற போவதான நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகத் தெரியத்தக்கதான வகையில் எதுவித நடவடிக்கைகளுமோ அல்லது அரசாங்க தரப்பில் நல்லெண்ணமோ வெளிப்படுத்தப்படவில்லை. இலங்கையின் பிரச்சினைகளில்  சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு பற்றியும் தென்னாபிரிக்காவின் பங்கு உறுதிசெய்யும் என்றும் தனியே இலங்கை அரசாங்கத்தை மட்டும் இலக்காக கொண்டிருக்காது என்றுமே எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறாக உருவாக்கப்பட்ட தென்னாபிரிக்காவினை பங்காளியாகக்கொண்ட உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான வழிமுறையினூடாகவே தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதும் சர்வதேச விசாரணைகளை அனுசரிப்பதுமான உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான செய்முறையினை தொடர்ந்து எடுத்துச் செல்ல ஆதரவினை வழங்குவதாயிருக்கும் அரசாங்கத்திற்கும் ரமபோசவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது விவாதித்தவற்றில், அரசாங்கம் அவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செய்முறையில் இணையத் தூண்டும்படி கேட்டுக் கொண்டது. மாத்திரமே வெளிவந்துள்ளது. "ரமாபோசவிடம். அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது இலங்கையின் தேசியப் பிரச்சினை சார்ந்த முக்கிய விவாதத்திற்கு தீர்வுகாண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அவர்கள் பங்கு கொள்வதன் முக்கியத்துவம் பற்றி விளக்கி அதனை ஏற்றுக் கொள்ளச் செய்யும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டது' என்ற செய்தியானது வெளிவிவகார அமைச்சின் வலைப்பின்னல் அமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசியப் பிரச்சினைபற்றிய வினாவிற்கு ஒரு அரசியல் தீர்வினைக் கொண்டு வரச் செய்வதற்காக "பாராளுமன்றத் தெரிவுக்குழு என்னும் பொறிமுறையே' அரசாங்கத்தின் தெரிவாக இருந்துவருகிறது.  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் விவாதத்தின் மூலம் அடையும் அரசியல் தீர்வே ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் பிடிவாதமாகவே இருந்து வருகிறது.

 

இருந்த போதிலும் மறுபுறத்திலோ எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுகுழுவில் இணையாது பகிஷ்கரித்து வருவதுடன், பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் தீர்வுகண்டறியப்படும் என்ற கருத்திலும் உடன்பாடில்லாது இருக்கின்றன. அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நடைபெற்ற அனைத்து கட்சிகளதும் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாநாடு 128 முறை கூடி விவாதித்த முடிவுகளுக்கு நடந்த கதி துர்பாக்கியமானது என்று மிகவும் விழிப்பாக இருக்கின்றனர். அம்மகாநாட்டின் இறுதி அறிக்கை வெளிப்படுத்தப்படவும் இல்லை. அல்லது அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவும் இல்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கடமைகள், ஆணைகள் என்பவற்றில் போதிய திருத்தங்களைச் செய்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரையும் எதிர்க் கட்சியினரையும் அதில் பங்கேற்கச் செய்வதற்கு தென்னாபிரிக்கா ஏதேனும் ஏற்பாடுகளைச் செய்யுமேயானால், அந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட வழிஏற்படலாம். அரசாங்கம் நியமித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிபுணர்கள்குழு இப்போது நியமிக்கப்பட்டிருப்பது போன்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவும் இன்னுமோர் நிபுணர்கள் குழு நியமிக்கப்படுதலும் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் அது 2007 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவுக்கு நேர்ந்த கதியை ஒத்ததாக இருந்து விடக்கூடாது. -

 

http://thinakkural.lk/article.php?article/wqx1kwerzx75650e274e1d1a15521bshwf8948f16f0227e4ec1965a8fchoh#sthash.iF3Fu1dU.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.