Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அகதி முகாம்களில் உள்ள 62 இலங்கை மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அகதி முகாம்களில் உள்ள 62 இலங்கை மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு அனுமதி! 

[sunday 2014-08-03 09:00]
anna-university-200-news.jpg

தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதி மாணவர்களில் 62 பேர் 2014-15-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 40 பேர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளாகக் குடியேறுபவர்களின் குழந்தைகள் தமிழகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 110 அகதி முகாம்களைச் சேர்ந்த 2,200 மாணவ, மாணவிகள் இப்போது பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

  

2014 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வை 687 இலங்கை அகதி மாணவர்கள் எழுதினர். இவர்களில் 604 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில் பலர் கலை அறிவியல் கல்லூரியிலும், பாலிடெக்னிக்கிலும் சேர்ந்தனர். பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக 60-க்கும் மேற்பட்டோர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். கலந்தாய்வு முடிய இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில், சனிக்கிழமை வரை 40 பேர் பொறியியல் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதத்தையும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அகதி மாணவர்கள் 22 பேருக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் சில பொறியியல் கல்வியை படிக்க இலவச இடங்களை அளித்துள்ளன. இதன் மூலம், 2014-15-ஆம் கல்வியாண்டில் இதுவரை 62 இலங்கை அகதி மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். கலந்தாய்வு நிறைவுபெற இரண்டு நாள்கள் உள்ளதால் மேலும் சில மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளது என இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பின் நிர்வாகி பத்மநாபன் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=114273&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.