Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாக்குதலுக்கு உள்ளான நிந்தவூர் கோவிலை திருத்த ஹஸனலி எம்.பி. நிதி ஒதுக்கீடு

Featured Replies

 temple%20321.jpg
 
அண்மையில் இனந்தெரியாதவர்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிந்தவூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி நேரில் சென்று பார்வையிட்டார். ஹசன் அலியுடன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத் தலைவர் கே.கமலநாதன் தலைமையிலான குழுவினர் அன்போடு வரவேற்று, கோவிலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஒவ்வொன்றாகக் காண்பித்தனர். ‘இவ்வாலயம் மீதான தாக்குதலுக்கும், நிந்தவூர் பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர்கள் இவ்வாலயத்திற்கும் இப்பிரதேச முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான இறுக்கமான உறவு பற்றியும் விலாவாரியாக எடுத்துக் கூறினர். அன்றிலிருந்து இன்று வரை ஆலயத்தைச் சுற்றியுள்ள முஸ்லிம் விவசாயப் பெருமக்கள் தமது விளைச்சலில் சில நெல் மூட்டைகளை எமது ஆலய வளர்ச்சிக்காகத் தந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். "இவ்வாறான தமிழ்-முஸ்லிம் உறவைப் பொறுத்துக் கொள்ள முடியாத தீய சக்திகளே எம்மைப் பிரிப்பதற்காக ஆலயத்தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாமென நம்புகின்றோம்" எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன்அலி கருத்துத் தெரிவிக்கையில் "கிழக்கில் தற்போது தமிழ் - முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடனும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றமையைக் குழப்பி, அதில் குளிர்காய நினைக்கின்ற சில தீயசக்திகளின் கைவரிசையாகவே இவ்வாலயத் தாக்குதலைப் பார்க்கின்றேன். "பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட இக்கோயில் இதற்கு முன்னர் இவ்வாறு தாக்கப்பட்டது கிடையாது. இனியும் இத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதன் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆலய நிர்வாகிகளை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியவை வருமாறு:-
 
நான் பிறந்த காலந்தொட்டு இக்கோயிலை எனக்குத் தெரியும். இக்கோயிலுக்கும், இப்பிரதேச மக்களுக்குமான தொடர்புகள் பற்றி நான் நன்கறிவேன். எனது இளமைக் காலத்தில் பாடசாலை நண்பர்களுடன் இக்கோயில் பிரதேசத்திற்கு வந்து சமைத்துண்டு, ஆற்றில் குளித்து மகிழ்ந்துள்ளோம். இவ்வாலய விழாக்களைக் காண்பதற்காக நிந்தவூரிலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் பஸ்ஸில் பிரயாணித்து, மாட்டுப்பளை நெல் வயற் காணிகள் ஊடே சுமார் 500 மீற்றர், அல்லது 700 மீற்றர் தூரம் நடந்து வந்து இக்கோயில் திருவிழா விசேடங்களைக் கண்டிருக்கிறோம். நாங்கள் ஒரு போதும் கோயில்களுக்கோ, பண்சாலைகளுக்கோ, தேவாலயங்களுக்கோ அநியாயம் செய்தவர்களில்லை. ஒரு காலத்தில் பல பிரதேசங்களில் தமிழ் - முஸ்லிம் கலகங்கள் ஏற்பட்டு, தமிழ் மக்கள் தாக்கப்பட்ட போது நிந்தவூர்ப் பிரதேசத்தில் மட்டும் அவ்வாறான நிகழ்வுகள் நடந்து விடாமல், தமிழ் மக்களைப் பாதுகாத்தவர்கள் இவர்கள் என்றால் மிகையாகாது. நிந்தவூர்ப் பிரதேச மக்கள் எப்போதும் தமிழ் மக்களோடு சிநேகபூர்வமான உறவுகளைப் பேணியவர்கள் என்பது இலங்கையிலுள்ள எல்லாத் தரப்பினருக்கும் தெரிந்த விடயமாகும். இவ்வாறு இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன், அவரவர் கலாச்சாரங்களை மதித்து நடக்கின்ற வேளையில், இவ்வாறானதொரு கோயில் தாக்குதல் சம்பவம் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென்று சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கோருகின்றேன்.
 
இவ்வாலயம் நிந்தவூர்ப் பிரதேச எல்லைக்குள் அமைந்திருந்தாலும், மக்கள் செறிந்து வாழும் பகுதியிலிருந்து சுமார் மூன்றரை அல்லது நான்கு கிலோ மீற்றருக்கப்பாலுள்ள மாட்டுப்பளை எனும் நெற்காணியிற்கு மத்தியில் இயற்கை எழிலுடன் அமைந்திருக்கின்ற காரணத்தினாலும், அறுவடை தவிர்ந்த ஏனைய காலங்களில் மனித நடமாட்டமில்லாத அமைதியான சூழலாகக் காணப்படுவதனாலும் திட்டமிட்ட விசமிகளின் கைவரிசைக்குப் பொருத்தமாக அமைகிறது. எனவே இதன் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு ஆலய நிர்வாகிகளை விநயமாகக் கேட்டுக் கொள்கிறேன்". எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆலயத்திருத்த வேலைகளுக்காக தனது நிதியிலிருந்து ரூபா 50 ஆயிரத்தை முதற்கட்ட நிதியாக ஒதுக்கினர்.
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.