Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசை எதிர்ப்பவர்கள் மீது பெரும் குழுக்களைக் கொண்டு தாக்கும் புதிய பாணி

Featured Replies

 
அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாரைக் கொண்டு  தடுக்காது தனக்கு ஆதரவான பாஸிஸ குழுவைக் கொண்டு நிறுத்தும் புதிய பாணியொன்றை அரசாங்கம் கையாள்வதாக தெரிவித்திருக்கும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண, மருதானையில் சிவில் அமைப்புகள் நடத்திய கூட்டத்திலும் இது தான் நடந்ததாகவும் குறிப்பிட்டார். 
 
 
 இது தொடர்பாக அவர் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது; 
அளுத்கம கலவரத்தையடுத்து அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தைரியத்தையளிக்கு முகமாக ஐக்கிய சோஷலிச கட்சி அண்மையில் கொழும்பிலிருந்து அளுத்கமவுக்கு சமாதான வாகனப் பேரணியொன்றை நடத்தியது.
 
இப்பேரணியை தாக்கும் நோக்குடன் குழுவொன்று தயாராகவுள்ளதாகக் கூறி பொலிஸார் இடைநடுவில் தடுத்து நிறுத்தினர். இவ்வாறான  நிலையில் கடந்த திங்கட்கிழமை சிவில் அமைப்பினர் மருதானையில் நடத்திய கூட்டமும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 
 
 
இவற்றின் மூலம்  தனக்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம்  புதிய வழியொன்றை பிரயோகிக்கின்றமை தெளிவாகியுள்ளது. அதாவது அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடு இடம்பெற்றால்  பொலிஸார் அங்கு செல்வதுமில்லை.
 
நீதிமன்றத்தால் தடையுத்தரவு பெறாது ஒரு குழுவினரைக் கொண்டு குழப்புகின்றது. 
குண்டர் குழு குழப்பத்தை விளைவிக்க, சமாதானத்தை நிலை நாட்டுவது போல் பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்து அங்கே சமாதானம் செய்வது போல் பாசாங்கு செய்து தடுக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகின்றது. 
 
 
 எனினும் அரசாங்கத்தின் புதிய பாணியிலான மேற்படி செயற்பாடு வடக்கில் எடுபடாதுள்ளது. இதற்குக் காரணம் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவானவர்களை பெற முடியாதுள்ளமையேயாகும். 
 
 
நாட்டில் கருத்துகளை வெளியிடுவது , ஒன்று கூடும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சமேயாகும். மக்கள் தமக்கு விரோதமாக உள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட அரசாங்கம் சிறிய செயற்பாடுகளைக் கூட அனுமதிக்காதுள்ளது.
 
இது மிகவும் மோசமான பாஸிஸ சூழ்நிலையாகும். இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென கோருகின்றேன்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அரசை எதிர்ப்பவர்கள் மீது பெரும் குழுக்களைக் கொண்டு தாக்கும் புதிய பாணி

 

முன்பு

பின்னால் இருந்தார்கள்

தற்பொழுது

முன்னால் வருகிறார்கள்

தமிழர் பலம் அழிந்ததன் விளைவு இது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.