Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறப்பெடுக்கும் புதிய உலக ஒழுங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உலக ஒழுங்கு பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றது. சோவியத் சிதைந்து, வல்லாதிக்கப் பனிப்போர் முடிவுற்ற இந்தச் சூழ்நிலைப் பின்னணியில், உலக ஒழுங்கு இனி எப்படி அமையப் போகின்றது என்பது இன்றைய கேள்வியாக உள்ளது.

இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தபோது ஒரு புதிய உலக ஒழுங்கு உருவானது. உலகத்து மனிதர்கள் நாடுகள் தமக்குள் பேரழிவு தரும் கொடூரப் போரை இரண்டாவது தடவையாகப் புரிந்து, நினைத்துப் பார்க்க முடியாத நாசங்களைப் பூமிக்கோளத்துக்கு ஏற்படுத்தி, அடங்கியபோது அந்தச் சிதைவுகளிலிருந்து சிதிலங்களிலிருந்து மற்றொரு உலக ஒழுங்கு உருவெடுத்தது. பூமியையே கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அதீத அவாவுடனும், ஆசையுடனும், ஆவலுடனும் போர் வெறியில் குதித்த நாஸி அரக்கன் அந்த இரண்டாம் உலகப்போருடன் களத்தில் மடிந்து போக, அந்தப் புதைகுழியிலிருந்து இரு பெரும் வல்லாதிக்கப் பூதங்கள் பிறப்பெடுத்தன.

புதிய உலக ஒழுங்கு அப்போது இந்த இரண்டு வல்லாதிக்கத்தின் கைகளிலும் வீழ்ந்தது. கிழக்கு ஐரோப்பாவை சோவியத் கம்யூனிஸம் கபளீகரம் செய்ய, மேற்குலகை அமெரிக்க முதலாளித்துவம் பற்றிக் கொண்டது.

இந்த இரண்டு வல்லாதிக்கங்களுமே மனிதத்துவத்தை சிறையிட்டு, அடிமை கொண்டு, விலங்கிட்டு, கேவலப்படுத்தின என்றே வரலாற்றாசிரியர்கள் குறித்துச் சொல்லுகின்றார்கள்.

ஒரு புறம் முதலாளித்துவம் மனிதத்திற்கு விரோதமாக மானிட இரத்தத்தைக் குடித்து, மனித படைப்பாக்கச் சக்தியைப் பண்டமாக்கி, பணமாக்கி, சுரண்டி, வாழ்ந்து வளர்கிறது. மனிதத்தின் சாரத்தை பொருள் உலகிற்குள் அது புதைத்து விடுகிறது என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.

மறுபுறம் கம்யூனிஸம் என்ற சிந்தனைக் கருத்து சோவியத் வல்லாதிக்கத்தின் கீழ் இராட்சத வடிவம் எடுத்தது. மனிதத்துவத்தை நேசிக்கும் சமத்துவ தத்துவம், "கம்யூனிஸப்' பெயரில் சர்வாதிகாரமாக அடக்குமுறையாக அடிமைப்படுத்தலாக பிறழ்ச்சி கண்டது.

இந்த முதலாளித்துவ கம்யூனிஸ மோதலின் முடிவு, 90களில் சோசலிஸத்தின் சிதைவுடன் பெரும்பாலும் முற்றுப் பெறுகின்றது என நாம் கருதலாம். அந்த வரலாற்றுத் திருப்பத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. அதற்கு அடிப்படையாக அமைந்த அரசியல், சித்தாந்த, கருத்தியல் மோதல்களும் செயலிழந்து முற்றுப் பெற்றன.

இனி, முதலாளியமும் அதன் அடிப்படை அடையாளங்களான திறந்த சந்தைப் பொருளாதாரப் போக்கும், தாராண்மை ஜனநாயகமும் உலகெங்கும் விஸ்தரித்து, வியாபிக்க, அதுவே புதிய உலக ஒழுங்காக நிலைபெறும் எனப் பலரும் கருதினர். மனித சமத்துவத் திற்கு சாவுமணி அடித்து, சமூகங்களிடையேயும் நாடுகளிடையேயும் முரண்பாட்டையும், வர்க்க பேதத்தையும், பொருளாதார ஏற்றத் தாழ்வையும், சமூகச் சீர்கேடுகளையும் உருவாக்கி உறுதிப்படுத்தும் முதலாளியத்துடன் உலக ஒழுங்கு இணங்கிப் போய்விடும் என்ற கருத்தும் தப்பு என்பது இப்போது நிரூபணமாகி வருகின்றது.

இவற்றிலிருந்து வேறுபட்டு, ஒரு புதிய தடத்தை நோக்கி உலக ஒழுங்கு மாற முற்படுவதை சர்வதேச நிகழ்வுகள் எமக்கு எடுத்தியம்புகின்றன.

அமெரிக்காவின் தலைநகரான நியூயோர்க்கில் வானைத் தொட்டு நின்ற உலகப் பொருளாதார மையமான இரட்டைக் கோபுரங்கள் 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி தாக்கப்பட்டு, தகர்ந்து வீழ்ந்ததோடு புதிய உலக ஒழுங்குக்கான திருப்புமுனை உருவானது என்றே கொள்ள வேண்டும்.

உலக முதலாளியத்தின் உச்ச வளர்ச்சியின் சின்னமான அமெரிக்காவில் அதன் பொருளாதார மையத்தின் மீது அந்த ஆட்சி முறையின் அடிப்படை அத்திவாரத்தின் மீது விழுந்த அடி, புதிய உலக வரலாற்றுப் படலம் ஒன்று கட்டவிழ வழி செய்திருக்கின்றது.

அமெரிக்கா, பிரிட்டன் தலைமையில் மேற்குலகம் ஒன்று திரண்டு உலகப் பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் ஆரம்பித்திருக்கும் தொடர் யுத்த நடவடிக்கை புதிய உலக ஒழுங்குக்கு வழிகாட்டுகின்றது.

இரண்டாம் உலகப் போரின் சிதைவுகளிலிருந்து ஒரு புதிய உலக ஒழுங்கு பிறப்பெடுத்தது போல, அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர் என்ற அபத்த நாடகத்தின் விளைவாக இப்போது புதிய உலக ஒழுங்கு உருவாக்கம் பெறுகிறது.

இந்த ஒழுங்கின் மறுபுறத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று இஸ்லாமிய அடிப்படை வாதம் பலவந்தமாக நிறுத்தப்பட்டது. அடுத்த நிரலில் மற்றொரு இஸ்லாமிய நாடான ஈரான் குறிவைக்கப்படுகின்றது.

கம்யூனிஸம், சோசலிஸம், முதலாளியம் என்று பல துருவ சித்தாந்தங்களிலும், கோட்பாடுகளிலும், அரச கட்டமைப்பு வடிவங்களிலும் பின்னப்பட்ட ஓர் உலக ஒழுங்கு என்ற வகையில் இதுவரை சிக்குப்பட்டு, ஒரு வரலாற்றுத் திருப்பத்துடன் அதிலிருந்து வெளிப்பட முயலும் சர்வதேசம், இனி சமூகங்களின் தனித்தன்மை பற்றிய விடயங்களை ஒட்டி முரண்பட்டு அதனடிப்படையில் வனையப்படப் போகும் புதிய உலக ஒழுங்குக்குள் மாட்டப் போகின் றது.

மொழி, மதம், பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, வழக்காறு, வழக்கங்கள், நியமங்கள், நிறுவனங்கள், நம்பிக்கைகள் என்ற ரீதியில் அமையும் பண்பாட்டுக் கோலங்களில் தம்மைத் தனித்தனியாக வேறுபடுத்தி அடையாளம் காணும் சமூகங்கள் அவற்றின் அடிப்படையில் மோதும் புதிய உலக ஒழுங்கு உருவாகின்றது.

மேற்கத்தைய கிறிஸ்தவ நாகரிகம், மறுபுறத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய நாகரிகத்தோடு மோதுவதுதான் இன்றைய புதிய உலக ஒழுங்குக்கான அடிப்படையாகத் தோன்றுகின்றது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.