Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிற்கதியான அரசியற் கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும்- நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை

Featured Replies

நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பாகம் –3 -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்-

Jail%203_CI.jpg

நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பற்றி வெளிக்கொண்டு வரும் கட்டாய பணியின் தொடர்ச்சியாக இந்த வாரம் மற்றுமொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த 16 வயதேயான இளைஞர் ஒருவர் அங்குள்ள தேநீரகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடைய அம்மா, அப்பா இவர் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து போனார்கள். இவர் மிகவும் வறுமையான நிலையில் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். இவரது வறுமையினை கண்ணுற்ற இவரது உறவினரின் நண்பர் ஒருவர் இவரை உலோக ஓட்டு வேலை பழகுவதற்காக அவரிற்கு சொந்தமான  கொழும்பிலுள்ள உலோக ஓட்டு வேலை நிலையம் ஒன்றிற்கு அழைத்து சென்றார். இந்த குறிப்பிட்ட இளைஞன் வேலை செய்யும் இடத்திலேயே தங்கியிருந்து வேலை பழகி வந்துள்ளார்.

2008 இல் நடைபெற்ற குண்டு வெடிப்புச்சம்பவம் ஒன்று தொடர்பான விசாரணையில், குறித்த இளைஞன் கொழும்பில் தொழில் பழகுணராக வேலை செய்யும் உலோக ஓட்டு தொழில் நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (TID) சோதனைக்காக உலோக ஓட்டு தொழில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு குறித்த இளைஞனுடன் மலையகம், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த வேறு 4 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (TID) 6 ஆம் மாடியில் வைத்து விசாரித்து விட்டு பூசா தடுப்பு நிலையத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைத்தனர். இவருடன் கைது செய்யப்பட்ட அனைவரும் அவர்களது பெற்றோரின் முயற்சியால் பூசாவில் தடுத்து வைக்கப்பட்ட காலத்திலேயே விடுவிக்கப்பட்டனர். இந்த குறித்த இளைஞனை பார்க்க யாருமே வரவில்லை. இந்த குறித்த இளைஞனை விசாரித்த மாத்திரத்திலேயே இவர் இந்த  சம்பவத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத அப்பாவி என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள். என்ன செய்வதென்றே புரியாத நிலையிலிருந்த இந்த குறித்த இளைஞன் 18 மாதம் நிறைவடைந்த பின்னர் விடுவிக்கப்படுவார் என்று கூறப்பட்டார்.  ஆனால் 18 மாதம் பூசாவில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் கொழும்பு தடுப்பு காவல் சிறைச்சாலைக்கு (CRP) மாற்றப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திலுள்ள நீதவான் நீதிமன்றில் ஒவ்வொரு 14 நாட்களிற்கு ஒரு தடவை ஆயர்ப்படுத்தப்பட்டு இவரிற்கு தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. போதிய கல்வியறிவும் இல்லாது, உதவ உற்றார் இல்லாது, எந்தவொரு பொருளாதார உதவியும் இல்லாத நிலையிலிருந்த இந்த குறித்த இளைஞர் செய்வதறியாது எந்த முன்னேற்றமும் இல்லாது இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவர் திடீரென மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு இவருடன் இருந்தவர்கள் இவரின் பரிதாப நிலையை கண்டு, 2011 ஆம் ஆண்டில் மனித உரிமை இல்லத்தின் ஊடாக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்வதற்கு உதவினார்கள்.

உச்சநீதிமன்றமும் மூன்று மாதகாலமாக காலத்தை இழுத்தடிக்கையில், எவ்வாறாயினும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யும் படி உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால், இந்த குறித்த இளைஞன் மீது என்ன வழக்குத்தாக்கல் செய்வது என்ற சிக்கலில் இருந்த TID யினர் தாம் அவரிற்கு புனர்வாழ்வு அளிக்க சம்மதிப்பதாக கூற, மனித உரிமை இல்லத்தின் ஊடாக ஆயரான சட்டத்தரணி குறித்த  இளைஞனிடம் எந்த சம்மதமும் கேட்காமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றார்.

இந்த சட்டத்தரணியின் வற்புறுத்தலினால்  குறித்த இளைஞன் தனது விருப்பத்திற்கு மாறாக, என்ன செய்வது என்று அறியாது புனர்வாழ்விற்கு செல்ல சம்மதித்தான்.

2011 இல் புனர்வாழ்விற்கு சென்ற குறித்த இளைஞனிற்கு, சரணடைந்தவர்களிற்கு மட்டுமே புனர்வாழ்வு அளிக்கப்படுவதாகவும் கைது செய்யப்பட்டவர்களிற்கு அல்ல என்று கூறி புனர்வாழ்வு அளிக்க புனர்வாழ்வு மையம் மறுத்து மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு அனுப்பியது.

சரணடைந்ததாக கடிதம் கொடுக்கும் பட்சத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும் என்று மேலும் கூறப்பட்டது.   எந்த அடிப்படையுமில்லாது எப்படி இவ்வாறு கடிதம் கொடுக்க முடியும் என்பதால் குறித்த இளைஞன் மறுத்து விட, பின்னர் சிறைச்சாலை நிர்வாகம் குறித்த இளைஞனை அவர் புனர்வாழ்வு பெற விரும்புவதாக கடிதம் கொடுக்கும் படி கேட்டதற்கிணங்க இவர் ஒப்புதல் கடிதம் கொடுத்து 1 ½  வருடங்கள் புனர்வாழ்வு பெற்று 2008 இல் கைது செய்யப்பட்ட இவர் 2012 இன் இறுதிப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார்.

நகைப்பிற்குரிய இலங்கையின் நீதித்துறை

•    குறிப்பிட்ட இந்த இளைஞனின் வாக்குமூலத்திலோ வேறு எந்த சாட்சியத்திலோ விடுதலைப்புலிகள் சம்பந்தமாக எதுவுமே இல்லை. இவரை விசாரித்த சகல விசாரணையாளர்களிற்கும் சந்தேகத்திற்கிடமின்றி இந்த விடையம்  நன்கு தெரிந்து இருந்தது.

•    இவரிற்கு எந்த வழக்கும் போட முடியாத நிலையிலும், அவரை நீண்ட காலம் தடுத்து வைத்திருந்தமைக்கு உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாத நிலையிலும் இருந்த TID இவரை புனர்வாழ்விற்கு அனுப்ப முன்வந்திருக்கிறது.

•    மூன்று வயதிலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டில் வசிக்கும் இவர் விடுதலைப்புலிகளை பார்த்ததாக கூட நினைவில்லை என்று சொல்லும் நிலையில், குறிப்பிட்ட இந்த இளைஞனிற்கு  1 ½  வருடங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட கொடூரமும் கேவலமும் இந்த சிங்கள பௌத்த பேரினவாத நீதித்துறையால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

•    எந்தக்குற்றமும் செய்யாத குறிப்பிட்ட இந்த இளைஞனை கைது செய்து மூன்று வருடங்கள் அடைத்து வைத்து விட்டு சரணடைந்ததாக கடிதம் தரும் படி மிரட்டுவது உலகில் வேறு எங்காவது நடக்குமா?

இப்படி ஒழுக்கம் கெட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நீதித்துறையின் கீழ் வாழ்வது எந்த விதத்திலாவது சாத்தியமாகுமா?

இப்படி அநியாயமாக துன்பப்படும் எமது மக்களிற்கு நிரந்தரமாக  நிம்மதியை கொடுப்பதற்கு நாம் துணிந்தெழுந்து மக்கள் சக்தியாக திரண்டு எமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம் என்று உறுதிபூண்டு, காத்திருப்புக்களை கைவிட்டு செயற்பாட்டுத்தளத்தில் இறங்க வேண்டாமா??????

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111298/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.