Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் நிதிய நியதிச் சட்டம் குறித்து ஆளுநருடன் கலந்துரையாட ஆலோசனை முதலமைச்சர் அவைத் தலைவரிடம் தெரிவிப்பு

Featured Replies

5108_content_vikneswaran.jpg

 

வடமாகாண முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்திற்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் வழங்க மறுப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், அரசியலமைப்பிற்கு உட்படும் வகையில் முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ம õற்றியமைப்பது தொடர்பில் ஆளுநருடன் நேரில் கலந்து பேசுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாகாண பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்டதன் பின்னர் நிதி, நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றுச் சட்டம், முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டம் ஆகிய 3 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆளுநரின் சிபார்சுக்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற நியதிச் சட்டங்கள் தொடர்பிலான விசேட அமர்வில் சபையின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து மீண்டும் ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக 3 நியதிச் சட்டங்களும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணாக இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக பேரவைத் தலைவர் நேற்றைய தினம் நடைபெற்ற சபையில் சுட்டிக்காட்டியிருந்ததுடன், ஆளுநரின் கருத்தையும் சபைக்கு கூறியிருந்தார்.

 

மேலும் குறித்த நியதிச்சட்டத்தை அரசியலமைப்பிற்கு உட்பட்டவகையில் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் ஆளுநருக்கு தாம் கடிதம் ஒன்றினை எழுதியிருப்பதாகவும் பேரவைத் தலைவர் சபையில் தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து சபையில் பேசிய முதலமைச்சர் விடயம் தொடர்பாக ஆளுநருடன் தாங்கள் நேரில் கலந்தாலோசிக்கலாம். ஆனால் உத்தியோகபூர்வமாக, அவரிடம் கருத்துக் கேட்பது அவ்வளவு உகந்ததல்ல.

 

ஏனெனில் எங்கள் சட்டத்தை நிராகரித்திருக்கும் ஒருவரிடம் அதனை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என நாங்கள் கேட்பது எங்களை தரக்குறைவாக பார்க்கவைக்கும் செயற்பாடு என நான் கருதுகின்றேன். எனவே நேரில் கலந்து பேசி முடிவுகளை எடுப்பது இந்தக் காலத்திற்குப் பொருத்தமான ஒன்றாக இருக்கும் என முதலமைச்சர் மேலும் கூறினார்

 

. சபைத் தலைவர் அங்கு பேசுகையில்; நான் ஆளுநரை 3 தடவைகள் சந்தித்திருக்கின்றேன். 2 தடவைகள் மாகாண சபையிலும், ஒரு தடவை பொதுச்சேவை ஆணைக்குழுவின் விடயமாகவும் மட்டுமே. ஆனால் என் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் சிலர் பேசுகின்றார்கள். ஆனால் நான் மிக கடும் தேசியவாத நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியிலிருந்து வந்தவன், அந்த நிலைப்பாட்டில் இன்றுவரையில் இருக்கின்றேன். எனவே இந்த விடயம் தொடர்பாக ஆளுநருடன் சந்திக்க வேண்டிய அல்லது பேச வேண்டிய அவசியம் உருவாகுமானால் நிச்சயமாக நான் சந்திக்கிறேன்.

 

அதுவரையில் நான் கடித தொடர்பில் இருக்கிறேன் என பதிலளித்தார்.  இதனையடுத்து பேசிய மாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன், குறித்த முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம், ஒரு மாதகாலத்திற்குள் ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும். ஆனால் ஜனாதிபதி நினைத்தால் அதனை எவ்வளவு காலத்திற்கும் கிடப்பில் போட முடியும்.

 

எனவே நாம் சட்டத்தின் பிரகாரம் முதலமைச்சர் நம்பிக்கை நிதியம் ஒன்றினை உருவாக்கலாம் என்ற யோசனையினை முன்வைத்தார்.  இதற்குப் பதிலளித்த பேரவை தலைவர் இந்த விடயத்தில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகளை வைத்திருக்கின்றோம். அது தொடர்பில் நாம் தீர்க்கமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் எனக் கூறினார்.  இதனையடுத்து நிதி நியதிச் சட்டத்தில் 3 பிரிவுகளில் மாற்றம் செய்யுமாறும், அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் ஆகியவற்றுக்கு தாம் ஒப்புதல் வழங்குவதாகவும் ஆளு நர் தமக்கு கடிதம் எழுதியிருப்பதாக பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

 

அவர் குறிப்பிட்டுள்ள திருத்தமாக அமைச்சர்களினுடைய விதிகள் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என்பதை சட்டத்தில் குறிப்பிடப்படும் என மாற்றுமாறு அமைந்துள்ளது. எனவே அதனை மாற் றுவதில் பெரிய கஸ்டம் இல்லை எனக் கூறினார். இதற்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், சில்லறை மாற்றங்களை செய்வதில் பெரிய கஷ்டம் இல்லை என குறிப்பிட்டார். இதனையடுத்து நிதி நியதிச் சட்டமும் ஆளுநர் குறிப்பிட்ட மாற்றத்துடன் இன்றைய தினமே (நேற்று புதன்கிழமை) ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும் என பேரவைத் தலைவர் தெரிவித்தார்

 

http://thinakkural.lk/article.php?local/bcchxpvisf1585228499b5538278r9zfj10264a8ea0e27b6e7c6ab6erbun#sthash.ezK2mIht.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.