Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வுக்காக பாஜக போராடி வருகிறது: தமிழிசை செளந்தரராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வுக்காக பாஜக போராடி வருகிறது: தமிழிசை செளந்தரராஜன்

 

  • tuttamiesai.jpg

தமிழக மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக  தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். மிரட்டலையும் மீறி 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு அசாதாரணச் சூழல் உருவாகியுள்ளதால் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்து, புதிய தேதி அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளோம். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆனாலும், ஜனநாயகத்தை காக்க தேர்தல் களத்தில் உள்ளோம்.

நிரந்தரத் தீர்வுக்காக... தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சித் தேர்தலில் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், பாஜகவுக்கு மத்தியில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு என்றும் பேசியுள்ளார். இது முற்றிலும் தவறான கருத்து. தமிழக மீனவர் பிரச்சனையில் அவர் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருந்துவிடுகிறார்.

ஆனால், நாங்கள் பாஜக மாநிலப் பொதுச்செயலர் சரவணப்பெருமாள் தலைமையில் ஒரு குழு அமைத்து, மீனவர்களிடம் கருத்துகளைப் பெற்று, அந்த அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அளித்துள்ளோம். அறிக்கையைப்  பெற்றுக்கொண்ட அவர், தமிழக மீனவர் பிரச்னையை நன்கு உணர்ந்திருப்பதாகவும், இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மீனவர்கள் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. மீனவர்  பிரச்னை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் அவரது கருத்து பாஜகவின் கருத்து அல்ல எனத் தெரிவித்தேன்.

பாஜக மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் முதல்வர் பேசி வருகிறார். தேசியக் கட்சி மாநகராட்சியை ஆள வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு? நகராட்சியில் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு தேர்தலை நாங்கள் சந்தித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் ஒதுங்கி இருக்கும் கட்சிகளின் தொண்டர்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.

பேட்டியின்போது, பாஜக மாநிலப் பொதுச்செயலர் சரவணப்பெருமாள், மாவட்டத் தலைவர் கனகராஜ், பொதுச்செயலர் பிரபு, பாஜக மேயர் வேட்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

பிரசாரம்: தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே. ஜெயலட்சுமியை ஆதரித்து தமிழிசை சௌந்தரராஜன் பிரசாரம் மேற்கொண்டார். கிருஷ்ணராஜபுரம், பூபால்ராயபுரம், மட்டக்கடை, 1-ஆம் ரயில்வே கேட் காந்திசிலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்றபடி அவர் பேசியது:

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாகும். மக்கள் வரிப்பணத்தில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. அமைச்சர்கள் நிர்வாகத்தைக் கவனிக்காமல் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுவரை அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்பதால், இந்த முறை பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். அவரை வெற்றி பெறச் செய்தால் முன்மாதிரி மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்கிக் காட்டுவார். 2016ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுவோம். முதல்வர் பதவிக்கே போட்டியிடுவோம் என்றார் அவர்.

http://www.dinamani.com/tamilnadu/2014/09/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/article2433471.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.