Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருகவதையாகிவிட்ட பகிடிவதை

Featured Replies

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு  தெரிவாகும் மாணவர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம் அங்கு புதிதாக அனுமதி பெறும் மாணவர்களை சிரேஷ்ட வகுப்பு மாணவர்கள் பகிடிவதை எனும் பெயரில் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக அனுமதி பெற்ற சில மாணவர்கள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றார்கள்.

 

அந்தவகையில் இன்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் நிலைபற்றி பெற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளனர். இப்பகிடிவதையால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் பெற்றோர்களிடையே தமது பிள்ளைகளின் கல்வியை விட உயிர்தான் மேல் என்ற நிலையில் உயர்கல்வியை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தவகையில் தமது பெண் பிள்ளைகள் மாத்திரமின்றி ஆண் பிள்ளைகளுக்கும் இனிக் கல்வியே வேண்டாமென்ற நிலைக்கு பெற்றோர் மனங்களில்  பல்கலைக்கழக கல்விமேல் வெறுப்பு தூபமிட்டு எரிகின்றது.

 

இதனால் இன்று கல்வி பின்தள்ளப்பட்டே வருகின்றது. எவ்வளவு கஷ்டப்பட்டு  படித்து எதிர்காலக் கனவுடன் பல்கலைக்கழகம் செல்லும் மாணவனுக்கு இரக்கத்தனமற்ற பகிடிவதை, தற்கொலை வரை தூண்டும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியம் இன்னும் நீண்டு கொண்டேதான் செல்கின்றது. இந்த கீழ்த்தரமான பகிடிவதைகள் மாணவர்கள் மத்தியில் இன்று மட்டுமல்ல ஆண்டாண்டு காலமாக நடைபெறுகின்றது. இது எந்த கருமாதி பிடித்தவர்கள் கொண்டுவந்த பழக்கவழக்கமோ தெரியவில்லை.

 

இதை இன்றைய மாணவர்களும்  பகிடிவதை என்னும் பெயரில் அவர்களின் வாழ்க்கையை  சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இம்மிருகத்தனமான பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகமோ அரசாங்கமோ இதுவரை காலமும் எந்தவொரு தடுப்புச் சட்டமும் கொண்டுவரவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகவேயுள்ளது.

 

இதுபோன்ற பகிடிவதைகள் சட்ட ரீதியாகத் தடுக்கப்படவில்லையாயின் இதை மாணவர்களும் ஏன் உணர்ந்து நிறுத்திக்கொள்வதில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது? பல்கலைக்கழக மாணவர்கள்  இப்பகிடிவதைகளினால் தமது கல்வி எதிர்காலத்தை தொலைப்பதோடு மாத்திரமன்றி எதிர்காலத்தில் உருவாகக் கூடிய கல்விமான்களையும்  தொலைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

இப்பகிடிவதை போன்ற செயல்களை அடியோடு நிறுத்தி கல்வி, எதிர்காலம், பெற்றோர்களின் கனவு போன்றவற்றை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும். 

 

http://thinakkural.lk/article.php?article/0xltbprndx137570feb62b693183adhtpf16e0238f741fab228fec2spiiq#sthash.zrUEaGVz.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.