Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமெடியன் ஆன விஜயகாந்த்!

Featured Replies

சோம்பல் முறித்துக் கொண்டிருந்த தமிழக அரசியல் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மதுரை மத்தி இடைத்தேர்தலின் காரணமாக நாலு கால் பாய்ச்சலில் வேகம் எடுக்கத் துவங்கியிருக்கிறது. கலைஞர், அம்மா, விஜயகாந்த் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தங்கள் கழகங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

எந்த அரசியல் கட்சித் தலைவர் என்ன குற்றச்சாட்டை சொன்னாலும் அது தன்னைத் தான் சொல்லுவதாக கூறி ஆவேசப்படுகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தலின் போது "லஞ்சத்தை ஒழிப்பேன்" என்று காட்டுக் கத்தல் கத்தியவரின் குரல் இந்த உள்ளாட்சித் தேர்தலின் போது "கொசுவை ஒழிப்பேன்" என்ற அளவுக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.

தன்னைத் தானே பிரபலப் படுத்திக் கொள்ள "கலைஞர் என்னை திராவிடனா என்று கேட்கிறார்?" என்று குரலெழுப்பி கலைஞரோடு மோதி மீடியாக்களில் கொஞ்சம் பரபரப்பாக அடிப்படலாம் என நினைத்தார். கலைஞரோ "யானை வேட்டைக்கு போகும்போது முயல்களைக் கண்டுகொள்ள வேண்டாம்" என்று கூறி இவரது மூக்கை உடைத்து விட்டார்.

தன்னைப் பெரியத் தலைவராக நினைத்துக் கொண்டு இவராகவே கலைஞர், அம்மா, டாக்டர் அய்யா மற்றும் ஏனையத் தலைவர்களுக்கு சவால் விட்டு வருகிறார். அவர்களோ இவரை கொசு அளவுக்கு கூட மதிக்காமல் இவரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஜெயலலிதா, விஜயகாந்த் என்று ஒருவர் இருப்பதாக கூட காட்டிக் கொள்ள மாட்டேன் என அடம்பிடிக்கிறார்.

திராவிடம் என்றால் வாந்தியெடுக்கும் சில உயர்சாதி மீடியாக்கள் எப்படியாவது இவரை உசுப்பேத்தி, உசுப்பேத்தி திராவிடக் கட்சிகளுக்கு ஆப்பு வைக்க முயற்சிக்கின்றன. ஏற்கனவே வைகோவை இதுமாதிரி உசுப்பேத்தி கடையில் அவரை வின்னர் கைப்புள்ள ரேஞ்சுக்கு இதே மீடியாக்கள் காமெடியனாக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருச்சிக்கு பிரச்சாரத்துக்கு வந்த விஜயகாந்தை ஒரு ஊர் பெயர் தெரியாத அதிமுக தொண்டர் நேருக்கு நேர், ஒண்டிக்கு ஒண்டி வருமாறு சவால் விட்டு விஜயகாந்தை கச்சிதமான காமெடியன் ஆக்கியிருக்கிறார்.

திருச்சி 20வது வார்டு தேமுதிக வேட்பாளருக்கு விஜயகாந்த் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அதிமுக கரைவேட்டி கட்டியிருந்த ரத்தத்தின் ரத்தம் ஒருவர் (கொஞ்சம் மப்பில் இருந்திருப்பார் போல) ஆவேசமடைந்து, "நீ ஒதட்டுக்கு மேல மீசை வெச்ச ஆம்பளையாயிருந்தா, தில் இருந்தா என்னோட ஒத்தைக்கு வாடா" என்று எகிறியிருக்கிறார்.

பதறிப்போன தேமுதிக தொண்டர்கள் அந்த ரத்தத்தின் ரத்தத்தை அலாக்காக தூக்கி அப்புறப்படுத்தியிருக்கிறார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில எதுக்கு சார் அவர் காமெடியன் ஆகனும்? ஏவனோ ஒரு வேலை இல்லாதவன் ஒத்தைக்கு ஒத்தை வா என்ட உடனே இவர் போனா அது யாரைப் பாதிக்கப்போகுது? நீங்க சொல்லுறத பாத்தா அவன் கேட்ட உடனே இவர் அவனோட சண்டைக்கு போகாதது அவரின்ர பிழை என்ட மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலூ எங்கூட ஆட வரியா

  • தொடங்கியவர்

இதில எதுக்கு சார் அவர் காமெடியன் ஆகனும்? ஏவனோ ஒரு வேலை இல்லாதவன் ஒத்தைக்கு ஒத்தை வா என்ட உடனே இவர் போனா அது யாரைப் பாதிக்கப்போகுது? நீங்க சொல்லுறத பாத்தா அவன் கேட்ட உடனே இவர் அவனோட சண்டைக்கு போகாதது அவரின்ர பிழை என்ட மாதிரி இருக்கு.

சார்!

அந்த ஒத்தைக்கு ஒத்தை பார்ட்டிய மொத்தமா தூக்கிட்டு போனதுக்கப்புறமா கேப்டன் கொடுத்தார் பார்த்தீங்களா ஒரு சவுண்டு.... அதுதான் சார் அவரைக் காமெடியனா காட்டுது.... :lol::lol::lol:

அதுவும் இல்லாம இப்போல்லாம் அவரு படங்கள்ல வர்ற ஆக்ஷன் சீனுக்கு ஜனங்க சிரிக்கத் தான் செய்யுறாங்க.... யாரும் த்ரில் ஆவுறதில்லே சார்..... :):lol::lol:

அந்த ஒத்தைக்கு ஒத்தை பார்ட்டிய மொத்தமா தூக்கிட்டு போனதுக்கப்புறமா கேப்டன் கொடுத்தார் பார்த்தீங்களா ஒரு சவுண்டு.... அதுதான் சார் அவரைக் காமெடியனா காட்டுது....

அதுவும் இல்லாட்டி எப்படி நம்ம சில அரசியல் வாதிகள் பற்றி செய்திகள் வரும் கண்டுகாதிங்க :wink:

அந்த ஒத்தைக்கு ஒத்தை பார்ட்டிய மொத்தமா தூக்கிட்டு போனதுக்கப்புறமா கேப்டன் கொடுத்தார் பார்த்தீங்களா ஒரு சவுண்டு.... அதுதான் சார் அவரைக் காமெடியனா காட்டுது....

அதுவும் இல்லாட்டி எப்படி நம்ம சில அரசியல் வாதிகள் பற்றி செய்திகள் வரும் கண்டுகாதிங்க :wink:

தமிழ்நாடு அரசியலே ஒரு காமெடியாகத்தான் போய்கொண்டிருக்கிறது லக்கி அண்ணா. எவர் எவருடன் கூட்டு வைப்பார்கள் என தேர்தல் வரும்வரை தெரியாது. மக்கள் தமிழ்நாட்டை திராவிட கட்சிகள்தான் ஆள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுதான் அங்கு நடக்கிறது. திமுக அதிமுக மதிமுக இவற்றுக்கிடையில் என்ன பெரிய கொள்கை வித்தியாசம்???? ஒன்றும் பெரிதாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கொள்கைகளை விட தலைவர்கள் மீது உள்ள மோகம் அல்லது அதிருப்தி இவையெ தமிழ்நாட்டு ஆட்சியை தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன்.

திருச்சி மாநகர பகுதியில் lic காலனி kkநகர் இவற்றுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் சாத்தனூர் என்ற கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுடன் எங்களுக்கு ஒரு மோதல் உருவானது. எங்கள் நண்பர் ஒருவரை தனியாக ஒரு இடத்தில் பிடித்து தர்மஅடி கொடுத்து விட்டார்கள். உண்மையை சொல்வதானால் என்னொடு இருந்த நண்பர்கள் எல்லாம் ஓடி அல்லது ஒளித்து விட்டனர். அந்த கிராமத்துக்குள் தனியே போறன். இளரத்தம் அண்டைக்கு அந்த கிராம மக்கள் நினைத்திருந்தால் என்னை போட்டு தள்ளியிருக்கலாம். சிவா அண்ணை அந்த கிராமத்து பண்ணையாரின் மகன் திமுக காரர் என்னை காப்பாத்தி கொண்டு போனவர். அண்டையில் இருந்து அந்த கிராம மக்களே எனக்கும் எனது நண்பர்களுக்கும் பாதுகாவலர்களாக நண்பர்களாக இருந்தார்கள். எந்த பொலீஸ் பதிவும் இல்லாமல் 1990 புரட்டாதி முதல் 1992 ஜனவரி வரை இந்தியாவில் இருந்தேன்.இது எந்த கால பகுதி என்று உங்களுக்கு நன்றாக தெரியும். கட்சி பேதம் இல்லாமல் எப்போதும் எனக்கு துணை நிண்றது இந்திய நண்பர்களே.

நான் எனது ஈழ மக்களுக்கு சொல்ல நினைக்கும் அறிவுரை இதுதான். திமுக அதிமுக மதிமுக பாமக எதுவாக இருக்கட்டும் அவர்களுக்கு கட்சி அரசியல். எமக்கு உயிர் போகிற பிரச்சனை. நாங்கள் இதை கையாலும் விதத்தில்தான் இதை சரியாக கொண்டு போகலாம். மக்கள் மனதில் இடம் பெற்று விட்டால் சகல தமிழ்நாடு சார்ந்த கட்சிகளும் எமக்கு துணையாக இருக்கும். முதலில் இந்தியர்களை இழிவாக பேசுவதை நிப்பாட்டுங்கள் அவர்களை இழிவாக நினைப்பதையே முதலில் நிப்பாட்டுங்கள். இந்தியர்களை இழிவாக பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் கருத்துக்களை சிந்தித்து எழுதுங்கள்.

நன்றி.

  • தொடங்கியவர்

நான் எனது ஈழ மக்களுக்கு சொல்ல நினைக்கும் அறிவுரை இதுதான். திமுக அதிமுக மதிமுக பாமக எதுவாக இருக்கட்டும் அவர்களுக்கு கட்சி அரசியல். எமக்கு உயிர் போகிற பிரச்சனை. நாங்கள் இதை கையாலும் விதத்தில்தான் இதை சரியாக கொண்டு போகலாம். மக்கள் மனதில் இடம் பெற்று விட்டால் சகல தமிழ்நாடு சார்ந்த கட்சிகளும் எமக்கு துணையாக இருக்கும். முதலில் இந்தியர்களை இழிவாக பேசுவதை நிப்பாட்டுங்கள் அவர்களை இழிவாக நினைப்பதையே முதலில் நிப்பாட்டுங்கள். இந்தியர்களை இழிவாக பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் கருத்துக்களை சிந்தித்து எழுதுங்கள்.

நன்றி.

நன்றி வாசகன். நான் சொல்ல நினைப்பது இதுவே....

ஈழத்தமிழர்கள் முதலில் தமிழக மக்கள் மனங்களை வெல்லட்டும். (துரதிருஷ்டவசமாக 83-84ல் இருந்த தமிழக மக்களின் மனநிலை இப்போது இல்லை. இதுதான் யதார்த்தம். இதை மறைக்க நினைத்தாலோ மறுக்க நினைத்தாலோ நம்மை நாமே மூடர்களாக்கிக் கொள்கிறோம்) அதன் பின்பு எந்த கொம்பன் நினைத்தாலும் இந்தியாவிலிருந்து ஈழத்துக்கு எதிராக ஒரு துரும்பும் அசைக்க முடியாது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.