Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவிற்கு பிணை கிடைக்குமா? (Special Report)

Featured Replies

ஜெயலலிதா ஜெயராம் இன்று இந்தியாவில் மாத்திரமல்லாது உலகம் முழுவதும் அதிகம் பேசப்படுகின்ற அரசியல் கதாபாத்திரமாக திகழ்கின்றார்.

jaya-.jpg

தமிழக மக்களால் “அம்மா” என்ற அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், பிணையில் விடுதலையாவாரா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் மேலோங்கியுள்ளது.

பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எனினும் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் அவருடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை இன்று ஒத்திவைக்கத் தீர்மானித்தது.

கர்நாடக மாநிலத்தில் தசரா விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறைக்கால விசேட நீதிமன்ற அமர்வில் இந்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ராம் ஜெத்மலானி ஆஜரானார்

ஜெயலலிதா ஜெயராம் சார்பில் சட்டத்துறையில் வெற்றி நடைபோடுகின்ற சிரேஷ்ட சட்டத்தரணிகளான ராம் ஜெத்மலானி, நவனீத கிருஷ்ணன் மற்றும் பி.குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

ராம் ஜெத்மலானி, பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் அரசாங்கத்தில் அரசியல் சட்ட அமைச்சராகவும், சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகவும் பணியாற்றி புகழ்பெற்ற இந்தியாவின் மூத்த சட்டத்தரணிகளில் ஒருவராவார்.

தனது அபார வாதத்திறமையினால் எதிர்வாதிகளை வீழ்த்தும் வல்லமைபெற்ற ராம் ஜெத்மலானி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை  நிறுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சர்ச்சைக்குரிய அப்சல் குரு தூக்குத் தண்டணை இரத்து, நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான் வழக்கு, இந்திரா காந்தி கொலை வழக்கு ஆகியவற்றில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, ராம் ஜெத்மலானி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஜெயலலிதாவின் குற்றமும் தண்டனை

66.3 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துக்களை தவறான முறையில் தன்னகத்தே கொண்டிருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு 1,232 பக்கங்களைக் கொண்டிருந்தது.

இதற்கமைய நான்கு ஆண்டு சிறைதண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் முன்னாள் முதல்வருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடல் நலக் குறைவால் அவதியுறுவதாகவும், பெங்களூர் சிறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கருத்திற்கொண்டும் பிணை வழங்குமாறு தெரிவித்து ஜெயலலிதா ஜெயராம் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிணை மனு விளக்கம்

தமிழக முதல்வராக ஒரு ரூபா சம்பளத்தைப் பெற்றுவந்த தமக்கு நூறு கோடி ரூபா விதிக்கப்பட்டது எந்த வகையில் நியாயமாகும்? இந்தக் கேள்வியை பிணை மனுவில் ஜெயலலிதா தொடுத்துள்ளார்.

1,000 பக்கங்கள் கொண்ட பிணை மனுவில் தமிழகத்திலிருந்து தலைமறைவாகும் என்னமோ, சாட்சியங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நோக்கமே கிடையாது என்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ராம் ஜெத்மலானி, அரச தரப்பு சட்டத்தரணி யார் என்பது கூட இதுவரை உறுதியாகாத நிலையில், ஜெயலலிதா ஜெயராம் சிறையில் இருக்க முடியாது என வாதிட்டார்.

பிணை மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் தற்போதைய முதல்வரும், ஜெயலலிதா ஜெயராமின் நம்பிக்கை வென்ற ஆதரவாளருமான ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு சவால்களை எதிர்நோக்குவார் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழகத்தில் தொடரும் அமைதியின்மை

வழக்கு விசாரணைகள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அடுத்து தமிழகத்தில் மாத்திரமல்லாது  புதுச்சேரியிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளே இதற்கு காரணமாகவும் விளங்குகின்றன.

சிறையில் நான்காவது நாளையும் நகர்த்திவருகின்ற ஜெயலலிதா ஜெயராமை, கட்சி முக்கியஸ்தர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சந்திப்பதற்கு பெரும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒன்றுதிரண்ட தமிழ்த் திரையுலகம்

சிறைச்சாலை வாசலில் பல மணிநேரம் காத்திருந்தும் அனுமதி கிடைக்காத நடிகர் சரத் குமார் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் முன்னாள் முதல்வருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தின் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளையும் சேர்ந்த கலைஞர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் இன்று மெளன உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மீனவர்கள் போராட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சிறைபிடிக்கப்படுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுத்துவந்த ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல்கால வரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் முதல் அதிமுக தலைமையகம் வரை நாளை மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியன் சுவாமியின் கருத்து

இதேவேளை, அரசியல்களத்தில் பல வருடங்களாக ஜெயலலிதா ஜெயராமுக்கு எதிரான நிலைப்பாட்டினை வகித்துவரும் சுப்ரமணியன் சுவாமி, பாரதப் பிரதமர் தெரிவித்ததாக கூறியுள்ள சில கருத்துக்களும் தற்போதைய அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன.

ஜெயலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிடப் போவதில்லை எனவும், வழக்கை சட்டப்படி நடத்துமாறும் பிரதமர் மோடி கூறியதாக, சுப்ரமணியன் சுவாமி தெரிவிக்கின்றார்.

அண்மைக்காலமாக சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக பல அவதூறு வழக்குகளை ஜெயலலிதா தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜெயலலிதா தமிழ்த் திரையுலகை மாத்திரமல்லாது, அரசியல் களத்தை அதிரவைத்த ஒருவராகவே அனைவராலும் அறியப்படுகின்றார்.

அவருக்கு பிணை வழங்கப்படுமா? தண்டனை இடை நிறுத்தப்படுமா? என்றக் கேள்விக்கு இன்னமும் உறுதியான பதிலில்லை. http://www.pathivu.com/news/34226/57/Special-Report/d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.